Friday, September 26, 2014

சைலேந்திர பாபு அவர்களின் வாழ்க்கை





சரித்திர நாயகன் மதிப்பிற்குரிய.சைலேந்திர பாபு அவர்களின் வாழ்க்கை சரித்திரம் :

1962 ஜூன் 5-ம் நாள் பிறந்த டாக்டர் சைலேந்திர பாபு 1987 ல் தமிழ்நாடு பணிநிலை பிரிவின் இந்திய காவல் ஆட்சியராக(IPS) தன பணியை தொடந்தார். அவர் 2012 வரை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் கூடுதல் இயக்குனர ஜெனெரலாக பணியாற்றினார் . சென்னை பல்கலைகழகத்தில் குற்றவியலில் முனைவர் பட்டம் மட்டுமல்லாது பெருவேட்கயுடைய வாசகர் . துவண்டு கிடப்பவரின் மனதை ஊக்கமூட்டும் பேசாளரும் சீரிய உடற்பயிற்சி ஆய்வாளரும் கூட..
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தன பள்ளிப்படிப்ப முடித்து மதுரையில் அமைந்துள்ள Agricultural College and Research Institute ல் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். கோயம்புத்தூர் விவசாய பலகலைகழகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், பின்னர் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் பொதுச்சட்டம் இளங்கலை பட்டமும் மக்கள்தொகை கல்வியில் முதுகலை பட்டமும் பெற்றார் . சென்னை பல்கலைகழகத்தின் மூலம் அவருடைய "Missing Children" ஆய்வறிக்கைக்காக முனைவர் பட்டம் பெற்றார் . 2013 -ம்ம் ஆண்டில் மனித வள வணிக நிர்வாக படிப்பில் முது நிலைப்பட்டம் பெற்றார் . தற்போது கணினி அறிவியல் மற்றும் சைபர் கிரிம் விசாரணை பிரிவு என்றும் தொடர்கிறார்.
உடற்பயிற்சியை தீவிரமாக கடைபிடித்து உடலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் உடல்நலதகுதி எனும் தமிழ் நூலை எழுதி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்போருக்கு விருந்தாக இந்த நூலை தந்துள்ளார். வீர தீர விளையாட்டுச்செயல்கலான நீச்சல், தடகளம், துப்பாகிசுடுதல் , சைகிளிங் போன்றவற்றில் அதி தீவிர பங்களிப்பால் நீச்சலுக்காக தேசிய போலீஸ் அகாடமி மூலம் "RD சிங்" கோப்பையை பெற்றுள்ளார் .டிசெம்பர் 2004 ல் பாங்காக்கில் நடைபெற்ற Asian Masters Athletic Championships ல் மட்டுமல்லாது இவரது பங்களிப்பு இன்னும் பல 10k ஓட்டம் போன்ற சென்னை மாராதான் மற்றும் கோவை மராத்தான் போட்டியிலும் தொடர்ந்துள்ளது . 2014 ஆரோவிள்ளே மராத்தான் -ன் அரை மாராதான் நிகழ்விற்காக 26 கடற்படை வீரர்கள் அடங்கிய குழிவிற்கு தலைமை இவரே,
பிப்ரூவரி 2008 ம் ஆண்டில் இந்தியன் கடற்கரையோர பாதுகாப்பு படை மற்றும் கடலோர பாதுகாப்பு உறுப்பினர்களுடன் இணைந்து கணியகுமரியிலிருந்து சென்னைக்கு 890 கி. மீ சைக்கிள் பேரணியை ஏற்பாடு செய்து பேரணியிலும் கலந்து கொண்டார். 10 நாட்களாக நடந்த அந்த பேரணியில் கடலோர காவலர்களின் செயல்பாடு மற்றும்கடலோர மக்களின் மத்தியில் காவற்படயைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காக கொண்டு செயலாற்றினார் .
துப்பாக்கி சுடுவதில் அனல் வீசும் ஆர்வம் கொண்ட சைலேந்திர பாபு அவர்கள் காவல்துறை மற்றும் பொதுத்துறை சார்ந்த துப்பாக்கிச்சுடும் போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
IPS ஆக பணியில் சேர்ந்த சையிலேந்திர பாபு அவர்கள் ஹைதராபாத் தேசிய காவல் அகாடமி மூலம் பயிற்சி பெற்றார் . ASP ஆக கோபிசெட்டி பாளயம் , சேலம் மற்றும் திண்டுக்கல்லில் பணியாற்றி SP ஆக செங்கல்பட்டு, சிவகங்கை, கூடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பணியாற்றினார், பின்னர் DC ஆக அடையாரிலும் பின் DIG ஆக விழுப்புரம் சரகத்திலும் இணை கமிஷனராக சென்னையிலும் பணியாற்றினார், கரூர் தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றுவதற்கு முன்பு டிக் ஆக திருச்சியிலும் பின் சென்னை வடக்கு மணடலத்தின் IG ஆக பணியாற்றுவதற்கு முன் முன்பு போலீஸ் கமிஷனராக கோவையிலும் பணியாற்றினார்,
ஏப்ரல் 2014 ல் இணை இயக்குனர் போலீசாக (Assistant Director of General Police) பதவி உயர்வு பெற்ற சையிலேந்திர பாபு அவர்கல் தற்போது தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படைக்குழுவின் ADGP ஆக பணியில் உள்ளார் .
கமிஷனராக கோவையில் பணியாற்றிய போது Lead India 2020 உடன் இணைந்து பல்வேறு பள்ளிகளில் கணினி கல்வி திட்டத்தை அறிமுகபடுத்தினார் , அத்திட்டத்தின் கீழ் உள்ளூர் காவல் நிலயங்கள் பள்ளிகளை தத்தேடுதுக்க் கொண்டது. சயிலேந்திர பாபு அவர்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு இலவச கராத்தே முகாம்களை ஏற்படுத்தி கொடுத்தார். மகளிர் கல்லூரிகளில் கராத்தே முகாம்களை ஆரம்பித்து கொடுத்தார்.
அவர் பெற்ற பதவி உயர்வுகள் :
1,Additional Superintendent of Police – ASP October 1989
2,Superintendent of Police – SP January 1992
3,Deputy Inspector General – DIG March 2001
4,Inspector General – IG December 20, 2006
5,Additional Director General of Police – ADGP-April 23, 2012
விருதுகள் மற்றும் மரியாதைகள்:
Chief minister's medal for outstanding devotion to duty 2000
Chief minister's police medal for Gallantry , jan,2001
Prime minister's medal for life saving in 2001
Special task Force bravery medal in 2004
President's Medal for Meritorious Service in 2005
Blue Cross of India 2007 Award
The Best Alumnus Award July 25, 2008
President's police Medal for Distinguished Service Jan 26, 2013
இன்னும் பல இவருடைய தகவல்கள் விட்டிருக்கலாம் மன்னித்துவிடுங்கள், ஏனென்றால் கடல் அளவு தண்ணீரை குடத்தில் பிடிக்க முடியுமா? இவரை புகழை பாட்டால் பாடி உணர்த்த கூட புலவர் கிடையாது, இவர் புகழை எழுத்தால் எழுத ஏடுகளும் போதாது...
இவருடைய பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்....!

நன்றி முத்துராஜ்
--------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment