Sunday, June 28, 2009

போலீஸ் பணிக்கு 4,000 பேர் தேர்வு.


தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில், போலிஸ் பணிக்கு 4,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு 2,800 ஆண்களும், 1,200 பெண்களும் தேர்ந்தெடுக்கப்கடுவர். இப்பணிக்கு 29-7-2009 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் தான் எழுதி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் 150 ரூபாயிக்கான டிமாண்ட் டிராப்டை அனுப்ப வேண்டும். அதனுடன் ஆறு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய, சுயமகவரியிட்ட தபால் உறையையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு 25-10-2009 தேதி நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்ற பின் அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் உடல் கூறு அளத்தல், உடல் தாங்கும் திறனறிவுத் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். எழுத்துத் தேர்வு பொது அறிவு 50 மதிப்பெண், உளவியல் 30 மதிப்பெண் என இருபிரிவாக 80 மதிப்பெண்களிக்கு இருக்கும். எழுத்துத் தேர்வில் குறைந்த பட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

முழு விபரம் அறிய நேற்றைய (27-6-2009) தின மலர் பார்க்கவும்.

தகவல் அறிந்து பயன் பெர வேண்டி.

கோவை
28-06-2009.
--------------------------------------(காவல் தொடரும்)

Tuesday, June 9, 2009

கோவை சரகத்தில் மறுமலர்ச்சி



கோவை சரக டி.ஐ.ஜி. திரு.சிவனாண்டி, ஐ.பி.எஸ்., அவர்கள் கடந்த வருடம் 2008 ல் அக்டோபர் மாதத்தில் “மக்களைத் தேடி” என்ற மறுமலர்ச்சித் திட்டத்தை கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டக் காவல் துறையில் துவக்கி வைத்தார். இதில் புகார் அளித்த மக்களின் வீட்டுக்குச் சென்று எப்.ஐ.ஆர்., நகல் வழங்குவது. தற்போது இத்திட்டம் மீண்டும் செயல் பாட்டுக்கு வந்துள்ளது. திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட எந்த ஒரு சம்பவமானாலும் பொது மக்கள் வீட்டிலிருந்த படியே, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு போனில் தெரிவிக்கலாம். போலீசார் நேரடியாக வந்து புகார் பெற்று நடவடிக்கை மேற்கொள்வர். எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு மீண்டும் வீட்டுக்குக் கொண்டு வந்து அளிக்கப்படும். போனில் தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு போலீசார் வர வில்லை என்றால்.. நிவாரணம் கிடைக்க வில்லை என்றால்.. கோவை டி.ஐ.ஜி., அலுவலகத்தில் நேற்று (8-6-2009) திறக்கப்பட்ட “உதவி மையம்” ல் தொடர்பு கொண்டு 0422-3239494 அல்லது 94454 92368 என்ற எண்ணில் முறையிடலாம். புகார் பதிவு செய்து தேவையான உத்திரவுகளை பிறப்பிக்க அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு டி.ஐ.ஜி., கோவை சரகம் திரு சிவனாண்டி., ஐ.பி.எஸ்., அவர்கள் கூறியுள்ளார்கள். கோவையில் காவல் மறுமலர்ச்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்.

(நன்றி தினமலருக்கு)

--------------------------------------(காவல் தொடரும்)

Sunday, June 7, 2009

“எக்ஸ்ட்ரா டிரில்?’



“எக்ஸ்ட்ரா டிரில்’ என்றால் கேட்டகிரி இரண்டாம் காவல் பிறிவில் காவலர் முதல் தலைமைக் காவலர் வரை சிறு தண்டனைக்காக ஆயுதப்படை ஆய்வாளரால் அளிக்கப்படும் ஒரு தண்டனை, கூடுதல் கவாத்து என்று பெயர். இதற்கென்று ‘Minor Puhishments Register’ என்ற சிறுதண்டனைப் பதிவேடு - ஓராண்டிற்கானது - ஒவ்வொரு பிறிவிலும் இருக்கும். இது காவலர்கள் ஒரு குறிப்பிட்ட அலுவலுக்கு, அல்லது அலாரம் காலுக்கு காலதாமதமாக வருதல் போன்ற சிறு தவறுகள் செய்பவர்களை ஆய்வாளர் நேர் முக அறையில் உதவி ஆய்வவளர் ஆஜர்படுத்துவார். ஆய்வாளர் அதை நேரில் விசாரித்து உண்மையான காரணம் அறிந்து அதற்குத் தக்கவாறு சிறு தண்டனைகள் அளித்து அந்தப் பதிவேட்டில் பதிவு செய்வார். சில சமயம் அந்த நேர்முக அறையில் கூறும் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் அதில் அவரை மன்னித்தும் பதிவு செய்வார். இதில் வழங்கப்படும் தண்டனைகள் மணிக்கணக்கில் வழங்கப்படும். அதை உதவி ஆய்வாளர் ‘ஆர்டர்லி சார்ஜண்டிடம்’ அனுப்பி வைப்பார். அவர் அந்த தண்டனையை ஒரு என்.சி.ஓ. மூலம் காலை 11 மணி முதல் 12 மணிவரை டம்மி துப்பாக்கியுடன் நிறுத்தாமல் மைதானத்தில் எடுக்கப்படுவார். அதை பொது நாட்க்குறிப்பில் பதிவு செய்யப்படும். இது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே கூடுதல் கவாத்து எடுக்கப்பட வேண்டும். 3 மணி நேரம் என்றால் 3 நாட்கள் எடுக்கப்படவேண்டும். இது பி.எஸ்.ஓ வில் உள்ளது.

கடந்த 03-06-2009தேதி தின மலரில் தர்மபுரி ஆயுதப்படைக்காவலர் ஒருவர் கவாத்து துப்பாக்கியுடன் செய்வது போன்ற போட்டோ போட்டு அவர் அனுமதியின்றி இரவில் பயிற்சிக்காவலரை அரசு மோட்டர் சைக்கிளில் ஏற்றி வந்ததை எஸ்.பி. பார்த்து 3 மணி நேர கூடுதல் கவாத்து அளித்து அதை ஒரே நேரத்தில் செய்ய ஆணையிட்டதால் செய்கிறார் என்று போட்டிருந்தது. இது தான் கேட்டகிரி இரண்டிற்கு எஸ்.பி. செய்யும் காவல் மறுமலர்ச்சியா? நடக்கக் கூடாது ஒரு பேச்சுக்காக. அந்தக் காவலரை மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதை அவர் எண்ணி வருத்தப்பட்டு உயிர் போக்கிக் கொண்டாலோ, மயங்கி விழுந்து உயிர் பிறிந்தாலோ யார் பொறுப்பாவார்? தண்டனை அளிப்பவர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.

(நன்றி தினமலருக்கு)

--------------------------------------(காவல் தொடரும்)

Monday, June 1, 2009

சிறைத்துறையில் மறுமலர்ச்சியா?


இன்று (1-6-2009) மாலை 4-30 மணிக்கு கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் ( பி.ஆர்.எஸ்) சிறைத்துறையில் பணியாற்றத் தொடங்கவுள்ள ‘வார்டன்’ களுக்கு பயிற்சி நிறைவு நாள் விழா தமிழ் நாட்டில் முதல் முறையாக இங்கு நடைபெற்றது. இதில் மொத்தம் 265 பேர்களுக்கு காவல் துறையினரால் ஆறு மாத பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் சிறைத்துறை ஒழுங்கு முறைச் சட்டங்கள் மற்றும் காவலர்களுக்கு அளிக்கும் பயிற்சி போன்றே சிறப்பாக அளிக்கப்பட்டது. இந்த மறுமலர்ச்சிப் பயிற்சியை ஏற்படுத்தியவர் திரு.ஆர். நடராஜ், ஐ.பி.எஸ் சிறைத்துறை இயக்குனர் (டி.ஜி.பி.) சென்னை அவர்கள் ஆவார். இவர் காவல் துறையில் கேட்டகிரி ஒன்றில் பணியாற்றியவர். இவர் சிறைத்துறையில் இயக்குனர் ஆன பின்புதான் பல மாற்றங்களைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்திக் காட்டியவர். அந்த மாற்றங்களில் மறு மலர்ச்சியாக வார்டன்களுக்கு காவல் துறையினரால் பயிற்சி அளிக்க ஏற்பாடுசெய்தது. எண்ணற்ற மாற்றங்களைச் செய்து கொண்டுள்ளார். சிறையில் உள்ள கைதிகளை கைதி என்று அழைக்காமல் இல்லவாசிகள் என்று அழைக்கப்படுகின்றனர், ஞாயிறு நாட்களில் சிறையில் உள்ளவர்களைப் பார்க்க அனுமதித்தது. படிக்க ஏற்பாடு செய்தது, உள்ளிருப்பவர்களின் குடும்ப நலன் பேணுவது போன்ற பல மாற்றங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்தியா முழுவதும் 114 மத்திய சிறைகள், 27 திறந்த வெளிச் சிறைகள் உள்ளன. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் 3 திறந்த வெளிச்சிறைள், மொத்தம் 134 சிறைகள் உள்ளன.

இந்த கோவை காவலர் பயிற்சிப்பள்ளியின் முதல்வர் கீழே உள்ள படத்தில் இருக்கும் திரு.சிங்காரம் (எடி.எஸ்.பி.) அவர்கள். அவர் கேட்டகிரி இரண்டைச்சேர்ந்தவர். அவர் தான் இந்த புதிய பயிற்சியின் ஊன்றுகோல் போன்று சிறம்பட செயல் பட்டு பயிற்சி நிறைவடையச் செய்தவர். சிறைத்துறை இயக்குனர் பேசும் போது ஒரு வார்த்தை கூட அவரைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் சென்னையில் உள்ள பி.டி.சி. முதல்வரைப் பற்றித்தான் பேசினார். அவர் திரு. சண்முகராஜேஸ்வரன், ஐ.பி.எஸ்., கேட்டகிரி ஒன்றைச் சேர்ந்தவர். அவருக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த பாராபச்சம் ஏன்? உழைப்பவனை விட்டு உட்கார்ந்திருப்பவனைப் புகழ்வது போல் இச்செயல் உள்ளது. கனம் சிறைத்துறை இயக்குனர் அவர்கள் இச்செயலை சீர் தூக்கிப் பார்க்க வேண்டுகிறேன். நானும் அந்த நிறைவு விழாவுக்குப் பார்வையாளராகச் சென்றிருந்தேன். மறு மலர்ச்சிகள் மேலும் மாற வேண்டும்.

--------------------------------------(காவல் தொடரும்)