Friday, November 18, 2011

முன்னாள் காவல் அதிகாரிகளின் மனித நேயம்.

N.K.Velu.(ADSP)





முன்னாள் காவல் அதிகாரிகளின் மனித நேயம்.

முன்னாள் காவல் அதிகாரிகளின் சங்கத்தினர் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்திற்கு முன்பாகவே போர்த்திக் கொள்ள போர்வை இல்லாமல் குளிரில் வாடும் எழிய மக்களின் துயர் போக்கப் போர்வைகள் இலவசமாக அளித்து இன்பம் கண்டு வந்தனர். அதே போல இந்த ஆண்டும் சங்கத்தின் செயலர் திரு என்.கே.வேலு அவர் தனது சொந்தப் பணத்தில் 160 போர்வைகளும், 160 கம்பளிக் குல்லாய்களும் வாங்கி தயராகவைத்து நானும் அவரும் மற்றும் தன் ஆர்வ தொண்டு பணி செய்வோருடன் சில தினங்களுக்கு முன்பு அத்திப் பாளையம் பிரிவை அடுத்த செல்லப்பம்பாளையம் இராமகிருட்டன மடத்தில் உள்ள ஆனாதை சிறுவர்களுக்குப் போர்வையும் குல்லாயும் 60+60 அளித்தோம்.

அதே போன்று (19-11-2011) இன்று கோவை அரசு மருத்துவ மனையில் வார்டுகளில் போர்வையின்றி  இன்னல் படும் ஏழை நோயாழிகளுக்கு செவிலியர்கள் உதவியுடன் 100+100 போர்வைகளும் குல்லாயும் இலவசமாக அளித்தோம். இந்தப் பெருமை மனித நேய அன்பர் திரு வேலு அவர்களையே சாரும். அவருக்கு உதவியாக நாங்கள் சில நண்பர்களும் சென்றிருந்தோம். நண்பர் வக்கீல் உடன் வந்தார்.

அவருக்கு சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெறிவித்துக் கொள்கிறோம்.

தொடரட்டும் அவர் தானமும் நற்பணிகளும். அவர் நீண்ட நாட்கள் தானம் செய்ய இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும்.

------------------------------------------(தொடரும்)



Saturday, November 12, 2011

கோவை மாநகராட்சி வெற்றியும் பணியும்

என்.கே.வேலு. (ADSP) வலது.

                                      --------------------------------------------------(தொடரும்)                          

Tuesday, October 18, 2011

தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல் ஒரு பார்வை---------




                                                                                                            15.10.2011
To 
The Inspector  of Police,
Rathinapuri Police Station,
Coimbatore 641 027

Sir,
      Sub: Civic elections- election campaign-forgery, cheating and impersonation
               Committed- investigation into- requested.
    

                In the process of campaign for the ensuing election of a councilor for the Ward No. 49 in the Coimbatore City Municipal Corporation, pamphlets, purported to have been issued by the Coimbatore district unit of the Anti Corruption Movement have been sent to the voters in the Rathinapuri area by post.  We have enclosed one of them. We are not the authors of the said pamphlet.   Some vested interests are suspected to be responsible for the same. In the publication of the pamphlet, offences of impersonation, forgery and cheating etc. have been committed.   It has affected the image, decency, dignity and reputation of our eleven year old state wide registered organization functioning as a watchdog body against corruption, in the eyes of the public.   Besides, it has adversely affected the reputation of the contesting candidates in the said ward, even affecting their winning chances.
                 
                It is therefore, requested that an immediate investigation is initiated into the fraud, culprits arrested, prosecuted and a fair electioneering is ensured.                

               

                                        Thanking you 

                                          Yours faithfully,


                                          Secretary

Encl: 1. The pamphlet in question
          2. The pamphlet issued by the Coimbatore District Unit of the Anti Corruption
               Movement in connection with the ongoing civic elections                              


Monday, October 3, 2011

ஊழல் ஒழிப்பு





ஊழல் ஒழிப்பைப் பற்றி என்.கே. வேலு ஏ.டி.எஸ்.பி. விளக்குகிறார்

தொடரும்.....

Tuesday, August 30, 2011

ஆர்டர்லி முறைக்கு வேட்டு?


ஆர்டர்லி முறைக்கு வேட்டு வருமா? போலீஸ்சார் கோரிக்கை.

தமிழிக போலீஸ்சில், ஆர்டர்லி முறை ஒழிக்கப் படவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீஸ்சார் பணியில் உள்ளனர். பொது மக்களில் 650 பேருக்கு ஒரு போலீஸ் என்ற நிலை உள்ளது. போலீஸ் நிலையங்களை பொறுத்தவரை, சார்ந்த பகுதி வளர்ந்த பகுதியா, வளரும் பகுதியா என்பதை கணக்கிட்டு,  போலீசாரின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு வேளை அந்த பகுதி வளர்ந்து  கொண்டிருந்தால் குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு நிர்ணிக்கப்பட்ட போலீஸ்சாரின் எண்ணிக்கை என்பது பெரும்பாலான நேரங்களில் போலீஸ் நிலையங்களில் இருப்பதில்லை.

ஆண்டு தோறும் ஓய்வு பெறும் போலீஸ்சார் எண்ணிக்கை உயர்வதும்,  ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள்,  பணியில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக போலீஸ்சார் பணியாற்று வருவதும் இதற்கு காரணமாக் கூறப்படுகிறது. கடந்தமாதம் வரை, சென்னை போலீஸ்சில் 1800 போலீஸ், 330 எஸ்.ஐ., பணியிடங்கள் காலியாக இருந்தன, சமீபத்தில், பயிற்சி முடித்த 8000 க்கும் மேற்பட்ட போலீசார், உள்ளூர், ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புப்போலீசில் பணயமர்த்தப்பட்டனர். மேலும் ஆயுதப்படையில் இருந்த போலீசார் போலீஸ் பணியிடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

சென்னையில் மட்டுமல்லாது, அனைத் மாநகர்களிலும், மாவட்டங்களிலும், இருந்த பெரும்பான்மை போலீஸ் காலிப்பணியிடங்கள் நிரப்ப பட்டுள்ளது. அவர்களில் குறிப்பிட்ட அளவில் ஆர்டர்லிகள் இருப்பதால், அவர்களி போலீஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டாலும், அங்கு பணியாற்றாமல் அதிகாரிகளின் வீட்டிற்கே திரும்பவும் அழைக்கப்படுகின்றனர்.  இதனால், கைக்கு எட்டியது வாயிக்கு எட்டாத நாலையில் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தவிக்கின்றனர்.

ஆனால், பல போலீஸ் நிலையங்களில் போலீசார், ஆர்டர்லிகளாக பணியாற்ற சென்று விடுவதால், போலீஸ் பற்றாக்குறை ஏற்படுவதுடன், பணிச்சுமையும் அதிகரிக்கிறது.  குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வேலை, மற்ற நேரத்தில் ஓய்வு, உரிய நேரத்தில் ரிவார்டு மற்றும்  புரமோசன் கிடைப்பதால் சிலர் அந்த வேலையை மட்டும் பார்த்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பயிற்சி முடிந்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் அல்லது ஆயுதப்படையில் பணியாற்றும் போதே சிலர் ஆர்டர்லிகளாக தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வகையில், தமிழ் நாடு சிறப்பு போலீசில் மட்டும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆர்டர்லிகளாக பணியாற்றி வருகின்றனர் என்பதும் கூடுதல் தகவல். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சிகாலம் தொட்டு, இன்று வரை இம்முறை ஒழிக்கப்படாமலேயே தொடர்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிப்ப
தாகக்கூறும் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிலாவது இந்த ஆர்டர்லிக்கள் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும், அல்லது இம்முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்படும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 
---------------------------------------------------------------------(தொடரும்)
நன்றி-தினமலர்.

Friday, August 26, 2011

யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு பாட த்தை தேர்வு செய்தல்.


யுனியன் பப்ளிக்   சர்வீஸ் கமிசம் எனப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத  பாடத்தை தேர்வு செய்வதில் பல்வேறு குழப்பங்கள் மாணவர்களிடையே நிலவுகிறது. இந்திய  ஆட்சிப்பணி உள்ளிட்ட,  முதன்மையான பல அரசுப்பணிகளில் சேர்ந்து பணியாற்ற சிவில் சர்வீஸ் தேர்வு பயன் படுகிறது. இந்த தேர்வை எழுத அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில்  ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை எழுத குறிப்பிடப்பட்ட ஏதாவது ஒரு முதன்மை பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். இதில் மாணவர்கள்  தங்களுக்கு பரிச்சையமான  மற்றும்  பாடத்தை தேர்வு செய்தால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும்.

பொதுவாக மாணவர்கள் வரலா று, சமூகவியல் மற்றும் அரசியல் அறிவியல் தொடர்பான பாடங்கள் தேர்வு செய்தால் எளிதாக சாதிக்கலாம் என நினைக்கின்றனர்.  இது சரியான கருத்து அல்ல.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஏதாவது இரு பாடப்பிரிவில் ஆழ்ந்த அறிவு இருந்தால் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வில் சாதிக்க முடியும். பட்டப்படிப்பில் வரலாறு, பொருளாதாரம் படித்திருந்தால் அந்த பாடங்களைத்தான் ஆழ்ந்து தெரிந்திருக்க முடியும். அதனால் அதையே தேர்வு செய்யலாம். மாறாக அறிவியல் பாடங்களை தேர்வு செய்யக் கூடாது.

 சிவில் சர்வீஸ் தேர்வு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று கட்டமாக நடைபெறுகிறது. முதன்னிலைத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாத த்தில் நடைபெறும்.  இதற்கு குறிப்பிடப்பட்ட 22 பாடப்பிரிவுகளில் இருந்து ஏதாவது இரண்டு பாடங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும். முதனிலைத்தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதிலும் இரண்டு பாடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

முதன்மைத்தேர்வில் எட்டுத் தாள்கள் இருக்கும்.  இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.  முதன்மைத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுகின்றனர். ஆனால் 700 முதல் 800 பேர்களே தெர்வு செய்யப்படுகின்றனர். மேலும் சிவில் சர்வீஸ் தேர்வின் விபரங்களை  www.upsc.gov.in  என்ற மத்திய அரசின் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

---------------------------------------------------------------------(தொடரும்)

Monday, August 8, 2011

ஊழலுக்கு எதிர்ப்பு.




அன்றும் இன்றும் லஞ்ச ஒழிப்பில் என்.கே.வேலு ADSP அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு.

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வரும் 16 ம் தேதி கோவையில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில், உண்ணாவிரதம் நடக்கிறது.

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயலாளர் வேலு அறிக்கை:

ஆயிரமாயிரம் சத்தியம் செய்து ஓட்டு வாங்கி பதவியைப் பிடிக்கும் அரசியல்வாதிகள், உலகமகா ஊழல்களை புரிந்து கோடிக்கணக்கில் சொத்துக்களை குவிக்கின்றனர். தலைமைப்பதவி வகிப்போர் தட்டிக் கேட்கும் திறனற்றவர்களாக  உள்ளனர். விளைவு, ஓட்டளித்த மக்கள் ஏமாளிகளாக மாறும் நிலை, அரசு நிர்வாகம் மோசமாகி வருவதால், இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப் படுகின்றன.

எனவே, ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் ஊழலில் ஈடுபட்டால் கடுமையாக தண்டிக்கும் வகையில், வலுவான ஜன்லோக்பால் சட்டம் தேவை. இதை வலியுறுத்தி,  காந்தியவாதி அன்னா ஹசாரே மற்றும் குழுவினர் வரும் 
16 ம் தேதி டில்லியில் உண்ணாவிருதம் இருக்க முடிவு செய்துள்ளனர். அவரது கோரிக்கைக்கு வலிமை சேர்க்கும் விதமாக, அன்றைய தினம் கோவை, காந்தி புரத்தில்  உண்ணாவிரதம் இருக்க ஊழல் எதிர்ப்பு இயக்கம் தீர்மானித்துள்ளது.

அரசியல் சாராத பொதுநல அமைப்புகள், தொழில் அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கங்கள், கல்லூரி மாணவர் அமைப்புகள் உள்ளிட்டோர் தவறாமல் பங்கேற்க வேண்டும். இந்த உண்ணா
விரதத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் வரும் 13 ம் தேதி மாலை 4.00 மணியளவில் திருச்சி சாலை, அல்வேர்னியா பள்ளி எதிரிலுள்ள எஸ்.என்., அரங்கத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது. அனைத்து அமைப்புகளும், மக்களும் பங்கேற்று ஆலோசனை தெரிவிக்கலாம். விபரங்களுக்கு, 98422 11993, 9789777199, 94435 78224 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 ----------------------------------------------------------------------------------------(தொடரும்)


Monday, July 11, 2011

பாராட்டு விழா.


முன்நாள் காவல் அதிகாரிகளின் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் பரமேஸ்வரனின் பேத்தி குமாரி HERSHA KUMAR துபாயில் Cresent English Metriculation School ல் 10 வது வகுப்பில் பள்ளியில் முதலாவதாக வந்தமைக்காகச் சங்கத்தின் சார்பில்  9-7-2011 அன்று ஹேமில்டன் போலீஸ் கிளப்பில் நடந்த குழுகூட்டத்தில் வெகுமதி அளித்துப் பாராட்டப் பட்டது 

Thursday, June 16, 2011

நேர்மையான D.S.P. (KKM)


பெயர்;முத்துசாமி

பதவி;டி.எஸ்.பி (தற்போது ஓய்வு பெற்ற ADSP)
பணி புரிந்த ஊர்;பழனி,கோவை
வருடம்-1985-90

அதிரடி என்ன..?

சம்பவம்;1;

சாராயம் காய்ச்சுபவர்கள்,பிக்பாக்கெட்,ரவுடிகள் போன்றோரை கைது செய்தவுடன் அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் இவர் போடுவதில்லை.அடித்துக்கொண்டே இருப்பார்....நேரம் கிடைக்கும் போதெல்லாம் லாக்கப்பில் வைத்து உதைப்பார்.இது ஒரு வாரம் வரை தொடரும் ..அதன்பின் அவர்களை விட்டுவிடுவார்...அதன் பின் அவர்கள் அந்த தொழிலையே நினைத்து பார்க்க மாட்டார்கள்..அப்படி ஒரு அடி.


சம்பவம்;2;
இரவில் கும்பலாக சீட்டு விளையாடுபவர்களை பார்த்தால் ரோந்து போகும் இவர் ஜீப்பை நிறுத்தி..என்னப்பா செய்றீங்க..?என்பார்...சார் தூக்கம் வரலை..அதான் சீட்டு விளையாடுறோம் என்பார்கள்...அப்படியா எனக்கும் தூக்கம் வரலை..ஜீபுல ஏறுங்க..அப்படியே சிறுவாணி அணை வரை போவோம் என்பார்...வண்டியில் அவர்களை ஏற்றிக்கொண்டு...15 கிலோ மீட்டர் சென்றதும்..கிலோ மீட்டருக்கு ஒரு ஆளாக இறக்கி விடுவார்..இப்படியே நடந்து வாங்கடா...பொழுது போகும் என்பார்...

சம்பவம்;3;

பழைய மில்கள் முதலாளிகளை மிரட்டி,பெரிய பணக்கார மில் முதலாளிகள் கையெழுத்து வாங்கி அடிமாட்டு விலைக்கு மில்லை தன் பெயருக்கு மாற்றும் வேலைகள் கோவை,பழனி பகுதிகளில் அதிகம் நடந்தன....பெரிய பிரபல முதலாளியாக இருந்தாலும் ,பிக்பாக்கெட்டாக இருந்தாலும் வழக்கு போடமாட்டேன்...லாக்கப்பில் வைத்து ஒரு வாரம் உதைத்து அடித்து தோலை உறித்து அனுப்புவேன்..வேறு யாராவது பணத்துக்கு பல் இளிக்கும் போலீஸ்காரன் வந்தால் உங்கள் வேலையை காட்டுங்கள் என்று பகிரங்கமாக இவர் எச்சரித்ததால்,பல,மோசமான முதலாளிகள்,பிரபல பணக்காரர்கள் கொங்கு மண்டலத்தில் நடுங்கி கொண்டிருந்தார்கள்...

சம்பவம் 4;

இரவு 11 மணிக்கு இரண்டு பெண்கள் மோசமான ஏரியாவில் நடந்து போய் கொண்டிருக்க,,என்னம்மா இந்த நேரத்துல யாரு நீங்க..என கேட்க..பக்கத்து ஹவுசிங் உணிட்ல இருக்கோம்...படத்துக்கு போயிட்டு வர்றோம் சார் என்றிருக்கிறார்கள்..அப்படியா இந்த டார்ச்லைட்டை எடுத்துகிட்டு போங்க..என்றிருக்கிறார்..காலையில் அவர்களின் கணவன்மார்கள் டார்ச்லைட்டுடன் வந்து நன்றி சொல்ல,இரண்டு மணிநேரம் அடி பின்னிவிட்டு,பொம்பளைங்களை படத்து தனியா அனுப்பிட்டு நீங்க..எங்கடா..கூத்தடிக்க போனீங்க..அவங்க..செயிஉனையோ..கற்பையோ பறிகொடுத்தா நாங்க ஜீப்பை எடுத்துகிட்டு...எவனை தேடுறது என பின்னி எடுத்திருக்கிறார்..

சம்பவம்;5;

மார்க்கெட்டில் காய்கறி வாங்க..அவர் மனைவி...ஜீப்பை எடுத்துக்கொண்டு வர,அதை கண்டதும் தன் புல்லட்டில் போய் டிரைவரிடம் இந்த புல்லட்டை ஸ்டேசனுக்கு எடுத்துகிட்டு போ...நான் மேடத்தை வீட்ல விட்டுடறேன் என சொல்லியிருக்கிறார்...டிரைவர் போனதும்,இவர் ஜீப்பை எடுத்துக்கொண்டு ரோந்துக்கு போய்விட்டார்..அவர் மனைவி..காய்கறி கூடையுடன் டவுன்பஸ் ஏறி சென்றிருக்கிறார்.

என்ன இந்த சம்பவம் எல்லாம் ஏதோ..படத்துல வர்ற மாதிரி இருக்கேன்னு பார்க்கறீங்களா..இவர் கதையைத்தான் சாமி படமாக எடுத்தார் இயக்குனர் ஹரி.
----------------------------------------------------------------------(தொடரும்)
"நல்ல நேரம்" வலைப்பதிவுக்கு நன்றி.

இந்தியன் தாத்தா!

Tuesday, June 14, 2011

வெண்டும் இன்னொரு விடுதலை.



இன்று, இந்தியா ஒரு சுதந்திர நாடு, ‘பரந்து விரிந்து கிடந்த எங்கள் சாம்ராஜ்யத்தில், சூரியன் அஸ்தமிப்பதே இல்லை’ என, சூளுரைத்த பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து, நம் நாட்டை மீட்டெடுக்க நடந்தது சுதந்திரப்போர். 200 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த அப்போராட்டத்தில், எத்தனை வன்முறைகள். அடக்கு முறைகள், வேதனைகள்.

கோடிக்கணக்கான தேசபக்கதர்களின் வளமிகு வாழ்வு, தொழில், கல்வி, சொத்து, சொந்த பந்தங்கள், மணவாழ்க்கை, உடல்நலம், உடல் உறுப்புகள் என, இழப்பு ஏற்பட்டதோடு, நேசித்த மண்ணிற்காக இழக்கப்பட்ட இன்னுயிர்களும் பல்லாயிரம்.

‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரை கண்ணீரால் காத்தோம்;’ என மனமுருகிப் பாடினார் பாரதியார்.
இத்தனை தியாகங்களையும் காணிக்கையாக்கி, காந்தியின் ஒப்பற்ற தலைமையில் பெற்றெடுத்த நம் சுதந்திர தேசத்தின் அன்றைய நிலை, ‘மன்னன் எவ்வழியோ, அவ்வழி குடிமக்கள்’ எனும் வாக்கின் படி, ராஜாஜி, சர்தார் வல்லவாய் படேல், காமராஜர், நேரு, சி.சுப்ரமணியம் போன்ற உத்தம தேச பக்தர்கள், ஆட்சிப்பொருப்பில் இருந்தனர்.

நாடு பிரமிக்கத்தக்க முன்னேற்றங்களை அடைந்து, உன்னத நிலையில் இருந்தது. அனால் இன்று? மீண்டும் கண்ணீர் தான்.  வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்ற, நம் இந்தியத்தாய்த் திருநாடு, ஊளல் கொள்ளையர்களிடம் இன்று அடிமைப்பட்டு, சிக்கிச் சீரழிந்து, சித்திரவதைப்பட்டு, சிதிலமடைந்து கொண்டிருக்கிறது.

கணக்கிட முடியாக் காடுகள், கனிம வழங்கள், கடல் பகுதி செல்வங்கள், மண், மண்ணுக்கடியில் மலையென மடிந்து கிடக்கும் மாபெரும் தாது பொக்கிஷங்கள், ஆறுகள், ஆற்றுப்படுகைகளில் மண்டிக் கிடக்கும் மணல் மலைகள், நிலத்தடிநீர் என, அத்தனையும் நம் கண்முன்னால், அன்றாடம் இறவு, பகலாக பகிரங்கமாகக் கொள்ளை அடிக்கப்படுகின்றன, வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன.

அமோகமாக நடந்து வரும் இந்த அக்கிரமங்கள் எதையும், இதுவரை ஆட்சியில் அமர்த்தப்பட்ட, எந்த அரசியல் கட்சியும் தடுத்து நிறுத்தவில்லை.

‘ஸ்பெக்ட்ரம், எஸ் பேண்டு’ போன்ற விலைமதிப்பற்ற, விஞ்ஞான சாதனங்கள் அத்தனையும், நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்கும் அரசியல் வாதிகள் மற்றும் நம் நாட்டின் மாபெரும் முதலாளிகளின் விற்பனைப் பொருட்களாகி விட்டன.

நாட்டின் நிர்வாகம் நாசமாகிக் கொண்டிருக்கிறது. மாதம் தவராமல் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும், அரசு ஊழியர்களில், 90 சதவீதத்திற்கு மேல், தங்கள் கடமைகளில் முறை தவறி, அதர்ம அரசியல் வாதிகளின் அடிமைகளாகி, ஆதாயம் தேடும் அவலத்திற்கு அளாகிவிட்டனர்.

நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்படும் அரசியல் வாதிகளில், ஆங்காங்கே சில விதிவிலக்குகள் தவிர, அனேகமாய் எல்லாருமே, முழுக்க, முழுக்க சுயநலக்காரர்கள் தான். தன் குடும்பம், மனைவிகள், துணவிகள், பிள்ளை குட்டிகள், பேரன், பேத்திகள், உடன் பிறப்புக்கள், உடன் பிறவாததுகள் என, அவர்களுக்காகவே அல்லும் பகலும் உழைக்கின்றனர்.

பல லட்சம் கோடி அளவிலான பதுக்கல் பணத்தைப் பற்றித் தகவல் கேட்டு, பல காலம் மன்றாடியும், இன்று வரை எந்த அரசும், மசிந்து கொடுக்க வில்லை.  பதவியேற்ற, 100 நாட்களில், பதுக்கல் பணம் அனைத்தையும் வெளிக்கொண்டு வந்து விடுவதாக, ஓட்டளித்த நாட்டு மக்களுக்கு உத்தரவாதம் கொடுத்த இன்றைய அரசு, இப்போது அதை வெளியிட மறுக்கிறது.

காரணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கு வைக்கப்பட்டுள்ள பணத்தின் பெரும் பகுதி, இன்றைய ஆட்சியாளர்களின் முக்கியமான சிலருக்கும் மற்றும் அவர்களுடைய தோழமை தொழிலதிபர்களுக்கும் சொந்தமானமு என்பது, ஓட்டளித்து ஏமாந்த மக்களின் யூகம்.

மாறிமாறி ஆட்சிக்கு வரும் அரசியல் வாதிகள், ஆயிரத்திற்கும் குறைவான மாபெரும் தொழிலதிபர்களின் கைப்பாவையாகிவிட்டனர். தங்களில் யார் யாருக்கு அமைச்சர் பதவிகள் என்பதில், இந்தியாவின் முன்னோடி கூட்டுக் குழு மக்களைச் சார்ந்த சில சிங்காரிகளை நேசித்தும், யாசித்தும் பெற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவது, நம் நாட்டின் பரிதாப நிலை.

‘பேய் அரசு செய்தால், பிணத்தின்னும் சாத்திரங்கள்’ என சொன்னார் பாரதி. ஆட்சியாளர்களாலும், அவர்களின் ஆசி பெற்றவர்களாலும், அன்றாடம் நடத்தப்படும், மேற்கண்ட அபரிமிதக் கொள்ளைகளால், இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது.

ஒட்டுமொத்த நாட்டின் நிர்வாகம், சீர்செய்ய முடியாத அளவிற்கு சிதைந்து விட்டது. உண்மையில் உழைக்கும் பெரும்பான்மை மக்கள், உருக்குலைந்து விட்டனர்.

ஊரைக் கொள்ளை அடிக்கும் உன்மந்தர்கள்,உலகப் பணக்காரர் களாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த அவலங்களையெல்லாம், தட்டிக் கேட்க வேண்டிய நீதித்துறையும், மெல்ல, மெல்ல களங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், நீதித்துறையில் இன்னும் நீடித்திருக்கும், சில நெஞ்சுரமிக்க நீதி வழுவா உத்தம சத்திய சீலர்களால், நீதிதேவன் இன்னும் நிலை குலையவில்லை

உதாரணம்,சுப்ரீம் கோர்ட் மட்டும் இல்லையேல் உலக மகா மோசடியான ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கு, ஆழ்கடலில் அமுக்கப்பட்டு, அழிக்கப்பட்டிருக்கும். இன்று சிறைக்குள் இருக்கும், இந்தாஇயவின் ஈடு இணையற்ற வரிமோசடிப் பேர்வழி அசன் அலி கான், சுதந்திரமாகப் பறந்து கொண்டிருப்பான். சரித்திரம் காணா, சத்யம் மோசடி சத்தமின்றி முடிந்திருக்கும்.

இத்தனை அவலங்களுக்கும் ஒரே காரணம் , ஊளல் அதாவது, லஞ்சம், அதிகார துஸ்பிரயோகம், அக்கிரமச் சொத்து சேர்ப்பு.

ஊளல், சட்டப்படி ஒரு கிரிமினல் குற்றம். அதைச் செய்பவன் ஒரு கிரிமினல் குற்றவாளி, அவன் அரசு ஊழியன் ஆனாலும் சரி, அரசியல்வாதியானாலும் சரி… கூசாமல் சொன்னால், அவன் ஒரு கிரிமினல். திருடியவனை, திருடியவுடனே திருடன் என்று தான் சொல்கிறோம். தீர்ப்புக்காக காத்திருப்பதில்லை.

நாட்டின் நிர்வாகம், 90 சதவிகிதத்திற்கும் மேலான கிருமினல்களால் நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் நாட்டின் ஒட்டுமொத்த ஜனத்தொகியில், 5 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள். இது தான் இன்றைய யதார்த்த நிலை.

இந்நிலை நீடித்தால், கொள்ளையர்களுக்கு அடிமைப் பட்டு விட்ட இந்தியா, தேசப் பற்றற்ற ஊழல் அரசியல் வாதிகளால் அன்னியர்களுக்கு விற்கப்பட்டால் ஆச்சரியப் படுவதற்கில்லை. இந்திய மண்ணில் எங்கோ ஒரு மூலையில், ஒரு தேவதை போல் உதயம் ஆகி, ஊழலை ஒழிக்க அறைகூவல் விடுக்கும் அற்புத தேசபக்தர் அன்னா ஹசாரேவுடைய அகிம்சைப் படையில் அணி திரள்வோம்.

அவருடைய சத்தியாகிரகப் போராட்டத்திற்கு எதிராக, சண்டாள, சதிகார, நயவஞ்சக அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப் படும் அநியாயத் தடைகள் அத்தனையும் தகர்தெறிவோம். அவருடைய ஊழலை எதிர்க்கும்  இந்திய அமைப்பின் கீழ் ஒருங்கிணைவோம்.

வரவிருக்கும் லோக்பால் சட்டத்தில், ஊழல் குற்றம் புறிந்து பெற்ற தாயினும் மேலான, பிறந்த தாய்நாட்டைச் சூறையாடி, சுடுகாடாக்கிக் கொண்டிருக்கும் அராஜக அரசியல்வாதிகளுக்கும், அவர்களுக்கு அடியாட்களாகி, அவர்களுடைய பகல் கொள்ளையில் பங்காற்றிப் பங்கு பெறும் அரசு அலுவலர்களுக்கும், மரண தண்டனை வழங்கும் சட்டப் பிரிவை சேர்க்க, மற்றாடி வேண்டிடுவோம்.

இது, ஊழல் அரக்கனிடமிருந்து தாய் நாட்டை மீட்கும், இரண்டாவது சுதந்திரப்போர்.


(தொடரும்)