Tuesday, June 9, 2009

கோவை சரகத்தில் மறுமலர்ச்சி



கோவை சரக டி.ஐ.ஜி. திரு.சிவனாண்டி, ஐ.பி.எஸ்., அவர்கள் கடந்த வருடம் 2008 ல் அக்டோபர் மாதத்தில் “மக்களைத் தேடி” என்ற மறுமலர்ச்சித் திட்டத்தை கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டக் காவல் துறையில் துவக்கி வைத்தார். இதில் புகார் அளித்த மக்களின் வீட்டுக்குச் சென்று எப்.ஐ.ஆர்., நகல் வழங்குவது. தற்போது இத்திட்டம் மீண்டும் செயல் பாட்டுக்கு வந்துள்ளது. திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட எந்த ஒரு சம்பவமானாலும் பொது மக்கள் வீட்டிலிருந்த படியே, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு போனில் தெரிவிக்கலாம். போலீசார் நேரடியாக வந்து புகார் பெற்று நடவடிக்கை மேற்கொள்வர். எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு மீண்டும் வீட்டுக்குக் கொண்டு வந்து அளிக்கப்படும். போனில் தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு போலீசார் வர வில்லை என்றால்.. நிவாரணம் கிடைக்க வில்லை என்றால்.. கோவை டி.ஐ.ஜி., அலுவலகத்தில் நேற்று (8-6-2009) திறக்கப்பட்ட “உதவி மையம்” ல் தொடர்பு கொண்டு 0422-3239494 அல்லது 94454 92368 என்ற எண்ணில் முறையிடலாம். புகார் பதிவு செய்து தேவையான உத்திரவுகளை பிறப்பிக்க அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு டி.ஐ.ஜி., கோவை சரகம் திரு சிவனாண்டி., ஐ.பி.எஸ்., அவர்கள் கூறியுள்ளார்கள். கோவையில் காவல் மறுமலர்ச்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்.

(நன்றி தினமலருக்கு)

--------------------------------------(காவல் தொடரும்)

No comments:

Post a Comment