Tuesday, July 7, 2009

‘மக்களைத் தேடி’ கோவை மாநகரிலும் தொடருமா?


கோவை சரகத்தில் புதுமையை ஏற்படுத்திய டி.ஐ.ஜி., திரு.சிவனாண்டி, ஐ.பி.எஸ்., அவர்கள் ஐ.ஜி யாகப் பதவி உயர்வு பெற்று 6-7-2009 அன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்று அளித்த பேட்டி:-

“மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனடியாக தீர்வு காணப்படும். நகரில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க இரவு பகல் பாராமல் போலீசார் முழு வீச்சில் செயல்பட, போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். புகார் மனுக்களுடன் போலீஸ் ஸ்டேசனுக்கு வரும் பொதுமக்களை, போலீசார் உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும், குற்றகளை கேட்டு உடனடியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும்.

போலீஸ் ஸ்டேசனில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை யெனில், உதவி கமிஷனர், துணைக் கமிஷனரிடம், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இதற்கும் நடவடிக்கை இல்லையெனில், என்னை தொடர்பு கொள்ளலாம், சம்பத்தப் பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார்தாரரின் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படும். மேலும், புறநகரில் செயல் பட்டு வந்த ‘வீடு தேடி எப்.ஐ.ஆர்., வழங்கும் பணி’ நகரிலும் அமல்படுத்தப்படும்.

மாநகர போலீஸ் எல்லையின் சுற்றளவு 10 கி.மீ.,ருக்குள் தான் உள்ளது, இதில், 15 ஸ்டேசன்கள் செயல் படுகின்றன. எனவே, இத்திட்டத்தின் மூலம் அதிக பட்சமாக 30 நிமிடங்களில் புகார்தாரரின் வீட்டுக்குச் சென்று எப்.ஐ.ஆர். நகல் தர முடியும். இத்திட்டம் உடனடியாக செயல் பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

நகரில் நாள்தோரும் நடக்கும் விபத்துக்களை குறைக்க போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்படும், கூடுதல் போலீசார் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவர். இருப்பினும், பொதுமக்களும் சாலை விதிகளை கடைபிடித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். பொதுமக்களின் குறைகளைக் கேட்க, 15 நாட்களுக்கு ஒரு முறை கமிஷனர் அலுவலகத்தில் குறை கேட்கும் முகாம் நடத்தப்படும். இம்முகாமில், பங்கேற்கும் பொது மக்கள் தாங்கள் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து நேரில் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்க போலிஸ்சார் தயக்கம் காட்டியதாகவோ அல்லது தட்டிக்கழித்த தாகவோ தெரிந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

---------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment