Monday, January 19, 2009

காவல் தோற்றம்

‘காவல்’ இந்த சொல்லை நோக்கும் போது யாருக்கு யார் காவல் என்ற வினா எழும். ஆதிகாலத்தில் சமூகம் உண்டான போது பலம் மிக்கவர் அந்த சமூகத்திற்குப் பாதுகாவலராகவும், தலைவனாகவும் இருந்துள்ளார்கள். பின் செல்வங்கள், உணவுப்பொருட்கள் ஒரே இடத்தில் சேரும் போது அந்த தனி நபருக்குக் காவல் தேவைப்பட்டது. இல்லாதவன் இருப்பவர்களிடம் அபகறிக்கும் செயல்களைக் கட்டுப்படுத்த காவல் தேவைப்பட்டது. அவ்வாறு தேவைப்பட்டபின் அது படையாக மாறியது. படையின் மற்றொருபகுதி காவலாக மாறி ஆங்கிலேயர் காலத்தில் காவல் துறையாக மாற்றம் அடைந்து 1861 ஆண்டிலிருந்து ஒரு காவல் ஆணைகளாக (போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர் ) உருவாகினார்கள் . அன்றிலிருந்து காவல் ஆணைப்படி காவல்துறை செயல்படத்துவங்கியது. அந்த 1861ஆண்டிலிருந்து அதிக மாற்றம் இல்லாமல் காவல் துறை இன்னும் செயல்பட்டு வருகிறது.அதில் ஏகப்பட்ட குறை நிறைகள் இருப்பதால் தற்போது மூன்றாவது போலீஸ் கமிசன் குழு அமைத்து அதனை பரிந்துறைகள் தற்போதுள்ள அரசுக்கு அளிக்க உள்ளார்கள். அந்தகுழு பின்வருமாறு-

தலைவர் திருமிகு பூர்ணலிங்கம், ஐ.எ.எஸ் அவர்கள்
துணைத்தலைவர் திருமிகு வெங்கடேசன் எக்ஸ் எம்.பி. அவர்கள்.
திருமிகு இராமானுஜம் ஐ.பி.எஸ். அவர்கள்.
திருமிகு இராமச்சந்திரன் ஐ.பி.எஸ். அவர்கள்.
திருமிகு ஜோன்ஸ்ரூசோ அவர்கள் ஆகியோர் ஆவர்.

இந்த நிலையில் காவல் துறை பற்றி மக்களுக்கு ஒரு விளிப்புணர்வு ஏற்படுத்தவும் மாற்றங்கள் பற்றி ஆலோசனை ஏற்றுக்கொள்ளவும் இக்குழு நல்லவைகளை ஏற்று மாண்பு மிகு தமிழக முதல்வர் அவர்களுக்குப் பரிந்துறை செய்ய வேண்டி இந்த வலைப்பதிவை அளிக்கவுள்ளேன் குறையிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். நான் க.பொ.குப்புசாமி காவல் துணைக்கண்காணிப்பாளர் (D.S.P. Category ii ) 34 வருடங்கள் பணியாற்றி பணிநிறைவு பெற்றுள்ளேன். இருப்பிடம் கோவை-641 037.

எனது முந்தைய வலைப்பதிவுகள்:-

1. மூலிகை வளம். http://mooligaivazam-kuppusamy.blogspot.com/
2. ஜாதகம் இல்லா ஜோதிடம். http://www.kuppusamy-prasna.blogspot.com/
3. தா(வரங்கள்). http://crop-kuppu.blogspot.com/


(அடுத்து காவல் துறையின் முப்பிறிவுகள்- தொடரும்.)

No comments:

Post a Comment