Wednesday, January 21, 2009

காவல் துறையின் 3 கேட்டகிரிகள்

காவல் துறையின் 3 கேட்டகிரிகள்.

தமிழ்நாடு காவல் துறை பழைய கால முறைப்படி தாலூக்கா காவல் பிரிவு கேட்டகிரி ஒன்று என்றும், (லோக்கல் போலீஸ்) இரண்டாவது கேட்டகிரி மாவட்ட ஆயுதப்படை பிரிவு என்றும்,(ரிசர்வ்போலீஸ்) மூன்றாவது கேட்டகிரி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை அதாவது பெட்டாலியன் (மலபார் ஸ்பெசல் போலீஸ் என்று ஆதியில்) என்றும், நிர்வாகம் மற்றும் மாறுபட்ட அலுவல் காரணமாகவும் ஆரம்ப காலத்தில் பிரிக்கப்பட்டது.

இந்த முப்பெரும் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான அலுவல்களை வகுத்தார்கள். இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளனவாகவே அமைந்தன. அவ்வாறு அலுவல்கள் செய்யும் போது தற்காலிகமாக அடுத்த கேட்டகிரி செய்யும் அலுவலை, ஆட்கள் பற்றாக்குறை காரணமாகச் செய்தார்கள்.

இந்த மூன்று கேட்டகிரிக்கும் காவல் துறை தலைவர் ஆரம்பத்தில் ஒருவர் மட்டுமே இருந்தார். பின் காலப்போக்கில் காவல் துறைக்கு இயக்குனர்கள் பலர், துணை இயக்குனர்கள் பலர், துறைத்தலைவர்கள் பலர் என மேற்பார்வை செய்யும் அதிகாரிகள் அதிகரித்தார்களே ஒளிய கீழ் மட்டத்தில் காவலர்கள் எண்ணிக்கை தேவைக்குத் தக்கவாறு அதிகரிக்கப் படவில்லை. அந்தக் காலத்தில் ஒவ்வொரு மாதமும்
15 ந்தேதி காவல் துறைக்கு ஆழ் எடுத்துப் பத்து மாதப் பயிற்றசிக்கு காவல் பயிற்றசிப் பள்ளிக்கு அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். அதுவும் மாவட்ட காவல் கண்காணிபளரே காவலரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தார். அதனால் பணி நிறைவு பெரும் போது அடுத்த காவலர் வந்து கோண்டே இருப்பார் அந்த முறை தற்போது மாற்றப்பட்டது. தற்போது ஒரே நேரத்தில் தேர்வாணையம் மூலமாக ஆயிரக்கணக்கில் ஆட்கள் தேர்ந்தெடுத்து பயிற்சி காலத்தையும் (4 மாதம்) குறைத்து தேர்வு நடக்கிறது. இருந்தும் காவலர் பற்றாக்குறை இருந்து கொண்டு தான் உள்ளது. இதனால் வேலைப்பழு அதிகரித்தும், வேலை செய்யும் நேரமும் அதிகறிப்பால் படித்த காவலரிடையே மன உழச்சலால் ஒழுக்கமின்மை, கீழ்படியாமை அதிக நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்வது அந்த விடுப்பு நேரத்தில் ஒழுக்கத்திற்கு மாறான செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தமது குறைகளை எடுத்துச்சொல்ல அவர்களுக்கு என்று தனிச்சங்கம் வேண்டும் என்று கேட்டார்கள். அதுவும்
27-6-1979 ந்தேதி காவல் துறைத் தலைவர் அவர்கள் திருமிகு இ.எல்.ஸ்ட்ரேஸி,ஐ.பி., மூன்று விதமான சங்கங்களை அமைக்க அனுமதி அளித்தார்கள். காவலர், தலைமைக்காவலர்களுக்கோர் சங்கமும், உதவி ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், ஆய்வாளர்க்கோர் சங்கமும், துணைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்க் கோர் சங்கமும், என மூன்று சங்கங்கள். அவை செயல்பாடு திருப்தியின்மையே.

--------------------------- (தொடரும்)

No comments:

Post a Comment