Monday, June 1, 2009

சிறைத்துறையில் மறுமலர்ச்சியா?


இன்று (1-6-2009) மாலை 4-30 மணிக்கு கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் ( பி.ஆர்.எஸ்) சிறைத்துறையில் பணியாற்றத் தொடங்கவுள்ள ‘வார்டன்’ களுக்கு பயிற்சி நிறைவு நாள் விழா தமிழ் நாட்டில் முதல் முறையாக இங்கு நடைபெற்றது. இதில் மொத்தம் 265 பேர்களுக்கு காவல் துறையினரால் ஆறு மாத பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் சிறைத்துறை ஒழுங்கு முறைச் சட்டங்கள் மற்றும் காவலர்களுக்கு அளிக்கும் பயிற்சி போன்றே சிறப்பாக அளிக்கப்பட்டது. இந்த மறுமலர்ச்சிப் பயிற்சியை ஏற்படுத்தியவர் திரு.ஆர். நடராஜ், ஐ.பி.எஸ் சிறைத்துறை இயக்குனர் (டி.ஜி.பி.) சென்னை அவர்கள் ஆவார். இவர் காவல் துறையில் கேட்டகிரி ஒன்றில் பணியாற்றியவர். இவர் சிறைத்துறையில் இயக்குனர் ஆன பின்புதான் பல மாற்றங்களைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்திக் காட்டியவர். அந்த மாற்றங்களில் மறு மலர்ச்சியாக வார்டன்களுக்கு காவல் துறையினரால் பயிற்சி அளிக்க ஏற்பாடுசெய்தது. எண்ணற்ற மாற்றங்களைச் செய்து கொண்டுள்ளார். சிறையில் உள்ள கைதிகளை கைதி என்று அழைக்காமல் இல்லவாசிகள் என்று அழைக்கப்படுகின்றனர், ஞாயிறு நாட்களில் சிறையில் உள்ளவர்களைப் பார்க்க அனுமதித்தது. படிக்க ஏற்பாடு செய்தது, உள்ளிருப்பவர்களின் குடும்ப நலன் பேணுவது போன்ற பல மாற்றங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்தியா முழுவதும் 114 மத்திய சிறைகள், 27 திறந்த வெளிச் சிறைகள் உள்ளன. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் 3 திறந்த வெளிச்சிறைள், மொத்தம் 134 சிறைகள் உள்ளன.

இந்த கோவை காவலர் பயிற்சிப்பள்ளியின் முதல்வர் கீழே உள்ள படத்தில் இருக்கும் திரு.சிங்காரம் (எடி.எஸ்.பி.) அவர்கள். அவர் கேட்டகிரி இரண்டைச்சேர்ந்தவர். அவர் தான் இந்த புதிய பயிற்சியின் ஊன்றுகோல் போன்று சிறம்பட செயல் பட்டு பயிற்சி நிறைவடையச் செய்தவர். சிறைத்துறை இயக்குனர் பேசும் போது ஒரு வார்த்தை கூட அவரைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் சென்னையில் உள்ள பி.டி.சி. முதல்வரைப் பற்றித்தான் பேசினார். அவர் திரு. சண்முகராஜேஸ்வரன், ஐ.பி.எஸ்., கேட்டகிரி ஒன்றைச் சேர்ந்தவர். அவருக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த பாராபச்சம் ஏன்? உழைப்பவனை விட்டு உட்கார்ந்திருப்பவனைப் புகழ்வது போல் இச்செயல் உள்ளது. கனம் சிறைத்துறை இயக்குனர் அவர்கள் இச்செயலை சீர் தூக்கிப் பார்க்க வேண்டுகிறேன். நானும் அந்த நிறைவு விழாவுக்குப் பார்வையாளராகச் சென்றிருந்தேன். மறு மலர்ச்சிகள் மேலும் மாற வேண்டும்.

--------------------------------------(காவல் தொடரும்)


No comments:

Post a Comment