Thursday, February 12, 2009

ஆயுதப்படை காவல்-கேட்டகிரி இரண்டு

காவல் துறையில் இரண்டாவது கேட்டகிரி என்று சொல்லப்படும் ஆயுதப்படைகாவல் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ‘ரிசர்வ்போலீஸ்’ என்பதாகும். ரிசர்வ்போலீஸ் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டிலில் இயங்குவது. அதற்கென்று தனி D.I.G யோ, I.G. யோ கிடையாது. அதில் மாவட்டத்திற்குத் தகுந்தவாறு பிளட்டோன் எண்ணிக்கை மாறுபடும். ஆயுதப்படை பிளட்டோன் என்பது 62 பேர்களைக் கொண்ட பிறிவு. ஒரு ரிசர்வ் சப் இன்ஸ்பெக்டர் அதாவது அந்தக்காலத்தில் சார்ஜெண்ட் என்பர். அடுத்தவர் ரிசர்வ் அசிஸ்டெண்ட் சப்இன்ஸ்பெக்டர் அதாவது ஜமேதார், பின் 4 தலமைக்காவலர், 4 நாயக், 4 லேன்ஸ் நாயக், மற்றும் 48 காவலர்கள் ஆக 62 பேர் இருப்பார்கள். ஆனால் தற்போது ரிசர்வ் அசிஸ்டெண்ட் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் லேன்ஸ் நாயக் என்ற பதவிகளை எடுத்து விட்டு ரிசர்வு சப் இன்ஸ்பபக்டர் என்றும் கிரேடுஒன் நாயக் என்றும் மாற்றி விட்டனர். இது போன்ற பிளட்டோன்களுக்கு ரிசர்வ் இன்ஸ்பெக்டர் பொருப்பாளராக இருப்பார். அவரை அந்தக்காலத்தில் சார்ஜண்ட் மேஜர் என்று அழைப்பார்கள். ஆங்கிலேயர்கள் இருந்தபோது அவர்கள் தான் அந்தப் பதவியில் இருந்தார்கள். பின் 1950 க்குப்பின் இந்தியர்கள் பயிற்சி கொடுத்து இப்பணியில் நியமிக்கப்பட்டனர். இது இல்லாமல் ஹெட்கோட்டர் பிளட்டோன் என்ற பிறிவும் இருந்தது. அதில் காவல் துறையின் வாகனம் ஓட்டுனர்கள், மெக்கானிக்குகள், தச்சுவேலை(கார்பெண்டர்) செய்பவர்கள், தையல் வேலை செய்பவர்கள் (டெய்லர்) மற்றும் அலுவலகங்கள், அதிகாரிகளின் வீட்டில் வேலை செய்ய ‘ஆர்டர்லி’ என்ற காவலர்களும், துப்பாக்கிகளை பழுது பார்க்க ஆர்மரர்களும் இதில் அடங்குவர். தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளும் இவர் பொருப்பில் இயங்கும். இது இல்லாமல் காவலர்கள் குடியிருப்பு, அலுவலகம் போன்றவற்றை சுத்தம் செய்ய துப்புரவுத் தொழிலாளர்களும் அமர்த்தப்படுவர். இவர்களை வேலை வாங்க லைன் ஆர்டர்லி என்பவரும் ஆயுதப்படை தலமைக் காவலர் அல்லது காவலர் நியமிக்கப்படுவார். இவையெல்லாம் சார்ஜண்ட் மேஜர் அதாவது ரிசர்வ் இன்ஸ்பெக்டர் பொருப்பில் இயங்குவர்க்கள். இதில் இருப்பவர்களிக்கு தனி அலவன்ஸ் கொடுக்கப்படும். கண்ணீர் புகைப் பயிற்சி கொடுப்பதும் ஹெட்கோட்டர் சார்ஜண்ட் பொருப்பாகும். ஆயுதப்படைகிடங்கில் மாவட்டத்திற்கு வேண்டிய துப்பாகி தோட்டாக்கள், டெப்பாசிட் துப்பாக்கிகள் யாவும் ரிசர்வ் இன்ஸ்பெக்டர் பொருப்பில் இருக்கும். ஆயுதப்படையில் பேண்டு பார்ட்டி என்ற இசைக்குழுவும் உண்டு ஒவ்வொரு வெள்ளிக்கழமையிலும் சிறப்புக்கவாத்து நடைபெரும் அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிடுவார், மோட்டார் வகனங்களையும் பார்வையிடுவார். அப்போது இவர்கள் இன்னிசை வாசிப்பார்கள். இதில் குழல் ஊதுபவர்கள் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொரு செரிமோனியல் கார்டுகளிலும் ஊதுவார்கள். இவர்கள் அதிகாலை 4 மணிக்கு,
ரிவாலி, கோட்டர் கால், ரோல்கால், எமர்ஜென்சி கால், அலாரம் கால், ரெட்ரீட் கால், லாஸ்ட் போஸ்ட் போன்ற மாறுபட்ட இசையில் ஊதுவார்கள். ஆயுதப்படையில் வாரத்தில் நான்கு நாட்கள் கவாத்துப்பயிற்சியும், ஒருநாள் ஆயுதங்கள் சுத்தம் செய்தல், சனிக்கிழமை ரூட்மார்ச் என்னும் குறைந்தது 5 கி.மீ நடையாகச்சென்று திரும்புதல். ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுத்தல். இது வழக்கமாக நடைபெருவது.இது இல்லாமல் எந்த நேரத்திலும் தயார் நிலையில் ஒரு பிறிவு இருப்பது.

ஆயுதப்படை காவலர்கள் சேரும்போது 10 வது படித்திருக்க வேண்டும், உயரம் 168 செ.மீ.க்கு மேல் இருக்க வேண்டும், மார்பளவு 80-86 செ.மீ. இருப்பதுடன் 5 செ.மீ. மார்பு விரிய வேண்டும். வயது 18க்கு மேல் இருக்கவேண்டும். உடல் தகுதி தேர்விலும் எழுத்துத் தேர்விலும். தேரவேண்டும். பின் மருத்துவப் பரிசோதனை முடித்து கோவை அலலது வேலூரில் காவலர் பயிற்சிப் பள்ளியில் 10 மாதம் பயிற்சி பெற்று முடித்து மாவட்டத்தில் வந்து ஆணை பெற்று ஆயுதப்படையில் அமர்த்தப்படுவார்கள். ஆயுதப்படை அலுவல் அனைத்தும் செய்யவேண்டும். பின் சீனியாரட்டிப் படி பரிசோதனை, தேர்வுகள் வைத்து பதவி உயர்வு அளிக்கப்படும். ஆனால் கேட்டகிரி ஒன்றுக்கு சீனியாரிட்டிப்படி காவலர்களாக மாற்றப்படுவார்கள். அதற்கு 5 அல்லது 10 ஆண்டுகள் கூட ஆகலாம். இவ்வாறு காவலர்கள் மட்டுமே தாலூக்கா போலீசுக்கு மாற்றப்பட்டனர் மற்ற அதிகாரிகள் மாற்றப்படவில்லை. அதனால் ஆயுதப்படையில் பணிபுறிந்த அதிகாரிகள் அங்கேயே பதவி உயர்வு பெற்று ரிசர்வ் இன்ஸ்பெக்டர், டெபுடி சூப்பிரிடெண்ட் ஆயுதப்படை மற்றும் எடி.எஸ்.பி. ஆயுதப்படை, மற்றும் மாநகரக்காவலில் மட்டும் டெப்பிடி கமிசனர் ஆயுதப்படை என பதவி உயர்வு கொடுக்கப் பட்டது அதற்கு மேல் ஆயுதப்படையில் பதவி உயர்வு கிடையாது. ஆயுதப்படைக்கென்று உயர் அதிகாரரகள் அமைக்கப்படவில்லை. அதனால் அவர்கள் நலன்கள் ஆராய்ந்து முடிவெடுக்க யாரும் இல்லை. இடைவிடாத அலுவலால் குடும்ப நலன் பார்க்க முடியாத தால் அல்லல் பட்டனர். இதனால் ஒன்று பட்டு போராடினர் குறைகளைச் சொல்ல சங்கம் கேட்டனர். அதே சமயம் கேட்டகிரி ஒன்றிலிருந்து தண்டனையக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்த ஏற்ற தாழ்வுகள் ஏன்
ஒழுங்கு படுத்த கேட்டகிரிகள் அகற்றி காவல் என்பது ஒரே நிலை என மாற்றங்கள் செய்ய 3வது போலீஸ் கமிசன் குழு இவைகளை நன்கு ஆராய்ந்து செயல் பட வேண்டும். காவல் துறையில் மறுமலர்ச்சசயை ஏற்படுத்த வேண்டும்.


அடுத்து ஆயுதப்படையின் அலுவல் பற்றி தொடரும்.

No comments:

Post a Comment