Friday, January 23, 2009

மூன்றாவது கேட்டகிரி - பெட்டாலியன்.


மூன்றாவது கேட்டகிரி - பெட்டாலியன்.


இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக, காவல் துறையில் காவலராகச் சேர்வதற்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தாலே போதும் என்ற ஓர் நிலை இருந்தது.

காலப்போக்கில் குறைந்த கல்வித் தகுதி 8 வது வகுப்பு வரை படித்தவர்களை காவலர்களாக தேர்வு செய்து தமிழ் நாடு சிறப்பு காவல் படையிலேயே (மலபார் ஸ்பெசல் போலீஸ்) பணிக்காலம் முழுவதும் கேட்டகிரி 3 என்ற நிலையிலேயே பணியாற்றி அதிலேயே பதவி உயர்வுகள் பெற்று கமேண்டென்ட் (தளவாய்) என்ற உயர் பதவியைஅடைந்து, பணி ஓய்வு பெற்று வந்தனர். மலபார் ஸ்பெசல் போலீசின் பணி எல்லை என்பது இந்தியாவின் எல்லையை ஒட்டிய நேபாளம் வரை நீடிக்கப்பட்டிருந்த ஒரு காலம் இருந்தது. மலபார் ஸ்பெசல் போலீஸ் பணி என்பது அவசரப் படை என்ற நிலையில் கலவரப் பகுதிகளுக்குச் சென்று கலவரத்தை அடக்கவும் ஒடுக்கவும் என்ற வகையில் ஒரு மினி ராணுவப்படை போன்றே செயல்பட்டு வந்தது. அதற்குத் தகுந்தாற் போல் சீறுடைகள், அரைக்கால் டவுசர், சட்டை, ஙம் பூட், ஓல்ஸ் ஸ்டாப், பட்டி,இரும்புச்சட்டித்தொப்பி, கேடையம், லத்தித் தடி, கண்ணீர் புகை கிரினேடு, கண்ணீர் புகை ஙன், .303 துப்பாக்கி தோட்டாக்கள், எல்.எம்.ஜி.கன், ஸ்டென்கன், (தற்போது எ.கெ.47) ரிவால்வர், பிஸ்டல், முதலுதவி மருந்துப் பெட்டி, ஸ்டெச்சர் கை ஒலி பெருக்கி, ஆம்புலன்ஸ் வாகனம், பேருந்துகள் ஆகியவை தயார் நிலையில் இருக்கும், அதிகாரிகளும் இருப்பர்.

ஒரு பெட்டாலியன் என்பது 750 பேர் கொண்ட குழு. பெட்டாலியனுக்குப் பொருப்பாளர் கமேண்டன்ட்- தளவாய் ஆவார். டெப்டி கமேண்டன்ட், அசிடெண்ட் கமேண்டன்ட், ஆப்பீசர் கமேண்டிங், சப்இன்ஸ்பெக்டர் பின் அவில்தார், நாயக், காவலர் என இருப்பர். ஒரு கம்பனி என்பது 120 பேர் கொண்டது, அதில் மூன்று பெளட்டோன் இருக்கும்.கம்பனிக்குப் பொருப்பாளர் ஆப்பீசர் கமேண்டிங், பிளட்டோனுக்குப் பொருப்பாளர் உதவி ஆய்வாளர் (சப்இன்ஸ்பெக்டர்) ஆவார்.

பெட்டாலியன் இருக்கும் இடங்கள்-

முதல் பெட்டாலியன் திருச்சி.
இரண்டாவது பெட்டாலியன் ஆவடி.
மூன்றாவது பெட்டாலியன் வீராபுரம்.
நான்காவது பெட்டாலியன் கோவைபுதூர்.
ஐந்தாவது பெட்டாலியன் ஆவடி எஸ்.எம்.நகர்- மகிளா பெட்டாலியன்.
ஆறாவது பெட்டாலியன் மதுரை.
ஏழாவது பெட்டாலியன் போச்சம்பள்ளி.
எட்டாவது பெட்டாலியன் டெல்லி-தீகார் ஜெயில் பாது காப்பு.
ஒன்பதாவது பெட்டாலியன் மணிமுத்தாறு.
பத்தாவது பெட்டாலியன் உளுந்தூர் பேட்டை.
பதினொன்றாவது பெட்டாலியன் ராஜபாளையம்.
பன்னிரண்டாவது பெட்டாலியன் மணிமுத்தாறு- கோஸ்டல் கார்டு.
பதிநான்காவது பெட்டாலியன் பழனி-இ.பி. கார்டு.
சுந்தரம்பள்ளியில் ஒரு பட்டாலியன்
வீராபுரம்- பட்டாலியன் - ஸ்பெசல் போர்ஸ்.

ஆகிய இடங்களில் தலைமையிடமாகக்கொண்டு பணியாற்றி வருகிறார்கள் தேவைப்பட்டால் தமிழ் நாட்டில் எந்தப்பகுதிக்கும் உத்திரவுப்படி அவசர நிமித்தமாகச் செல்வர்.

--------------------------------------------(காவல் தோடரும்)

Wednesday, January 21, 2009

காவல் துறையின் 3 கேட்டகிரிகள்

காவல் துறையின் 3 கேட்டகிரிகள்.

தமிழ்நாடு காவல் துறை பழைய கால முறைப்படி தாலூக்கா காவல் பிரிவு கேட்டகிரி ஒன்று என்றும், (லோக்கல் போலீஸ்) இரண்டாவது கேட்டகிரி மாவட்ட ஆயுதப்படை பிரிவு என்றும்,(ரிசர்வ்போலீஸ்) மூன்றாவது கேட்டகிரி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை அதாவது பெட்டாலியன் (மலபார் ஸ்பெசல் போலீஸ் என்று ஆதியில்) என்றும், நிர்வாகம் மற்றும் மாறுபட்ட அலுவல் காரணமாகவும் ஆரம்ப காலத்தில் பிரிக்கப்பட்டது.

இந்த முப்பெரும் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான அலுவல்களை வகுத்தார்கள். இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளனவாகவே அமைந்தன. அவ்வாறு அலுவல்கள் செய்யும் போது தற்காலிகமாக அடுத்த கேட்டகிரி செய்யும் அலுவலை, ஆட்கள் பற்றாக்குறை காரணமாகச் செய்தார்கள்.

இந்த மூன்று கேட்டகிரிக்கும் காவல் துறை தலைவர் ஆரம்பத்தில் ஒருவர் மட்டுமே இருந்தார். பின் காலப்போக்கில் காவல் துறைக்கு இயக்குனர்கள் பலர், துணை இயக்குனர்கள் பலர், துறைத்தலைவர்கள் பலர் என மேற்பார்வை செய்யும் அதிகாரிகள் அதிகரித்தார்களே ஒளிய கீழ் மட்டத்தில் காவலர்கள் எண்ணிக்கை தேவைக்குத் தக்கவாறு அதிகரிக்கப் படவில்லை. அந்தக் காலத்தில் ஒவ்வொரு மாதமும்
15 ந்தேதி காவல் துறைக்கு ஆழ் எடுத்துப் பத்து மாதப் பயிற்றசிக்கு காவல் பயிற்றசிப் பள்ளிக்கு அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். அதுவும் மாவட்ட காவல் கண்காணிபளரே காவலரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தார். அதனால் பணி நிறைவு பெரும் போது அடுத்த காவலர் வந்து கோண்டே இருப்பார் அந்த முறை தற்போது மாற்றப்பட்டது. தற்போது ஒரே நேரத்தில் தேர்வாணையம் மூலமாக ஆயிரக்கணக்கில் ஆட்கள் தேர்ந்தெடுத்து பயிற்சி காலத்தையும் (4 மாதம்) குறைத்து தேர்வு நடக்கிறது. இருந்தும் காவலர் பற்றாக்குறை இருந்து கொண்டு தான் உள்ளது. இதனால் வேலைப்பழு அதிகரித்தும், வேலை செய்யும் நேரமும் அதிகறிப்பால் படித்த காவலரிடையே மன உழச்சலால் ஒழுக்கமின்மை, கீழ்படியாமை அதிக நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்வது அந்த விடுப்பு நேரத்தில் ஒழுக்கத்திற்கு மாறான செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தமது குறைகளை எடுத்துச்சொல்ல அவர்களுக்கு என்று தனிச்சங்கம் வேண்டும் என்று கேட்டார்கள். அதுவும்
27-6-1979 ந்தேதி காவல் துறைத் தலைவர் அவர்கள் திருமிகு இ.எல்.ஸ்ட்ரேஸி,ஐ.பி., மூன்று விதமான சங்கங்களை அமைக்க அனுமதி அளித்தார்கள். காவலர், தலைமைக்காவலர்களுக்கோர் சங்கமும், உதவி ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், ஆய்வாளர்க்கோர் சங்கமும், துணைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்க் கோர் சங்கமும், என மூன்று சங்கங்கள். அவை செயல்பாடு திருப்தியின்மையே.

--------------------------- (தொடரும்)

Monday, January 19, 2009

காவல் தோற்றம்

‘காவல்’ இந்த சொல்லை நோக்கும் போது யாருக்கு யார் காவல் என்ற வினா எழும். ஆதிகாலத்தில் சமூகம் உண்டான போது பலம் மிக்கவர் அந்த சமூகத்திற்குப் பாதுகாவலராகவும், தலைவனாகவும் இருந்துள்ளார்கள். பின் செல்வங்கள், உணவுப்பொருட்கள் ஒரே இடத்தில் சேரும் போது அந்த தனி நபருக்குக் காவல் தேவைப்பட்டது. இல்லாதவன் இருப்பவர்களிடம் அபகறிக்கும் செயல்களைக் கட்டுப்படுத்த காவல் தேவைப்பட்டது. அவ்வாறு தேவைப்பட்டபின் அது படையாக மாறியது. படையின் மற்றொருபகுதி காவலாக மாறி ஆங்கிலேயர் காலத்தில் காவல் துறையாக மாற்றம் அடைந்து 1861 ஆண்டிலிருந்து ஒரு காவல் ஆணைகளாக (போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர் ) உருவாகினார்கள் . அன்றிலிருந்து காவல் ஆணைப்படி காவல்துறை செயல்படத்துவங்கியது. அந்த 1861ஆண்டிலிருந்து அதிக மாற்றம் இல்லாமல் காவல் துறை இன்னும் செயல்பட்டு வருகிறது.அதில் ஏகப்பட்ட குறை நிறைகள் இருப்பதால் தற்போது மூன்றாவது போலீஸ் கமிசன் குழு அமைத்து அதனை பரிந்துறைகள் தற்போதுள்ள அரசுக்கு அளிக்க உள்ளார்கள். அந்தகுழு பின்வருமாறு-

தலைவர் திருமிகு பூர்ணலிங்கம், ஐ.எ.எஸ் அவர்கள்
துணைத்தலைவர் திருமிகு வெங்கடேசன் எக்ஸ் எம்.பி. அவர்கள்.
திருமிகு இராமானுஜம் ஐ.பி.எஸ். அவர்கள்.
திருமிகு இராமச்சந்திரன் ஐ.பி.எஸ். அவர்கள்.
திருமிகு ஜோன்ஸ்ரூசோ அவர்கள் ஆகியோர் ஆவர்.

இந்த நிலையில் காவல் துறை பற்றி மக்களுக்கு ஒரு விளிப்புணர்வு ஏற்படுத்தவும் மாற்றங்கள் பற்றி ஆலோசனை ஏற்றுக்கொள்ளவும் இக்குழு நல்லவைகளை ஏற்று மாண்பு மிகு தமிழக முதல்வர் அவர்களுக்குப் பரிந்துறை செய்ய வேண்டி இந்த வலைப்பதிவை அளிக்கவுள்ளேன் குறையிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். நான் க.பொ.குப்புசாமி காவல் துணைக்கண்காணிப்பாளர் (D.S.P. Category ii ) 34 வருடங்கள் பணியாற்றி பணிநிறைவு பெற்றுள்ளேன். இருப்பிடம் கோவை-641 037.

எனது முந்தைய வலைப்பதிவுகள்:-

1. மூலிகை வளம். http://mooligaivazam-kuppusamy.blogspot.com/
2. ஜாதகம் இல்லா ஜோதிடம். http://www.kuppusamy-prasna.blogspot.com/
3. தா(வரங்கள்). http://crop-kuppu.blogspot.com/


(அடுத்து காவல் துறையின் முப்பிறிவுகள்- தொடரும்.)