Monday, August 8, 2011

ஊழலுக்கு எதிர்ப்பு.




அன்றும் இன்றும் லஞ்ச ஒழிப்பில் என்.கே.வேலு ADSP அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு.

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வரும் 16 ம் தேதி கோவையில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில், உண்ணாவிரதம் நடக்கிறது.

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயலாளர் வேலு அறிக்கை:

ஆயிரமாயிரம் சத்தியம் செய்து ஓட்டு வாங்கி பதவியைப் பிடிக்கும் அரசியல்வாதிகள், உலகமகா ஊழல்களை புரிந்து கோடிக்கணக்கில் சொத்துக்களை குவிக்கின்றனர். தலைமைப்பதவி வகிப்போர் தட்டிக் கேட்கும் திறனற்றவர்களாக  உள்ளனர். விளைவு, ஓட்டளித்த மக்கள் ஏமாளிகளாக மாறும் நிலை, அரசு நிர்வாகம் மோசமாகி வருவதால், இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப் படுகின்றன.

எனவே, ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் ஊழலில் ஈடுபட்டால் கடுமையாக தண்டிக்கும் வகையில், வலுவான ஜன்லோக்பால் சட்டம் தேவை. இதை வலியுறுத்தி,  காந்தியவாதி அன்னா ஹசாரே மற்றும் குழுவினர் வரும் 
16 ம் தேதி டில்லியில் உண்ணாவிருதம் இருக்க முடிவு செய்துள்ளனர். அவரது கோரிக்கைக்கு வலிமை சேர்க்கும் விதமாக, அன்றைய தினம் கோவை, காந்தி புரத்தில்  உண்ணாவிரதம் இருக்க ஊழல் எதிர்ப்பு இயக்கம் தீர்மானித்துள்ளது.

அரசியல் சாராத பொதுநல அமைப்புகள், தொழில் அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கங்கள், கல்லூரி மாணவர் அமைப்புகள் உள்ளிட்டோர் தவறாமல் பங்கேற்க வேண்டும். இந்த உண்ணா
விரதத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் வரும் 13 ம் தேதி மாலை 4.00 மணியளவில் திருச்சி சாலை, அல்வேர்னியா பள்ளி எதிரிலுள்ள எஸ்.என்., அரங்கத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது. அனைத்து அமைப்புகளும், மக்களும் பங்கேற்று ஆலோசனை தெரிவிக்கலாம். விபரங்களுக்கு, 98422 11993, 9789777199, 94435 78224 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 ----------------------------------------------------------------------------------------(தொடரும்)


No comments:

Post a Comment