Friday, November 18, 2011

முன்னாள் காவல் அதிகாரிகளின் மனித நேயம்.

N.K.Velu.(ADSP)





முன்னாள் காவல் அதிகாரிகளின் மனித நேயம்.

முன்னாள் காவல் அதிகாரிகளின் சங்கத்தினர் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்திற்கு முன்பாகவே போர்த்திக் கொள்ள போர்வை இல்லாமல் குளிரில் வாடும் எழிய மக்களின் துயர் போக்கப் போர்வைகள் இலவசமாக அளித்து இன்பம் கண்டு வந்தனர். அதே போல இந்த ஆண்டும் சங்கத்தின் செயலர் திரு என்.கே.வேலு அவர் தனது சொந்தப் பணத்தில் 160 போர்வைகளும், 160 கம்பளிக் குல்லாய்களும் வாங்கி தயராகவைத்து நானும் அவரும் மற்றும் தன் ஆர்வ தொண்டு பணி செய்வோருடன் சில தினங்களுக்கு முன்பு அத்திப் பாளையம் பிரிவை அடுத்த செல்லப்பம்பாளையம் இராமகிருட்டன மடத்தில் உள்ள ஆனாதை சிறுவர்களுக்குப் போர்வையும் குல்லாயும் 60+60 அளித்தோம்.

அதே போன்று (19-11-2011) இன்று கோவை அரசு மருத்துவ மனையில் வார்டுகளில் போர்வையின்றி  இன்னல் படும் ஏழை நோயாழிகளுக்கு செவிலியர்கள் உதவியுடன் 100+100 போர்வைகளும் குல்லாயும் இலவசமாக அளித்தோம். இந்தப் பெருமை மனித நேய அன்பர் திரு வேலு அவர்களையே சாரும். அவருக்கு உதவியாக நாங்கள் சில நண்பர்களும் சென்றிருந்தோம். நண்பர் வக்கீல் உடன் வந்தார்.

அவருக்கு சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெறிவித்துக் கொள்கிறோம்.

தொடரட்டும் அவர் தானமும் நற்பணிகளும். அவர் நீண்ட நாட்கள் தானம் செய்ய இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும்.

------------------------------------------(தொடரும்)



No comments:

Post a Comment