Tuesday, February 21, 2012

தண்டனை எப்போது?

S.P..அஸ்ரா கர்க்
 
 
மாநில குற்றவியல் சரித்திரத்தில் தமிழக காவல்துறை புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரையை அடுத்துள்ள திருப்பாலையில் வசித்தவர் வீரண்ணன், உஷா ராணி தம்பதி. இவர்களுக்கு மூன்று மகள், ஒரு மகன். குடிப்பழக்கத்துக்கு அடிமையான வீரண்ணன், எப்போதும் மனைவியை அடித்திருக்கிறார். துன்புறுத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சகிக்க முடியாத உஷாராணி விவாகரத்து பெற்றார். பின்னர் குழந்தைகளோடு தனியே வாழ்ந்து வந்த உஷாராணியிடம், தான் மனம் திருந்திவிட்டதாக வீரண்ணன் சொல்ல, உஷாராணி மீண்டும் அவனோடு வாழ்ந்தார்.

இந்த நிலையில்தான், கடந்த பிப்ரவரி 9-ம் தேதி, குடிபோதையில் மனைவியை அடித்ததோடு மகள் கோகிலப்பிரியாவிடமும் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்திருக்கிறார் வீரண்ணன். தன் உயிரைப் பாதுகாக்கவும், தனது மகளின் மானத்தைக் காப்பாற்றவும் கணவனைத் தடுத்து, கிரிக்கெட் மட்டையால் அடிக்க வீரண்ணன் அதே இடத்திலேயே இறந்துவிட்டார்.

சம்பவத்தை விசாரித்த மதுரை ஊரக எஸ்.பி. அஸ்ரா கர்க், குற்றஞ்சாட்டப்பட்ட உஷா ராணி மற்றும் கோகிலப்பிரியாவையும் விசாரித்துவிட்டு, இந்தியதண்டனைச் சட்டம் பிரிவு 100 -ன் அடிப்படையில், உஷா ராணியைக் கைது செய்யாமல் விடுவித்திருக்கிறார்.

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 100 என்ன சொல்கிறது?

ஒரு தாக்குதலில் தன்னுடைய உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவும், தனக்கு தீவிர காயம் ஏற்படும் என்ற அச்சத்திலும், பாலியல் வன்முறையிலிருந்து தற்காத்துக்கொள்ளவும், தன்னைக் கடத்தப் போகிறார்கள் என்ற சூழலிலும், தன்னைக் கடத்தி வைத்து, அந்தத் தகவலை வெளியில் சொல்ல முடியாத சூழல் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாகவும், ஒருவர் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டு நடத்தும் தாக்குதலில் மரணம் சம்பவித்தால், அது தற்காத்துக்கொள்ளும் உரிமைஎன்று அந்தச் சட்டம் சொல்கிறது.

திடீரென்று ஒருவர் தாக்கப்படும்போது தன்னைக் காத்துக்கொள்ளும் உரிமை உண்டு. எதிராளி தாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனக்கு காயமோ, உயிருக்கு ஆபத்தோ ஏற்படும் என்ற அச்சமோ ஏற்பட்டாலே எதிராளியைத் தாக்கும் உரிமை உண்டு. அவ்வாறு தாக்கும்போது எதிராளிக்கு மரணம் ஏற்பட்டாலும், அது ஒருவர் தன்னைக் காத்துக்கொள்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே ஆகும் என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.

குடிபோதையில் உஷா ராணியின் வீட்டுக்கு வந்த வீரண்ணன். மனைவியைத் தாக்க முயற்சித்தபோது, ‘தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும்என்ற அச்சம் உஷா ராணிக்கு ஏற்பட்டது இயல்பே. மேலும், வயதுக்கு வந்த தனது மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்த வீரண்ணன் முயலும்போது தன்னையும் தன் மகளையும் பாதுகாத்துக்கொள்ள உஷா ராணி வேறு என்ன செய்ய முடியும்?
வழக்கமாக காவல்துறையினர் இதுபோன்ற நேர்வுகளில், சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்து, சிறையில் அடைத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதே வழக்கம். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் தற்காப்புக்காகத்தான் தாக்கினேன் என்று நிரூபித்த பின்னரே நீதிமன்றம் அவரை விடுதலை செய்யும்.

இந்த வழக்கு விசாரணை முடிய பல ஆண்டுகள் கழியும். அதற்குள் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பம் கடுமையான துயரத்துக்கு ஆளாகும். உஷா ராணியின் வழக்கைப் பொறுத்தவரை நடந்த சம்பவத்தின் பின்புலத்தையும், சூழ்நிலைகளையும் ஆராய்ந்த மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கர்க், வழக்கில் சம்பந்தப்பட்டவரை உஷா ராணியைக் கைது செய்யாமல் உடனடியாக விடுவித்துள்ளார். இந்த நடவடிக்கை மனிதாபிமானமுள்ள நடவடிக்கை மட்டுமல்ல, சட்டபூர்வமான நடவடிக்கையும் கூட! சபாஷ்.
 
நன்றி-NAGA INTHU.

Tuesday, February 14, 2012

காவல் துறையில் தேர்வு முறை.






காவல் துறையில் தேர்வு முறை.

எஸ்.பி., முதல் டி.ஜி.பி.,வரையிலான ஐ.பி.எஸ்., அதிகாரிகள், யு.பி.எஸ்.சி., மூலமும், டி.எஸ்.பி.,க்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு மூலமும், போலீஸ்சார் மற்றும் நேரடி எஸ்., க்கள் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலமும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கடந்த, 2010ம் ஆண்டிற்கான நேரடி எஸ்.ஐ., பணியிடங்களுக்கு, 1,095 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முன்பெல்லாம், பயிற்ச்சி முடியும் போது, அவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில், அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்றவர்கள் சட்டம் ஒழுங்கு, பிரிவிற்கும், அதற்கடுத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை என, நியமிக்கப்பட்டனர்.

இதில், ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக்காவல்படையில் உள்ளவர்களும் கூட, எதிர் காலத்தில், சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றனர்.

பயிற்சியின் போதே பிரிப்பு; ஆனால், 2010 நேரடி எஸ்.ஐ., தேர்வில், அப்போதைய உயர் பதவியில் இருந்தவர்கள் செய்த குழப்பத்தால், தேர்வின் போதே சில அளவிற்கும், ஆயுதப்படை, 161, சிறப்புக்காவல் படை, 124 பேர் என பிரித்து, பயிற்ச்சிக்காக அனுப்பப்பட்டனர்.

இதில், தாலூகா எஸ்.ஐ., க்களுக்கு, வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகடமியிலும், மற்றவர்களுக்கு, அசோக்நகர் போலீஸ் பயிற்ச்சிப்பள்ளியிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி முடிந்து நாளை 15-2-2012 ம் தேதி, பாசிங் அவுட் பரேடு நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஜெலலிதா கலந்து கொள்கிறார்.

ஏக்கத்தில் 285 பேர்; இந்நிலையில், அசோக்நகரில் பயிற்ச்சி பெற்ற எஸ்.ஐ., கள், 285 பேரும் ஊனமாஞ்சேரிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில், தேர்வு, நேர்காணலின் போது அதிக மதிப்பெண் பெற்றவர்களும் அடங்குவர். அதிக மதிப்பெண் பெற்றும், தாலூகா போலிஸில் தங்களால் இடம் பெற முடியவில்லையே என ஏங்குகின்றனர்.

பாடத்திலும் பாராபட்சம்; அதிமட்டுமின்றி, எஸ்.ஐ., பயிற்சியில் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதும் இல்லை.

குறிப்பாக, தற்போதுள்ள பாடதிட்டத்தில், 10ல் ஒரு பங்கு கூட சட்டப்பயிற்சி அளிக்கவில்லை என புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து, முதல்வருக்கு பலமுறை கடுதம் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, பணி  நியமன ஆணையிலும், தனியான பாடப்பிரிவுகள் குறித்து, அறிவிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அடுத்து வரும் நேரடி எஸ்.ஐ., தேர்வில் பங்கேற்று தேர்வாகும் போது பார்க்கலாம் என, கூறியுள்ளார். தி.மு.க., ஆட்ச்சியின் போது, உயர் பதவியில் இருந்த அதிகாரி ஒருவரின் வழிகாட்டுதலில் ஏற்பட்ட குழப்பத்தால் தான், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், மிகப்பெரிய அவலம் என்னவென்றால், புதிய பாடத்திட்டத்தில், உயர் அதிகாரிகளக்குறிய சின்னம், வாக்கனங்களில் பயன்படுத்தப்படும் அடையாளம் உள்ளிட்ட வற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும், காவல் துறை நிர்வாகப் பயிற்சியும், பெயரளவிற்கே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

 கோரிக்கை; தற்போது தாலுகா போலீஸில், 3000 எஸ்.ஐ., பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இந்தாண்டு புதியதாக, 900 பேர் தேர்வு செய்யப்படுவதாக, அரசு அறிவித்துள்ளது.

ஆயுதப்படை, சிறப்புகாவல் படையில் போதிய காலிப்பணியிடங்கள் இல்லாத நிலையில், இவர்கள் எங்கு பணி அமர்த்தப்படுவர் என்பது, கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, 1996, 2004 ல் தேர்வு செய்யப்பட்ட அனைவரும், தாலுகா அளவில் பணியமர்த்தப்பட்டதைப் போல், தங்களையும் தாலுகாக்களிலேயே பணியமர்த்த பயிற்சி நிறைவு பெறும் நாளன்று, முதல்வர் அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

(நன்றி தினமலர்)

-----------------------------------------------(தொடரும்)

Wednesday, January 18, 2012

Why Not?



N.BALAKRISHNAN (CAPTAN)


-------------------------- Why Not? -----------------------------

Which Civil Service has duty round the clock With no holidays?

Which Civil Service employer risks his life continuously, plays soft with restrictions?

Batling dangerous desperados and not only violent but with so called elite mobs.

Which Civil Service employee is the constant target of criticism for doing his legitimate duty?

Which Civil Service employee keeps awake so society for whom he serves can sleep in peace?

If concessions similar to Defence Employees provided by the Government extend to the entire State  Society will not certainly, grudge such a concession to serving and retired personal without whom in civil life - then can be No peace - No progress and perhaps - No Civil defence.

Base- SAD - NA - HOM
By. BALAKRISHNAN ANGANNAN.

(தொடரும்)

Friday, November 18, 2011

முன்னாள் காவல் அதிகாரிகளின் மனித நேயம்.

N.K.Velu.(ADSP)





முன்னாள் காவல் அதிகாரிகளின் மனித நேயம்.

முன்னாள் காவல் அதிகாரிகளின் சங்கத்தினர் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்திற்கு முன்பாகவே போர்த்திக் கொள்ள போர்வை இல்லாமல் குளிரில் வாடும் எழிய மக்களின் துயர் போக்கப் போர்வைகள் இலவசமாக அளித்து இன்பம் கண்டு வந்தனர். அதே போல இந்த ஆண்டும் சங்கத்தின் செயலர் திரு என்.கே.வேலு அவர் தனது சொந்தப் பணத்தில் 160 போர்வைகளும், 160 கம்பளிக் குல்லாய்களும் வாங்கி தயராகவைத்து நானும் அவரும் மற்றும் தன் ஆர்வ தொண்டு பணி செய்வோருடன் சில தினங்களுக்கு முன்பு அத்திப் பாளையம் பிரிவை அடுத்த செல்லப்பம்பாளையம் இராமகிருட்டன மடத்தில் உள்ள ஆனாதை சிறுவர்களுக்குப் போர்வையும் குல்லாயும் 60+60 அளித்தோம்.

அதே போன்று (19-11-2011) இன்று கோவை அரசு மருத்துவ மனையில் வார்டுகளில் போர்வையின்றி  இன்னல் படும் ஏழை நோயாழிகளுக்கு செவிலியர்கள் உதவியுடன் 100+100 போர்வைகளும் குல்லாயும் இலவசமாக அளித்தோம். இந்தப் பெருமை மனித நேய அன்பர் திரு வேலு அவர்களையே சாரும். அவருக்கு உதவியாக நாங்கள் சில நண்பர்களும் சென்றிருந்தோம். நண்பர் வக்கீல் உடன் வந்தார்.

அவருக்கு சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெறிவித்துக் கொள்கிறோம்.

தொடரட்டும் அவர் தானமும் நற்பணிகளும். அவர் நீண்ட நாட்கள் தானம் செய்ய இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும்.

------------------------------------------(தொடரும்)



Saturday, November 12, 2011

கோவை மாநகராட்சி வெற்றியும் பணியும்

என்.கே.வேலு. (ADSP) வலது.

                                      --------------------------------------------------(தொடரும்)                          

Tuesday, October 18, 2011

தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல் ஒரு பார்வை---------




                                                                                                            15.10.2011
To 
The Inspector  of Police,
Rathinapuri Police Station,
Coimbatore 641 027

Sir,
      Sub: Civic elections- election campaign-forgery, cheating and impersonation
               Committed- investigation into- requested.
    

                In the process of campaign for the ensuing election of a councilor for the Ward No. 49 in the Coimbatore City Municipal Corporation, pamphlets, purported to have been issued by the Coimbatore district unit of the Anti Corruption Movement have been sent to the voters in the Rathinapuri area by post.  We have enclosed one of them. We are not the authors of the said pamphlet.   Some vested interests are suspected to be responsible for the same. In the publication of the pamphlet, offences of impersonation, forgery and cheating etc. have been committed.   It has affected the image, decency, dignity and reputation of our eleven year old state wide registered organization functioning as a watchdog body against corruption, in the eyes of the public.   Besides, it has adversely affected the reputation of the contesting candidates in the said ward, even affecting their winning chances.
                 
                It is therefore, requested that an immediate investigation is initiated into the fraud, culprits arrested, prosecuted and a fair electioneering is ensured.                

               

                                        Thanking you 

                                          Yours faithfully,


                                          Secretary

Encl: 1. The pamphlet in question
          2. The pamphlet issued by the Coimbatore District Unit of the Anti Corruption
               Movement in connection with the ongoing civic elections                              


Monday, October 3, 2011

ஊழல் ஒழிப்பு





ஊழல் ஒழிப்பைப் பற்றி என்.கே. வேலு ஏ.டி.எஸ்.பி. விளக்குகிறார்

தொடரும்.....