Sunday, June 7, 2009

“எக்ஸ்ட்ரா டிரில்?’



“எக்ஸ்ட்ரா டிரில்’ என்றால் கேட்டகிரி இரண்டாம் காவல் பிறிவில் காவலர் முதல் தலைமைக் காவலர் வரை சிறு தண்டனைக்காக ஆயுதப்படை ஆய்வாளரால் அளிக்கப்படும் ஒரு தண்டனை, கூடுதல் கவாத்து என்று பெயர். இதற்கென்று ‘Minor Puhishments Register’ என்ற சிறுதண்டனைப் பதிவேடு - ஓராண்டிற்கானது - ஒவ்வொரு பிறிவிலும் இருக்கும். இது காவலர்கள் ஒரு குறிப்பிட்ட அலுவலுக்கு, அல்லது அலாரம் காலுக்கு காலதாமதமாக வருதல் போன்ற சிறு தவறுகள் செய்பவர்களை ஆய்வாளர் நேர் முக அறையில் உதவி ஆய்வவளர் ஆஜர்படுத்துவார். ஆய்வாளர் அதை நேரில் விசாரித்து உண்மையான காரணம் அறிந்து அதற்குத் தக்கவாறு சிறு தண்டனைகள் அளித்து அந்தப் பதிவேட்டில் பதிவு செய்வார். சில சமயம் அந்த நேர்முக அறையில் கூறும் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் அதில் அவரை மன்னித்தும் பதிவு செய்வார். இதில் வழங்கப்படும் தண்டனைகள் மணிக்கணக்கில் வழங்கப்படும். அதை உதவி ஆய்வாளர் ‘ஆர்டர்லி சார்ஜண்டிடம்’ அனுப்பி வைப்பார். அவர் அந்த தண்டனையை ஒரு என்.சி.ஓ. மூலம் காலை 11 மணி முதல் 12 மணிவரை டம்மி துப்பாக்கியுடன் நிறுத்தாமல் மைதானத்தில் எடுக்கப்படுவார். அதை பொது நாட்க்குறிப்பில் பதிவு செய்யப்படும். இது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே கூடுதல் கவாத்து எடுக்கப்பட வேண்டும். 3 மணி நேரம் என்றால் 3 நாட்கள் எடுக்கப்படவேண்டும். இது பி.எஸ்.ஓ வில் உள்ளது.

கடந்த 03-06-2009தேதி தின மலரில் தர்மபுரி ஆயுதப்படைக்காவலர் ஒருவர் கவாத்து துப்பாக்கியுடன் செய்வது போன்ற போட்டோ போட்டு அவர் அனுமதியின்றி இரவில் பயிற்சிக்காவலரை அரசு மோட்டர் சைக்கிளில் ஏற்றி வந்ததை எஸ்.பி. பார்த்து 3 மணி நேர கூடுதல் கவாத்து அளித்து அதை ஒரே நேரத்தில் செய்ய ஆணையிட்டதால் செய்கிறார் என்று போட்டிருந்தது. இது தான் கேட்டகிரி இரண்டிற்கு எஸ்.பி. செய்யும் காவல் மறுமலர்ச்சியா? நடக்கக் கூடாது ஒரு பேச்சுக்காக. அந்தக் காவலரை மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதை அவர் எண்ணி வருத்தப்பட்டு உயிர் போக்கிக் கொண்டாலோ, மயங்கி விழுந்து உயிர் பிறிந்தாலோ யார் பொறுப்பாவார்? தண்டனை அளிப்பவர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.

(நன்றி தினமலருக்கு)

--------------------------------------(காவல் தொடரும்)

No comments:

Post a Comment