Sunday, July 19, 2009

கேட்டகிரி 3ல் பதவி உயர்வு புலம்பல்.


கானல் நீராகும் பதவி உயர்வு தமிழக சிறப்பு போலீஸ் பரிதவிப்பு.

தமிழக சிறப்பு போலீசாருக்கு மட்டும் பதவி உயர்வு கானல் நீராக மாறி வருவதால், பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வு பெற்று விடுகின்றனர்.

தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் பணியில் இருக்கும் இன்ஸ்பெக்டர்கள், எவ்வித தண்டனையும் இன்றி ஐந்தாண்டுகள் பணியாற்றினால் ஏ.சி.., யாக பதவி உயர்வு பெறலாம். ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் தேதி அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு, பதவி உயர்வின் அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படும்.

தமிழக சிறப்பு போலீஸ் படையில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு, அனைத்து தகுதிகள் இருந்தும், நான்காண்டுகளாக பதவி உயர்வு கிடைக்க வில்லை. பதவி உயர்வு பலனின்றி, பலரும் ஓய்வு பெறுகின்றனர்.

ஆண்டு தோறும் பட்டியல் செல்கிறதே தவிர, பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை, டி.ஜி.பி., ஐ.ஜி., அலுவகங்கள் மற்றும் தலைமைச் செயலகம் என, கோப்புகள் மாறிச்சென்றும், பலனில்லை. இதுவே மற்ற பிரிவுகளில் ஏ.சி., ஏ.டி.எஸ்.பி., என, பல்வேறு பதவி உயர்வுகள் வழங்கப்படுகிறது.

தமிழக போலீஸில் உள்ளூர் போலீஸ் (பிரிவு-1), மாவட்ட ஆயுதப்படை (2), மற்றும் சிறப்புக் காவல் படை (3), இயங்கி வருகிறது. முதல் இரண்டு பிரிவில் எப்போதாவது சில நேரங்களில் தண்டனைக்குள்ளான டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி பதவியில் உள்ளவர்கள், மூன்றாவது பிரிவான சிறப்பு காவல் படைக்கு இடமாற்றம் செய்யப் படுவதால், இங்குள்ளவர்கள் பதவி உயர்வு வாய்ப்பு கிடைக்காமலேயே ஓய்வு பெறுகின்றனர்.

தமிழ்நாடு சிறப்புக் காவல் அணியில் நீண்ட காலமாக ஏ.சி., பணியிடங்கள் இல்லாமலேயே நிர்வாகம் நடந்து வருகிறது. கடைசியாக 24 பேர் தகுதியிருந்தும், தலைமைச் செயலகம் வரைகோப்புகள் சென்றும் பதவி உயர்வு கிடைக்க வில்லை.

இது குறித்து போலீஸ் துறையைச் சேர்ந்த அதிகாரி கூறியதாவது:

தமிழக சிறப்புக்காவல் படையில் ஏராளமான காலிப் பணியிடங்கள், இருந்தும் தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வில்லை. தி.மு.க., ஆட்சி போலீசாருக்கு பொற்காலம் என்று சொல்வதுண்டு. தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

தமிழக சிறப்புக் காவல் படையில் சேர, 1980ல், எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்.

தற்போது எஸ்.எஸ்.எல்.சி., தேறாதவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் ஓய்வு பெறும் தருவாயில் உள்ளனர். சிறப்பாக சேவை புரிந்த இவர்களுக்குபதவி உயர்வு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

(நன்றி தின மலர்.)

---------------------------------------------(தொடரும்)

Thursday, July 16, 2009

சாதனைமேல் சாதனை கோவையில்!


கோவை மாநகரப் போலீஸ் கமிஷனர் திரு.பி.சிவனாண்டி ஐ.பி.எஸ்., அவர்கள் கோவை மாநகரில் உள்ள 15 காவல் நிலையங்கள் அவர்களது ஏரியாவில் ஏழையாக உள்ள 5 வது படிக்கும் மாணவ, மாணவிகளை ஒவ்வொரு காவல் நிலையமும் இரண்டு பேருக்குக் குறையாமல் தத்தெடுத்து அவர்களது கல்லூரிப்படிப்பு முடியும் வரை தொண்டு நிறுவனங்கள் மூலம் கல்வி உதவித் தொகை அளித்து பட்டதாரிகள் ஆக்க வேண்டும் என்று செயல் படுத்தியுள்ளார். அதற்காக நடைபெற்ற விழா ஒன்றில் 15-7-2009 அன்று ரூ.2.42 லட்சம், 36 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார். இந்த கல்வி உதவித் தொகை தன்னார்வம் கொண்டவர்களும், தொண்டு நிறுவனங்கள் மூலமும் பெற்று முறைப்படி கணக்கு வைத்துப் பராமறிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இவ்வாறு உதவி செய்யும் போது பொது மக்களுக்கும் காவல் துறைக்கும் உள்ள உரவு பன் மடங்கு அதிகரிக்கும் என்றார். கோவை மாநகரில் ஐ.ஜி அவர்களின் சாதனைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. இவை காவல் துறையில் மறுமலர்ச்சிதானே!


---------------------------------------------(தொடரும்)

Tuesday, July 7, 2009

‘மக்களைத் தேடி’ கோவை மாநகரிலும் தொடருமா?


கோவை சரகத்தில் புதுமையை ஏற்படுத்திய டி.ஐ.ஜி., திரு.சிவனாண்டி, ஐ.பி.எஸ்., அவர்கள் ஐ.ஜி யாகப் பதவி உயர்வு பெற்று 6-7-2009 அன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்று அளித்த பேட்டி:-

“மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனடியாக தீர்வு காணப்படும். நகரில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க இரவு பகல் பாராமல் போலீசார் முழு வீச்சில் செயல்பட, போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். புகார் மனுக்களுடன் போலீஸ் ஸ்டேசனுக்கு வரும் பொதுமக்களை, போலீசார் உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும், குற்றகளை கேட்டு உடனடியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும்.

போலீஸ் ஸ்டேசனில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை யெனில், உதவி கமிஷனர், துணைக் கமிஷனரிடம், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இதற்கும் நடவடிக்கை இல்லையெனில், என்னை தொடர்பு கொள்ளலாம், சம்பத்தப் பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார்தாரரின் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படும். மேலும், புறநகரில் செயல் பட்டு வந்த ‘வீடு தேடி எப்.ஐ.ஆர்., வழங்கும் பணி’ நகரிலும் அமல்படுத்தப்படும்.

மாநகர போலீஸ் எல்லையின் சுற்றளவு 10 கி.மீ.,ருக்குள் தான் உள்ளது, இதில், 15 ஸ்டேசன்கள் செயல் படுகின்றன. எனவே, இத்திட்டத்தின் மூலம் அதிக பட்சமாக 30 நிமிடங்களில் புகார்தாரரின் வீட்டுக்குச் சென்று எப்.ஐ.ஆர். நகல் தர முடியும். இத்திட்டம் உடனடியாக செயல் பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

நகரில் நாள்தோரும் நடக்கும் விபத்துக்களை குறைக்க போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்படும், கூடுதல் போலீசார் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவர். இருப்பினும், பொதுமக்களும் சாலை விதிகளை கடைபிடித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். பொதுமக்களின் குறைகளைக் கேட்க, 15 நாட்களுக்கு ஒரு முறை கமிஷனர் அலுவலகத்தில் குறை கேட்கும் முகாம் நடத்தப்படும். இம்முகாமில், பங்கேற்கும் பொது மக்கள் தாங்கள் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து நேரில் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்க போலிஸ்சார் தயக்கம் காட்டியதாகவோ அல்லது தட்டிக்கழித்த தாகவோ தெரிந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

---------------------------------------------(தொடரும்)