Thursday, October 10, 2013

‘ஏர்மேன்’ பணிக்கான ஆட்கள் தேர்வு.






‘ஏர்மேன்’ பணிக்கான ஆட்கள் தேர்வு.

விமானப்படையில், ‘ஏர்மேன்’  பணிக்கான ஆட்கள் தேர்வு, ராமநாதபுரத்தில் வரும் 18 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை நடக்கிறது.

விமானப்படையில், ‘ஏர்மேன்’ பதவிக்கான, ஆட்களைத் தேர்வு செய்வதற்கான, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்க்களுக்காக, ராமநாதபுரம் மாவட்டம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்க்கில்  நடக்கிறது.

கடந்த 1994, பிப்., 1 முதல் 1997 மே, 31 குள் பிறந்தவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம். மதுரை, சேலம், சென்னை, கோவை, கடலூர், நீலக்கிரி, திருப்பூர், விழுப்புரம், தேனி, தர்மபுரி, வேலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுசுசேரி, மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்க்களுக்கு, 18 ந்தேதி, தேர்வு நடக்கிறது.

சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர், அரியலூர், கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாத்தபுரம், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, நாகை, பெரம்பலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு, இம்மாதம் 20 மற்றும் 21ம் தேதிகளில் நடக்கிறது.

பத்ததாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேரிவில் , கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில், 50 சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்கள், டிப்ளமோ படித்தவர்கள், இதில் கலந்து கொள்ளலாம்.

தேர்வு குறித்த விவரங்களை, சென்னை, தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தின், கமாண்டிங் அதிகாரியிடம் நேரிலோ அல்லது, 044 – 2239 0561,  2239 6565 ஆகிய எண்களில் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

இத்தகவல்களை பத்திரிக்கை தகவல் மையத்தின் ராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.

நன்றி தினமலர் நாள் 8—10-2013.

---------------------------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment