Wednesday, September 10, 2014

தமிழக காவல்துறையில் நேர்மையான அதிகாரி.




வீ.சித்தண்ணன் B.sc. , M.L., CC & IS, தமிழக காவல்துறையில் நேர்மையாகவும், உண்மையாகவும் கடமை தவறாமல் பணியாற்றி தனக்கென தனித்தடம் பதித்தவர்,
தனக்கென தனி தடம் பதித்தது மட்டுமல்லாமல் மாணவ, மாணவியர்கள் அனைவரும் வாழ்வில் சிறப்படைய வேண்டும் என்று மன உறுதியுடன் வாழ்பவர்,
அதன் விளைவாக இவர் எழுதிய படைப்புதான் " காவல் புலன் விசாரணை - பாகம் 1" மற்றும் " காவல் புலன் விசாரணை - பாகம் 2" தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வெளியிட்டுள்ளார், இதில் அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் பற்றி தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது,
அதாவது,
1) 2005, 2008, 2010 & 2013 -ம் ஆண்டுகளின் குற்றவியல் சட்டத் திருத்தங்கள் உள்ளடக்கியது.
2) 14/11/2012 அன்று அமலுக்கு வந்த “பாலியல் குற்றங்களிலிருந்து
குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 பற்றிய முக்கிய குறிப்புகளைக் கொண்டது.
3) 2012-ஆம் ஆண்டு வரையிலான இந்திய உயர்நீதி மன்றங்கள் மற்றும்
உச்ச நீதிமன்றங்களின் முக்கிய தீர்ப்புகளையும் உள்ளடக்கியது.
4) முற்றிலும் இன்றைய நிலைக்கேற்ப மேம்படுத்தப்பட்ட, காவல் புலன் விசாரணையைப் பற்றி,
இன்றுவரை தமிழிழ் வெளிவராத அனைத்துத் தரப்பினருக்கும் அத்தியாவசியமான புதிய படைப்பு இது.
5) காவல் அலுவலர்கள், வழக்குரைஞர்கள், சட்ட அலுவலர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள்,
தினந்தோறும் புரட்டிப் பார்த்து, மேம்படுத்திக்கொள்வதை உறுதி செய்யும் உபயோகமான படைப்பு.
6) காவல் அலுவலர்கள், மாநில மற்றும் அகில இந்திய “காவல் பணித்திறன் போட்டிகளில்” கலந்துகொள்ள,
பதவி உயர்வுக்கான முந்தைய பயிற்சி தேர்வுகளில் வெற்றிபெற உதவும் ஒரு உன்னத படைப்பு.
இன்னும் பலபடைப்புகளை உருவாக்க, மாணவ, மாணவர்களின் படிப்பு மட்டும்தான் இந்தியாவை உணர்த்தும் என்பதை தன்னுடைய தாரக மந்திரமாக மனதில் கொண்டுள்ளார்... இவரது வெற்றி பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி முத்துராஜ்.

-------------------------------------------------------(தொடரும்)

1 comment:

  1. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக என்னை ஏமாற்றி திருமணம் செய்த பெண் மீது இந்திய தண்டணை சட்டம 1860 ன் பிரிவு 495 ன் கீழ் நடவடிக்கை ஏடுக்கக் கோரி கடந்த 21-04-2015 அன்று சாணார்பட்டி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் 30-04-2015 அன்று என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து எனது புகார் மனுவை நான் வாபஸ் பெற்றுக் கொண்டதாக என்னிடம் எழதி வாங்கிக் கொண்டு CSR 308/2015 என்னிடம் கொடுத்தனர் ஆகவே நான் 07-05-2015 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏனது வாழ்வுரிமை சம்மந்தமான பிரச்சனை காரணமாக எனது புகார் மனு மீது என்ன நடவடிக்கை மேற்கொளள்ளப்பட்டது என தகவல் கேட்டு விண்ணப்பித்தேன்எனது விண்ணப்பத்தை 08-05-2015அன்றுபெற்றுக்கொண்ட காவல் துறை சார்பு ஆய்வாளர் அவர்கள் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து இனி மேல் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் மனு அனுப்பினால் உன்னை ரிமாணட் பண்ணிருவேண்டா சைக்கோ . மெண்டல் .என திட்டினார் ஆனால் தகவல் தரவில்லை ஆகவே நான் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதி மன்றம் எண் மூன்றில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக என்னை ஏமாற்றி திருமணம் செய்த பெண் மீதம் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க புகார் அளித்தேன் என்னை விசாரணை செய்த நீதிபதி அவர்கள் சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு ஏவுரை அனுப்பினார் CRMP NUMBER :1017/2015 நாள் 14-05-2015 இந்த ஏவுரையில் இரண்டு மாதங்களுக்குள் உரிய விசாரணை செய்து சம்மந்தபட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்ற விசாரணை இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது . ஆனால் கடந்த 07-07-2015 அன்று இந்திய தண்டணை சட்டம் 495 மற்றும்417 ஆகிய சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து என்னிடம் 10-07-2015 அன்று முதல் தகவல் அறிக்கையின் நகல் கொடுத்தனர்பிறகுநான் வீட்டில் இல்லாத நேரத்தில் என் வீட்டுக்கு சென்ற சாணார்பட்டி காவல் துறையினர் என் பெற்றோரிடம் ஏய்பொம்பளைங்க எத்தனை திருமணம் வேண்டுமானலும் செய்து கொள்ளலாம் என சட்டத்தில் உள்ளது உன் மகனை ஒழங்க RCS ல கையெழுத்து போட வரச் சொல் என தொந்தரவு செய்தனர் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குஆதரவாக சாணார்பட்டி காவல் துறை செயல் பட்டு கொண்டுள்ளது எனக்கு இன்னும் குற்ற விசாரணை இறதி அறிக்கை நகல் வழங்கவில்லை இது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த வித நடவடிக்கையும் இது நாள் வரை எடுக்கவில்லை ஆகவே திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்றுள்ள இந்த முறைகேடு மற்றும் சட்ட விரோத செயல்களை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் செய்தி வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete