Thursday, July 16, 2009

சாதனைமேல் சாதனை கோவையில்!


கோவை மாநகரப் போலீஸ் கமிஷனர் திரு.பி.சிவனாண்டி ஐ.பி.எஸ்., அவர்கள் கோவை மாநகரில் உள்ள 15 காவல் நிலையங்கள் அவர்களது ஏரியாவில் ஏழையாக உள்ள 5 வது படிக்கும் மாணவ, மாணவிகளை ஒவ்வொரு காவல் நிலையமும் இரண்டு பேருக்குக் குறையாமல் தத்தெடுத்து அவர்களது கல்லூரிப்படிப்பு முடியும் வரை தொண்டு நிறுவனங்கள் மூலம் கல்வி உதவித் தொகை அளித்து பட்டதாரிகள் ஆக்க வேண்டும் என்று செயல் படுத்தியுள்ளார். அதற்காக நடைபெற்ற விழா ஒன்றில் 15-7-2009 அன்று ரூ.2.42 லட்சம், 36 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார். இந்த கல்வி உதவித் தொகை தன்னார்வம் கொண்டவர்களும், தொண்டு நிறுவனங்கள் மூலமும் பெற்று முறைப்படி கணக்கு வைத்துப் பராமறிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இவ்வாறு உதவி செய்யும் போது பொது மக்களுக்கும் காவல் துறைக்கும் உள்ள உரவு பன் மடங்கு அதிகரிக்கும் என்றார். கோவை மாநகரில் ஐ.ஜி அவர்களின் சாதனைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. இவை காவல் துறையில் மறுமலர்ச்சிதானே!


---------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment