Showing posts with label வீ.சித்தண்ணன் B.sc.. Show all posts
Showing posts with label வீ.சித்தண்ணன் B.sc.. Show all posts

Wednesday, September 10, 2014

தமிழக காவல்துறையில் நேர்மையான அதிகாரி.




வீ.சித்தண்ணன் B.sc. , M.L., CC & IS, தமிழக காவல்துறையில் நேர்மையாகவும், உண்மையாகவும் கடமை தவறாமல் பணியாற்றி தனக்கென தனித்தடம் பதித்தவர்,
தனக்கென தனி தடம் பதித்தது மட்டுமல்லாமல் மாணவ, மாணவியர்கள் அனைவரும் வாழ்வில் சிறப்படைய வேண்டும் என்று மன உறுதியுடன் வாழ்பவர்,
அதன் விளைவாக இவர் எழுதிய படைப்புதான் " காவல் புலன் விசாரணை - பாகம் 1" மற்றும் " காவல் புலன் விசாரணை - பாகம் 2" தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வெளியிட்டுள்ளார், இதில் அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் பற்றி தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது,
அதாவது,
1) 2005, 2008, 2010 & 2013 -ம் ஆண்டுகளின் குற்றவியல் சட்டத் திருத்தங்கள் உள்ளடக்கியது.
2) 14/11/2012 அன்று அமலுக்கு வந்த “பாலியல் குற்றங்களிலிருந்து
குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 பற்றிய முக்கிய குறிப்புகளைக் கொண்டது.
3) 2012-ஆம் ஆண்டு வரையிலான இந்திய உயர்நீதி மன்றங்கள் மற்றும்
உச்ச நீதிமன்றங்களின் முக்கிய தீர்ப்புகளையும் உள்ளடக்கியது.
4) முற்றிலும் இன்றைய நிலைக்கேற்ப மேம்படுத்தப்பட்ட, காவல் புலன் விசாரணையைப் பற்றி,
இன்றுவரை தமிழிழ் வெளிவராத அனைத்துத் தரப்பினருக்கும் அத்தியாவசியமான புதிய படைப்பு இது.
5) காவல் அலுவலர்கள், வழக்குரைஞர்கள், சட்ட அலுவலர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள்,
தினந்தோறும் புரட்டிப் பார்த்து, மேம்படுத்திக்கொள்வதை உறுதி செய்யும் உபயோகமான படைப்பு.
6) காவல் அலுவலர்கள், மாநில மற்றும் அகில இந்திய “காவல் பணித்திறன் போட்டிகளில்” கலந்துகொள்ள,
பதவி உயர்வுக்கான முந்தைய பயிற்சி தேர்வுகளில் வெற்றிபெற உதவும் ஒரு உன்னத படைப்பு.
இன்னும் பலபடைப்புகளை உருவாக்க, மாணவ, மாணவர்களின் படிப்பு மட்டும்தான் இந்தியாவை உணர்த்தும் என்பதை தன்னுடைய தாரக மந்திரமாக மனதில் கொண்டுள்ளார்... இவரது வெற்றி பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி முத்துராஜ்.

-------------------------------------------------------(தொடரும்)