Monday, November 5, 2012

‘ஆர்டர்லி’ போலீசார்.





எடுபிடி வேலை!
உயரதிகாரிகளின் வீடுகளில் 5,000 போலீசார்……..
ஊதியமாக ஆண்டுக்கு ரூ.120 கோடி ‘வேஸ்ட்’

தமிழக காவல் துறை உயரதிகாரிகளின் வீடுகளில் 5,000 போலீசார் ‘ஆர்டர்லி’ (எடுபிடி) வேலை செகின்றனர். போலீஸ் வேலையே செய்யாத இவர்களுக்கு, ஆண்டு தோறும் 120 கோடி ரூபாய் வரை, அரசு கஜானாவில் இருந்து ஊதியமாக வளங்கப்பட்டு, நிதி வீணடிக்கப்படுகிறது.

தமிழக காவல் துறையில் காவலர், ஏட்டு, எஸ்.ஐ. , இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., கூடுதல் எஸ்.பி., எ.ஸ்,பி, டி.ஐ.ஜி., ஐ.ஜி.,  ஏ.டி.ஜி.பி., டி.ஜி.பி., பதவி நிலைகள் வரை, ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 5000 காவலர்கள், போலீசார் மற்றும்  அதிகாரிகளின் வீடுகளில், ‘ஆர்டர்லி’ வேலை செய்கின்றனர்.

இவ்வேலையில் ஈடுபட்டுள்ள போலீசார், அன்றாட போலீஸ் நடவடிக்கைகளில் பங்கேற்பதில்லை. அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடிவேலை பார்த்துக் கொண்டே, பதவி உயர்வு, ‘காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்ததாக “ரிவார்டு’ களை பெற்றுக்கொள்கின்றனர். அதிகாரிகளின் சிலரது வீடுகளில் எஸ்.ஐ. அந்தஸ்தில் உள்ளவர்களும்  கூட, எடுபிடி வேலை செய்கின்றனர்.

காவலர், ஏட்டு எஸ்.ஐ., களின் மாத ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை, தமிழகம் முழுவதும் பணியாற்றும் 5,000 போலீஸ் ‘ஆர்டர்லி’ களுக்கு, அரசு கஜானாவிலிருந்து, மாதம் தோறும் 10 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.

இந்த ஊதியத்தைப் பெறும் போலீசார், அதற்குறிய வகையில் போலீஸ் பண்யாற்றுவதில்லை. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘ஆங்கிலேயர் கால ‘ஆர்டர்லி’ முறையை ஒழிக்க, தமிழகத்தில் 1984 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. என்றும் , டி.எஸ்.பி. வீடு முதல் உயரதிகாரிகளின் வீடு வரை அனைத்து மாவட்டத்திலும் ஆர்டர்லி முறை உள்ளது. இதை ஒழிக்க, அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகள், போலீஸ்பணியாற்றுதல்,, மற்ற போலீசாருக்கு கடும் பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே, இந்த அடிமை முறைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’. என்றனர்.

ஆர்டர்லி முறை குறித்து, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.. அதிகாரி ஒருவர் கூறியதாவது-

போலீஸ் உயரதிகாரிகள் வசிக்க, அரசு சார்பில் பங்களா வழங்கப்படுகிறது. மாவட்டம், மாநகரப் போலீஸ் நிர்வாகங்களில் இது போன்ற பங்களாக்கள் உள்ளன. இவற்றைப் பராமரிக்க ஆட்கள் தேவை. வெளியாட்களை வேலைக்கு அமர்த்தினால், சம்பளம் தர வேண்டியிருக்கும், நான்கு ஐந்து பேரை வேலைக்கு வைத்தால், மாதம் தோறும் குறைந்தது 30 ஆயிரம் ரூபாய் வரை, அதிகாரி தான் ஊதியம் வழங்க் வேண்டியிருக்கும். அதுவே, போலீசாரை பணியமரத்தினால் பிரச்சனை இல்லை.

இந்த வேலைகளில் ஈடுபடுமாறு, விருப்பமில்லாத போலீசாரை நிர்பந்திப்பதில்லை, அவ்வாறு செய்யவும் முடியாது. காவலர்கள் சிலர், காலங்காலமாக, ஆர்டர்லியாகப் பணியாற்றி, அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற்றவர்களாக இருப்பர்.  அவர்களே, தொடர்ந்து அப்பணியில் நீடிப்பர். புதிய நபர்களை அழைத்தால் வர மாட்டார்கள்.

போலீஸ் உயரதிகாரிகளின் குடும்பத்துக்கும் சில, அன்றாட தேவைகள் உள்ளன.

24 மணி நேரமும் துறைசார்ந்த பணியில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். அவ்வாறு இருப்பவர்கள், குடும்பத்துக்கான தேவைகளுக்கு போலீசாரின் உதவியை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது.

அரசாணை மூலமாக, இது போன்ற நிலையை ஒழிக்க முடியுமா என்பது சந்தேகமே. அதே வேளையில், அர்டர்லிகளை அதிக அளவில் வைத்துக் கொள்ளாத உயரதிகாரிகளும் நிறையப் பேர் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-------------------------------------------------------------------------(தொடரும்)
நன்றி தினமலர்.

No comments:

Post a Comment