Wednesday, November 18, 2009

போலீஸ் சங்கம் என்ன செய்கிறது?



கோவை மாவட்டத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரிகள்
அதாவது இன்ஸ்பெக்டர் முதல் எஸ்.பி. வரை ஒரு
சங்கத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினர்.
பதிவு எண்-192/2006. கடந்த சென்ற காலங்களில்
சங்கம் யாருக்கு என்ன செய்தது என்பதைக் காண்போம்.

14-12-2006 ல் ஒரு வக்கீல் பெண் காவலர் மீது மோதிய
வழக்கில் விசாரணைக்கமிசன் நடைபெற்ற போது கமிசன்
முன் நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை சம்பவம்
எடுத்துச்சொல்லி அறிக்கை சமர்ப்பித்தது.

சென்னையில் சட்டக் கல்லூரியில் அடிதடி நடந்தபோது
காவலர்கள் வேடிக்கைபார்த்துக் கொண்டு மட்டும் இருந்
தனர் என்று மற்றவர்கள் புலம்பிய போது இந்த சங்கம்
அந்தக் காவலர்கிளின் கைகள் அரசியல் வாதிகளின்
ஆணையால் கட்டப்பட்டிருந்ததை பத்திரிக்கைகளுக்கு
விளக்கியது.

பிப்ரவரி மாதத்தில் உயர்நீதி மன்ற வளாகத்தில்
வக்கீல் களுக்கும் காவல் துறையினருக்கும் நடந்த
மோதலில் காவல் துறைக்கு உதவிக்கரம் கொடுக்க
யாரும் முன் வராதபோது இந்த சங்கம் குடும்பத்து
டன் தற்போது பணியில் இருக்கும் காவலர் குடும்
பஙுகளுடனும் நகரின் முக்கிய இடத்தில் ஒரு நாள்
தர்ணா இருந்து பத்திரிக்கை மீடியாக்களை
தன்வயம் இழுத்தது.

1998 ல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் 58
அப்பாவி மக்களின் உயிறைக்குடித்தும் 250 க்கு மேல்
காயம் அடைந்த வழிக்கில் எஸ்.ஐ.டி. குழுவினர்
திறம்பட கடுமையாக உளைத்து 158 கோடூர குற்றவாளி
கழுக்கு தண்டனை பெற்றுத் தந்தனர். ஆனால் எஸ்.ஐ.டி
குளுவினரின் நற்பணியை அரசோ, காவல்துறையோ
கண்டு கொள்ளவும் இல்லை பாராட்டவும் இல்லை
அப்போது இந்த சங்கம் ஓய்வு பெற்ற காவல் துறை
இயக்குனரை வரவழைத்து அதில் பங்காற்றிய
அனைவரையும் கவுரவித்துப் பாராட்டிப் பத்திரங்களை
வழங்கியது. இது பத்திரிக்கைகளில் பரவலாக வியந்
தனர்.

கோவை மாநகரக்காவல் ஆயுதப்படை குடியிருப்பு
வளாகத்தில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு சில
ஆயிரம் ரூபாய்களுக்கு நல்ல அறிவை போதிக்கும்
புத்தகங்கள் வாங்கி அன்பளிப்பாக காவலரின்
குழந்தைகளின் அறிவு வளர்க்க அளிக்கப்பட்டது.

கோவையில் குளிர் காலங்களில் ஏழை அனாதை
கள் குளிரால் துன்பப்படுபவர்களுக்கும், அரசு
மருத்துவமனையில் குளிரில் நடுங்கும் வயோதிகர்
களுக்கும் பல ஆயிரம் ரூபாயில் போர்வைகள்
வாங்கி அவர்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.
இதில் செயலாளர் திரு.வேலு மற்றும் துணைச்
செயலாளர் திரு வெள்ளிங்கிரி இருவரும் சொந்தச்
செலவில் தரமான போர்வைகள் வாங்கி இரவில்
வண்டியில் நகர் மூழுதும் சுற்றி சாலை ஓரங்களில்
பேருந்து நிறுத்தங்களில் நடுங்கி உரங்கும் வழிப்
போக்கர்களுக்கு போர்வைகளைப் போர்த்தி வந்தனர்.
இது மனதை நெகிழ வைத்தது.

மேலும் கோவை மாநகராட்சி ஆர்.எஸ.புரத்தில்
ஒரு அனாதை விடுதி நடத்தி வருகிறது. அதில்
உள்ள அனைவருக்கும் ஒரு விழா ஏற்பாடு செய்து
உணவும் போர்வைகள், துண்டுகளும் அளிக்கப்பட்டது.
நகராட்சி கமிசினர் இச்சங்கத்தைப் பாராட்டிப்
பேசினார்.

இந்தச் சங்கம் தற்பொழுது அலுவலில் உள்ள காவலர்
மற்றும் அதிகாரிகளுக்காக முறையான சட்டத்திற்குட்பட்ட
எந்த செயலானாலும் அவர்களுக்காகத் தோழ் கொடுக்கும்
என்று இதன் தலைவர் திரு. இராஜசேகரன் தெறிவித்தார்.

-----------------------------(காவல் தொடரும்)


No comments:

Post a Comment