Friday, April 24, 2009

மனித நேயம்


தினமலர்-கோவை தேதி 23-4-2009 ல் காவல் துறை உயரதிகாரி திரு சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். சொன்னது.

இரவு 10 மணிக்கு, முகப் பேரிலிருக்கும் என் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். மதுரவாயல் அருகே வந்துகொண்டிருக்கும் போது, சாலையோரம் ஒரு கூட்டம். என்ன வென்று காரை நிறுத்திப்பார்த்தால், ஒரு மனிதர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அப்போதுதான் அந்த விபத்து நடந்திருக்கிறது.

டிரெய்லர் லாரி அடித்து, இழுத்துக் கொண்டு போனதில் அவருக்கு பலத்த காயங்கள். கால் துண்டாகி தொங்கிக்கொண்டிருந்தது. சுற்றியிருப்பவர்கள் யாருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. நான் உடனே ஆம்புலன்சுக்குப்போன் செய்தேன். அடிபட்டவர், தான் ஒரு வக்கீல் என்று மெல்ல சொன்னார். நிமிடங்கள் ஓடின. ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை. ஆட்டடவை நிறுத்தி, அடிபட்ட வக்கீலைத் தூக்கிப் போட்டு, உடன் என் கான்ஸ்டபிளையும் ஏற்றினேன். நான் காரில் முன்னே பைலட் போல செல்ல, ஆட்டோ பின்னால் வேகமாக வந்தது. அதற்குள் மருத்துவ மனைக்கு தகவலைச் சொல்லி விட்டேன்.

அங்கே போய்வக்கீலை ஐ.சி.யு. வில் சேர்த்தோம். அவருக்கு உடனடியாக ரத்தம் தேவைப்பட்டது. இன்னொரு பெரிய மருத்துவமனையில் அந்த அரியவகை ரத்தம் இருப்பதை அறிந்து, அந்த மருத்துவ மனைக்கு விரைந்தோம். அங்கே சென்ற போது இரவு இரண்டு மணி. இதற்கு இடையே அந்த வக்கீல் வீடிற்குத் தொடர்பு கொண்டுதகவல் கொடுத்தோம்.

மொத்தம் எட்டு ஆப்பரேசன் செய்தால் தான் காலைக் காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை. நிறைய ரத்தம் வேண்டி இருந்தது. சில பேருக்கு மட்டுமே இருக்கும் அந்த அரிதான,’ஏ’ நெகடிவ் வகை குரூப் கொண்ட விஜயகுமார் என்ற காவலர் சத்தியமங்கலத்தில் இருப்பது எனக்குத் தெரியவந்தது.

உடனே அவரை சென்னைக்கு வரச்சொன்னேன்.அதே போல், இங்கே சிட்டிபாபு என்ற காவலரையும் வரச்சொன்னேன். அவர்களும் காலையிலேயே வந்து விட்டனர். பிறகு, ஆப்பரேஷன் செய்து அவரது உயிரையும், காலையும் காப்பாற்றினோம். மனிதனுக்கு மனிதன் உதவி வாழ்வதுதான் வாழ்க்கை.

--------------------------------------(காவல் தொடரும்)
---------------------------------------------------------------------------

2 comments:

  1. here save humanity, but past high court clash?
    everywhere no humanity, think police

    ReplyDelete
  2. Mr. Jack sir, thank you very much on seeing my blog. Police are also human being unethical behavour of the mass espceally the so called educated behaviour rudly than humanity become a question mark?
    -------
    திரு ஐயா அவர்களே மிக்க நன்றி. காவல் துறையைச் சேர்ந்தவர்களும் மனிதர்களே. படித்தவர்களே சட்ட விரோதமாக நடக்கும் பொழுது காவ்வல் துறை வாழாவிருக்காது அப்போது மனித நேயத்தை பார்பார்களா என்பதுஉ கேள்விக் குறி தான்.
    அன்புள்ள
    குப்புசமி.க.பொ.
    கோவை-37

    ReplyDelete