Tuesday, August 30, 2011

ஆர்டர்லி முறைக்கு வேட்டு?


ஆர்டர்லி முறைக்கு வேட்டு வருமா? போலீஸ்சார் கோரிக்கை.

தமிழிக போலீஸ்சில், ஆர்டர்லி முறை ஒழிக்கப் படவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீஸ்சார் பணியில் உள்ளனர். பொது மக்களில் 650 பேருக்கு ஒரு போலீஸ் என்ற நிலை உள்ளது. போலீஸ் நிலையங்களை பொறுத்தவரை, சார்ந்த பகுதி வளர்ந்த பகுதியா, வளரும் பகுதியா என்பதை கணக்கிட்டு,  போலீசாரின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு வேளை அந்த பகுதி வளர்ந்து  கொண்டிருந்தால் குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு நிர்ணிக்கப்பட்ட போலீஸ்சாரின் எண்ணிக்கை என்பது பெரும்பாலான நேரங்களில் போலீஸ் நிலையங்களில் இருப்பதில்லை.

ஆண்டு தோறும் ஓய்வு பெறும் போலீஸ்சார் எண்ணிக்கை உயர்வதும்,  ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள்,  பணியில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக போலீஸ்சார் பணியாற்று வருவதும் இதற்கு காரணமாக் கூறப்படுகிறது. கடந்தமாதம் வரை, சென்னை போலீஸ்சில் 1800 போலீஸ், 330 எஸ்.ஐ., பணியிடங்கள் காலியாக இருந்தன, சமீபத்தில், பயிற்சி முடித்த 8000 க்கும் மேற்பட்ட போலீசார், உள்ளூர், ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புப்போலீசில் பணயமர்த்தப்பட்டனர். மேலும் ஆயுதப்படையில் இருந்த போலீசார் போலீஸ் பணியிடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

சென்னையில் மட்டுமல்லாது, அனைத் மாநகர்களிலும், மாவட்டங்களிலும், இருந்த பெரும்பான்மை போலீஸ் காலிப்பணியிடங்கள் நிரப்ப பட்டுள்ளது. அவர்களில் குறிப்பிட்ட அளவில் ஆர்டர்லிகள் இருப்பதால், அவர்களி போலீஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டாலும், அங்கு பணியாற்றாமல் அதிகாரிகளின் வீட்டிற்கே திரும்பவும் அழைக்கப்படுகின்றனர்.  இதனால், கைக்கு எட்டியது வாயிக்கு எட்டாத நாலையில் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தவிக்கின்றனர்.

ஆனால், பல போலீஸ் நிலையங்களில் போலீசார், ஆர்டர்லிகளாக பணியாற்ற சென்று விடுவதால், போலீஸ் பற்றாக்குறை ஏற்படுவதுடன், பணிச்சுமையும் அதிகரிக்கிறது.  குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வேலை, மற்ற நேரத்தில் ஓய்வு, உரிய நேரத்தில் ரிவார்டு மற்றும்  புரமோசன் கிடைப்பதால் சிலர் அந்த வேலையை மட்டும் பார்த்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பயிற்சி முடிந்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் அல்லது ஆயுதப்படையில் பணியாற்றும் போதே சிலர் ஆர்டர்லிகளாக தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வகையில், தமிழ் நாடு சிறப்பு போலீசில் மட்டும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆர்டர்லிகளாக பணியாற்றி வருகின்றனர் என்பதும் கூடுதல் தகவல். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சிகாலம் தொட்டு, இன்று வரை இம்முறை ஒழிக்கப்படாமலேயே தொடர்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிப்ப
தாகக்கூறும் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிலாவது இந்த ஆர்டர்லிக்கள் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும், அல்லது இம்முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்படும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 
---------------------------------------------------------------------(தொடரும்)
நன்றி-தினமலர்.

No comments:

Post a Comment