Sunday, August 23, 2009

ஆயுதப்படை பெண் எஸ்.பி., மீது செக்ஸ் புகார்

சென்னை,ஆக.23-
பெண் எஸ்.பி., மீது, பெண் காவலர் கொடுத்த
திடுக்கிடும் செக்ஸ் புகார் குறித்து, கூடுதல் டி.ஜி.பி.,
யின் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை அடுத்த ஆவடியில், தமிழ்நாடு
சிறப்பு போலீஸ் படையின் ஐந்தாவது
பட்டாலியன் உள்ளது. அதில் பணியாற்றும்
போலீஸ் காவலர் ராஜபாக்கியம் நேற்று கூடுதல்
டி.ஜி,பி., (நிர்வாகம்) லத்திகா சரணிடம் ஒரு புகார் அளித்தார்.
அப்புகாரில் தெரிவிக்கப்பட்டிருப் பதாவது:

எங்களது பட்டாலியன் கமாண்டன்ட்டாக இருப்பவர் எஸ்.பி.,
வெண்மதி. இவர் வீட்டில் வேலை
செய்வதற்காக
‘ஆர்டலி’ யாக பெண் காவலர்கள் சுழற்சி
முறையில் செல்வது வழ்க்கம். சில நாட்களுக்கு
முன் நான், ஆர்டலி யாக சென்றேன். அப்போது, அவர்
குளிப்பதற்கு, ஒருதுண்டை மட்டும் கட்டிக்கொண்டு
வந்தார்.

குளிப்பதற்கு முன், தனக்கு எண்ணெய் ‘மசாஜ்’
செய்து விடச் சொன்னார். அவரைப் போலவே
எனது உடைகளையும் கழற்றச் சொல்லி வற்புறுத்
தினார். நான்உடைகளைக் கழற்றிய பின், எனக்கு
செக்ஸ் டார்ச்சர்கொடுத்தார். பின் அவரது கணவரும்
துண்டைக் கட்டிக்கொண்டு வந்தார். அவருக்கும்
இதே முறையில் மசாஜ் செய்துவிடவும், அவருக்கு
‘ஒத்துழைக்கவும்’ வேண்டும் என்று மிரட்டினார்.

உடனே நான், அங்கிருந்து வெளியேறி, ஊருக்குச் சென்று
விட்டேன். மீண்டும் வந்து பார்த்த போது, எனது அறை
பூட்டப்பட்டிருந்தது. ‘எஸ்.பி., யை பார்த்த பின்னரே பணியில்
சேர வேண்டும்’ என்று, சக போலீசார் கூறினர். அவரிடம்
சென்றால் எனக்கு மெமோ கொடுத்து, சம்பள உயர்வை
தடுத்து விடுவார். எனக்குப் பணி பாதுகாப்பு
அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இப்புகாரையடுத்து, கூடுதல், டி.ஜி.பி., லத்திகா சரண்
உத்திரவின்படி, தனிப்படை போலீசார், ஆவடி பட்டாலியன்
பெண் போலீசாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது
அவர்களிடம், ‘ஆர்டலி’ பணியில்
நியமிக்கப்படும் அனைத்து பெண் போலீசாரிடமும்
எஸ்.பி., வெண்மதி இதே முறையில் செக்ஸ் டார்ச்சர்
கொடுக்கிறார், அதை தட்டிக்கேட்டடல், மெமோ
கொடுக்கிறார்.

குறிப்பிட்ட அளவிற்கு மேல் மெமோ பெற்றால் எங்களது
சம்பள உயர்வே பபதிக்கப்படும். எனவே, மெமோவை
காட்டி மிரட்டியே பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்.
அவருக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு கொடுத்த
மெமோக்களால், 90 பேர் சம்பள உயர்வு பாதி
க்கப்பட்டுள்ளது’ என்று, பெண் போலீசார் புலம்பித்
தீர்த்தனர்.

இந்தப் புகார் குறித்து, எஸ்.பி., வெண்மதியிடம் கேட்ட
போது, “என் மீது கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டு
களும் தவறு. பணியில் ஒழுங்கீனம், கவனக்குறைவாக
இருப்பவர்களிக்கு மட்டுமே மெமோ கொடுத்தேன்.

கண்டிப்பாக நடந்து கொளவதால் தான், என் மீது இதுபோன்ற
அவதூறு புகார்களை கூறுகின்றனர். மற்றபடி நான் மனசாட்சி
யோடு தான் பணி புரிகிறேன். எனது தரப்பு நியங்களை உயரதிகாரி
களிடம் விளக்கி உள்ளேன்.” என்றார்.

இந்தச் செய்தி இன்று 23-8-2009 தினமலரில் வெளியிடப்
பட்டுள்ளது. இதிலிருந்து கேட்டகிரி 3 ல் ஆர்டர்லி முறை
அதாவது அதிகாரிகளின் வீடுகளுக்கு காவலர்கள் அனுப்பும் முறை
முழுதும் ஒழிக்கப்படவில்லை என்று தெறிகிறது.

அடுத்து கேட்டகிரி 3 க்கு கேட்டகிரி ஒன்றிலிருந்து
எஸ்.பி., யை கமேண்டண்டாகப் பதவி மாறுதல்
செய்யும் போது விரக்தியடைந்து இது போன்ற
கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார்கள். மேலும் விசா
ரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெறியலாம்.
காவல்துறையில் இது போன்ற மறு மலர்ச்சி
தேவையில்லை. நல்லது நடக்க மாற்றங்கள் தேவை.


------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment