Friday, January 23, 2009

மூன்றாவது கேட்டகிரி - பெட்டாலியன்.


மூன்றாவது கேட்டகிரி - பெட்டாலியன்.


இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக, காவல் துறையில் காவலராகச் சேர்வதற்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தாலே போதும் என்ற ஓர் நிலை இருந்தது.

காலப்போக்கில் குறைந்த கல்வித் தகுதி 8 வது வகுப்பு வரை படித்தவர்களை காவலர்களாக தேர்வு செய்து தமிழ் நாடு சிறப்பு காவல் படையிலேயே (மலபார் ஸ்பெசல் போலீஸ்) பணிக்காலம் முழுவதும் கேட்டகிரி 3 என்ற நிலையிலேயே பணியாற்றி அதிலேயே பதவி உயர்வுகள் பெற்று கமேண்டென்ட் (தளவாய்) என்ற உயர் பதவியைஅடைந்து, பணி ஓய்வு பெற்று வந்தனர். மலபார் ஸ்பெசல் போலீசின் பணி எல்லை என்பது இந்தியாவின் எல்லையை ஒட்டிய நேபாளம் வரை நீடிக்கப்பட்டிருந்த ஒரு காலம் இருந்தது. மலபார் ஸ்பெசல் போலீஸ் பணி என்பது அவசரப் படை என்ற நிலையில் கலவரப் பகுதிகளுக்குச் சென்று கலவரத்தை அடக்கவும் ஒடுக்கவும் என்ற வகையில் ஒரு மினி ராணுவப்படை போன்றே செயல்பட்டு வந்தது. அதற்குத் தகுந்தாற் போல் சீறுடைகள், அரைக்கால் டவுசர், சட்டை, ஙம் பூட், ஓல்ஸ் ஸ்டாப், பட்டி,இரும்புச்சட்டித்தொப்பி, கேடையம், லத்தித் தடி, கண்ணீர் புகை கிரினேடு, கண்ணீர் புகை ஙன், .303 துப்பாக்கி தோட்டாக்கள், எல்.எம்.ஜி.கன், ஸ்டென்கன், (தற்போது எ.கெ.47) ரிவால்வர், பிஸ்டல், முதலுதவி மருந்துப் பெட்டி, ஸ்டெச்சர் கை ஒலி பெருக்கி, ஆம்புலன்ஸ் வாகனம், பேருந்துகள் ஆகியவை தயார் நிலையில் இருக்கும், அதிகாரிகளும் இருப்பர்.

ஒரு பெட்டாலியன் என்பது 750 பேர் கொண்ட குழு. பெட்டாலியனுக்குப் பொருப்பாளர் கமேண்டன்ட்- தளவாய் ஆவார். டெப்டி கமேண்டன்ட், அசிடெண்ட் கமேண்டன்ட், ஆப்பீசர் கமேண்டிங், சப்இன்ஸ்பெக்டர் பின் அவில்தார், நாயக், காவலர் என இருப்பர். ஒரு கம்பனி என்பது 120 பேர் கொண்டது, அதில் மூன்று பெளட்டோன் இருக்கும்.கம்பனிக்குப் பொருப்பாளர் ஆப்பீசர் கமேண்டிங், பிளட்டோனுக்குப் பொருப்பாளர் உதவி ஆய்வாளர் (சப்இன்ஸ்பெக்டர்) ஆவார்.

பெட்டாலியன் இருக்கும் இடங்கள்-

முதல் பெட்டாலியன் திருச்சி.
இரண்டாவது பெட்டாலியன் ஆவடி.
மூன்றாவது பெட்டாலியன் வீராபுரம்.
நான்காவது பெட்டாலியன் கோவைபுதூர்.
ஐந்தாவது பெட்டாலியன் ஆவடி எஸ்.எம்.நகர்- மகிளா பெட்டாலியன்.
ஆறாவது பெட்டாலியன் மதுரை.
ஏழாவது பெட்டாலியன் போச்சம்பள்ளி.
எட்டாவது பெட்டாலியன் டெல்லி-தீகார் ஜெயில் பாது காப்பு.
ஒன்பதாவது பெட்டாலியன் மணிமுத்தாறு.
பத்தாவது பெட்டாலியன் உளுந்தூர் பேட்டை.
பதினொன்றாவது பெட்டாலியன் ராஜபாளையம்.
பன்னிரண்டாவது பெட்டாலியன் மணிமுத்தாறு- கோஸ்டல் கார்டு.
பதிநான்காவது பெட்டாலியன் பழனி-இ.பி. கார்டு.
சுந்தரம்பள்ளியில் ஒரு பட்டாலியன்
வீராபுரம்- பட்டாலியன் - ஸ்பெசல் போர்ஸ்.

ஆகிய இடங்களில் தலைமையிடமாகக்கொண்டு பணியாற்றி வருகிறார்கள் தேவைப்பட்டால் தமிழ் நாட்டில் எந்தப்பகுதிக்கும் உத்திரவுப்படி அவசர நிமித்தமாகச் செல்வர்.

--------------------------------------------(காவல் தோடரும்)

No comments:

Post a Comment