Saturday, March 14, 2009

ஆயுதப்படை அலுவல்.

ஆயுதப்படை என்ற கேட்டகிரி 2 ன் காவல் பிரிவு ஒரு அடிமைப் பட்டாளம் போல் உள்ளது. அதை கவனிக்க மேல் அதிகாரிகளே கிடையாது. மாற்றாந்தாயின் குழந்தையைப் போல அவர்களின் குடும்ப நலன் பேண யாரும் அதிக அக்கரை கொள்வதில்லை. ஆயுதப்படை அதிகாரிகள், காவலர்கள் ஒரே மாதிரியான பணிகளைச் செய்து அலுத்து விட்டார்கள். அது அவர்களுக்கு மன உழச்சலைக் கொடுக்கிறது.

அந்தக்காலத்தில் கோவை, மதுரை, மங்களூர் ஆகிய இடங்களிலிருந்து கைதிகளை வேறுபட்ட வழக்குகளுக்காக நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டி வழிக்காவல் அலுவல் செய்தனர். பின் பல்வேறு வழிக்காவலுக்காக அதிகாரிகளும் காவலர்களும் பயன்படுத்தப் பட்டனர். பின் காலப்போக்கில் அமைச்சர்கள் வெளியில் செல்லும் போது வழிக்காவல் செய்தனர். அடுத்து பெரும் தொகையான பணம் ‘ரிசர்வ் வங்கி’ யிலிருந்தோ, மற்ற வங்கிகளிருந்தோ இடமாற்றம் செய்யும் போது வாகனம் அல்லது இரயில் மூலம் செல்லும் போது அதற்கும் வழிக்காவல் செய்தனர். கைதிகளை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு சென்று சிறைகளில் ஒப்படைக்கவும் வழிக்காவல் செய்வர்.

அடுத்து காப்பு அலுவல். முக்கிய பிரமுகர்களுக்கு தங்கும் இடங்களில் காப்பு அலுவல் செய்வர். மற்றும் ‘செரிமோனியல்’ காப்பு அலுவல் செய்வர். அணைகளில் மின் உற்பத்தி செய்யும் இடங்களில் காப்பு அலுவல் செய்வர். கருவூலங்களுக்குக் காப்பு அலுவல் செய்வர். பல் வேறு விதமான நீதிமன்றங்களுக்கு மத்திய சிறைகள், கிழைச்சிறைகளிலிருக்கும் கைதிகளை வழக்குக்காக ஆஜர் படுத்த வழிக்காவல் பணி செய்கின்றனர். வழிக்காவலின் போது அதற்குத் தக்கவாறு ஆயுதங்கள், தோட்டாக்கள், கைவிலங்குகள், நீண்ட இரும்புச் சங்கலி ஆகியவை எடுத்துச் செல்வர். அடுத்து பெரும் விழாக்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றிக்கு லத்தி மற்றும் துப்பாக்கியுடன் கூட்டங்களுக்குத் தக்கவாறு பாதுகாவல் அலுவலாக குழுவாக அனுப்பப்படுவர், மேலும் தபால் அலுவல்,கிடங்கு அலுவல், பிட்டிக் அலுவல் என்று காவலர்கள் அனுப்பப்படுவர். சட்ட விரோதமான கூட்டத்தைக் கலைக்க ஆயுதப்படையிலிருந்து தான் காவலர்களும் அதிகாரிகளும் அலுவலாகச்செல்வர். அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆணையின் பேரில் தான் வெளியே வாகனத்துடன் அனுப்பி வைக்கப்படுவர். அப்பொழுது அதற்கென்று உள்ள உபகிரணங்களை அனைத்தும் எடுத்துச்செல்வர். மாநகரங்களில் குதிரைப் படையில் இருப்பவர்களும், மோப்பநாய் பயிற்சியில் இருப்பவர்களும் ஆயுதப்படை காவலர்கள்தான். காவல் துறைக்குச் சொந்தமான அனைத்து வாகனங்களுக்கும் ஆயுதப்படை காவலர்கள் தான் ஓட்டுனர்களாக பணியில் இருப்பர். அதிகாரிகளின் அலுவல்களிலும், வீடுகளிலும் ஆயுதப்படைக் காவலர்கள் ஆர்டர்லியாக முன்பு அனுப்ப ப்பட்டனர் ஆனால் தற்போது அவர்களுக்குப்பதிலாக ‘பேசிக்சர்வெண்ட்’ நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் அலுவலகத்தில் அரசுப் பணியாளர்களுக்கு உதவியாக ‘ஸ்டாப் டூட்டி’ என்றும், பிராட்மா, கம்யூட்டர், ஒயர்லஸ், வி.எச்.எப். ஆகிய பிரிவுகளுக்கும் ஆயுதப்படை காவலர்கள் அனுப்பப் பட்டனர். ஆயுதப்படையிலிருந்து ஆர்.எஸ்.ஐ., ஆர்.ஐ.,டி.எஸ்.பி. மட்டும் சில வருடங்கள் போக்குவரத்துப் பிரிவிற்கு மாறுதல் செய்யப்படுவர். கேட்டகிரி ஒன்றில் 8 மணி நேரசுழற்சிப்படி அலுவல் இருக்கும் போது ஆயுதப்படை காவலர்கள் தொடர் அலுவலால் தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது. ஆயுதப்படை காவலர்களுக்கு ‘ஏன்யுல் மாபிலிசேசன்’ என்ற திரட்டுக் கவாத்து வருடம் ஒரு முறை 3 வாரங்கள் கவாத்து, உடற்பயிற்சி, மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகள் நடைபெருகிறது. அந்த நேரத்தில் கேட்டகிரி ஒன்றிலிருந்து கவலர்கள் மற்றும் எஸ்.ஐ.கள் வந்து ஆயுதப்படை அலுவல்களைச் செய்வார்கள். உண்மையில் கவாத்துப் பயிற்சிகள் கேட்டகிரி ஒன்றுக்குத்தான் தேவை. இந்த முறையில் மாற்றம் தேவை.

ஆயுதப்படையில் ஆர்மரி என்று ஒன்று இருக்கும்.அங்குதான் ‘ஆர்டர்லி சார்ஜண்ட்’ என்பவர் ஆயுதப் படையின் காவலர் வருகை பார்த்து ஒன்றாக திரட்டி அலுவல்கள் நியமிப்பார். தற்போது அவரை ‘டூட்டி ரிசர்வ் சப் இன்ஸ்ப்பெக்டர்’ என்று அழைக்கிறார்கள். அவர் தான் அனைத்து காவலர்களுக்கும் பல்வேறு அலுவல்களை நியமித்து அனுப்பி வைப்பார். வாரம் ஒரு முறை டூட்டி ரிசர்வ் சப்இன்ஸ்பெக்டர் மாற்றப்படுவார். தற்போது சிறைக்காவலர்கள் கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வருகின்றனர் ஏன் இந்த கைதி வழிக்காவலை சிறைக் காவலர்களே செய்யக்கூடாது? இதிலும் மறுமலர்ச்சி தேவை.

இந்த கேட்டகிரி இரண்டிற்கு ஒரு டி.ஐ.ஜி யோ, ஐ.ஜியோ, டி.ஜி.பியோ கிடையாது. ஏன் இந்த அவல நிலை? ஒவ்வொரு கேட்டகிருக்கும் ஒரு டி.ஜி.பி., ஒரு ஏடி.ஜி.பி., ஒரு ஐ.ஜி., என்று மாற்றினால் இந்த மாற்றம் நன்றாகத்தானே இருக்கும். மாற்றம் தேவை.


--------------------------------(காவல் தொடரும்)