Sunday, November 7, 2010

ஐ.பி.எஸ். ஆக வேண்டுமா?


ஐ.பி.எஸ்.ஆவது எப்படி என்பதைப் பாருங்கள்.

ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ். போன்ற அரசு உயர் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளை அறிந்து கொள்ளும் முன் ஒரு செய்தி. இத்தேர்வு குறித்த சில அடிப்படையான விவரங்களைத் தெரிந்து கொள்வது முக்கியம்.


பல்வேறு வகையான பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுவர். நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களின் 12 மடங்கு எண்ணிக்கை அளவுக்கு முதன்மைத் தேர்வில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதிலிருந்து ஒரு காலியிடத்துக்கு 3 பேர் என்ற அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்குப் போட்டியாளரின் எண்ணிக்கை அமையும்.

முதல்நிலைத் தேர்வு என்பது போட்டியாளரின் எண்ணிக்கையை முறைப்படுத்தி முதன்மைத் தேர்வுக்குத் தகுதியானவர்களைக் கண்டறிய நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இறுதி வெற்றிக்கு எடுத்துக் கொள்ளப்படாது. முதன்மைத் தேர்வுக்கு 2,000 மதிப்பெண்களும் நேர்முகத் தேர்வுக்கு 300 மதிப்பெண்களும் ஆக மொத்தம் 2,300 மதிப்பெண்களும் தேர்ச்சிக்காகக் கணக்கில் கொள்ளப்படும்.

பல்வேறுபட்ட துறைகளில் படித்து வரும் மாணவர்களுக்கு வாய்ப்பாக சிவில் சர்வீசஸ் தேர்வில் பரந்த அளவிலான விருப்பப் பாடங்கள் உள்ளன. அவற்றில் முதல்நிலைத் தேர்வுக்கென்று ஒன்றும் முதன்மைத் தேர்வுக்கென்று இரண்டுமாக இரு விருப்பப் பாடங்களைப் போட்டியாளர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்வதுதான் தேர்வுக்கான ஆயத்தங்களின் தொடக்க நிலையும் மிக முக்கியமான அம்சம் ஆகும். விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்.

தேர்வு செய்யும் விருப்பப் பாடத்தில் பரிச்சயம் மற்றும் அப்பாடத்தில் கல்வியறிவு. அடிப்படை ஈடுபாடு பாடத்திட்டத்தின் அளவு அப்பாடத்தில் வழக்கமாக அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்பு. பாடத்திட்டத்துக்குத் தேவையான நூல்கள் கிடைக்கும் தன்மை.

முதல்நிலைத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளிலிருந்து இப்போது தொடங்கலாம். முதல்நிலைத் தேர்வில் விருப்பப் பாடங்களுக்கு 300 மதிப்பெண்களும் பொது அறிவுப் பாடத்துக்கு 150 மதிப்பெண்களும் உள்ளன. விருப்பப் பாடத்துக்கு அதிக மதிப்பெண்கள் உள்ளதால் அப்பாடத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது.

பல்வேறு பதில்களிருந்து ஒன்றைத் தெரிவு செய்திட வேண்டிய வினாமுறை என்பதால் ஆயத்த நிலையில் ஒரு பாடத்தின் அனைத்து அம்சங்களையும் ஆழ்ந்து அறிய வேண்டியது முக்கியம். முதலாவது சுற்றுத் தயாரிப்புக்கு 3 மாதங்களும் திரும்ப ஒருமுறை திருப்பிப் பார்த்துப் படிக்க ஒரு மாதமும் தேவை.

முதல்நிலைத் தேர்வுகளுக்கான ஆயத்தின்போது தொடக்கத்திலேயே கேள்விகளுக்கு விரைவாகப் பதில் எழுதிடப் பழகுதல் மிக முக்கியமான ஒன்றாகும். முந்தைய ஆண்டு வினாத்தாள்களைப் பெற்று அவற்றுக்கு விடையளித்துப் பார்க்க வேண்டும்.

இம்முறை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஆயத்தப் பணிகளின் போக்கை நெறிப்படுத்துவதுடன் தேர்வுகளில் விடையளிப்பதை மேம்படுத்தவும் உதவும். முதல்நிலைத் தேர்வில் உள்ள பொதுப்பாட வினாத்தாள் பரவலான பாடத்திட்டத்தைக் கொண்டது.

எனவே, தேர்வாளர்கள் முக்கியமான பகுதிகளை இனங்கண்டு அவற்றில் கருத்தூன்றிப் படிக்க வேண்டும். பொதுஅறிவுத் தாளில் கணிதத்திறன் தொடர்புடைய வினாக்களில் நல்ல மதிப்பெண்களைப் பெற வாய்ப்புள்ளது. எனவே, அப்பகுதியில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் விடையளிக்க நல்ல பயிற்சி பெற வேண்டும்.

முதன்மைத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் முதல்நிலைத் தேர்வு முடிந்த மாத்திரத்திலேயே தொடங்கப்பட வேண்டும். முதல்நிலைத்தேர்வு முடிவுற்ற தேதிக்கும் அத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதிக்கும் இரு மாதங்கள் இருக்கும். இக்கால அவகாசத்தை முதன்மைத் தேர்வின் இரண்டாவது விருப்பப் பாடத்துக்கான ஆயத்தப் பணிகளுக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்தால் அடுத்த இரு மாதங்களைப் பொதுப் பாடங்கள் மற்றும் இன்னொரு விருப்பப் பாட ஆயத்தப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியும். தேர்வுக்கு முந்தைய கடைசி ஒரு மாதத்தை அனைத்துப் பாடங்களையும் திரும்பப் பார்த்துப் படிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதன்மைத் தேர்வுக்கு அதிகமான மதிப்பெண்கள் உள்ளதால் அத்தேர்வுக்கான ஆயத்தப் பணிகளும் மிக முக்கியமானதாகும். பொதுவாகப் போட்டியாளர்கள் ஆயத்தப் பணிகளை முடித்த பிறகு தயார்படுத்திய பாடங்களை ஒருமுறை திரும்பப் பார்ப்பதற்கு நேரமின்றி கஷ்டப்படுவதுண்டு. ஆயத்தப் பணிகளில் தொடக்க நிலையிலிருந்தே குறிப்புகள் எடுத்து வந்தால் இதைத் தவிர்க்கலாம்.

அத்துடன் பாடத்தைப் புரிந்துகொள்ளும் நிலையை மேம்படுத்தவும் இது உதவும். மேலும் முக்கியமாக ஆயத்தம் செய்த பாடங்களைத் திரும்பப் பார்க்கும்போது நேரத்தைச் சேமிக்கும் வகையில் முழுப்பாடங்களையும் பார்க்கத் தேவையின்றி எடுத்த குறிப்புகளைப் பார்த்தாலே போதும் என்ற நிலைக்கும் உதவும்.

முதன்மைத் தேர்வில் பொதுப்பாடத் தாள் மிக அதிகமான பாடத்திட்டங்களைக் கொண்டது ஆகும். எனவே, ஒவ்வொரு பாடத்தையும் அதன் பகுதிகள் அனைத்தையும் முழுமையாகவும் ஆழமாகவும் தயாரிப்பது கடினம் என்பதை உணர்ந்து கொள்வது முக்கியம்.

திரும்பத் திரும்ப வினாக்கள் கேட்கப்படும் பகுதியை மிகக் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். பிற பகுதிகளைப் பொருத்தவரையில், அப்பாடங்களில் அடிப்படை விஷயங்களை உணர்ந்து அது தொடர்புடைய அண்மைக்கால குறிப்பிடத்தக்க சம்பவங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை அறிந்துகொண்டு அதில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும்.

முதன்மைத் தேர்வில் கட்டுரைத்தாள் என்பது ஒரு தனித்தன்மை மிக்கது. பொதுத் தாள்களுக்குப் படிப்பது கட்டுரைத்தாளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். பலதரப்பட்ட தலைப்புகளில் கட்டுரையை எழுதிப் பார்ப்பது சிறந்த பயிற்சியாக அமையும். நல்ல மதிப்பெண்களும் பெறலாம்.

திட்டமிடுதலிலும் கட்டுரைத் தரப்போகும் செய்திகளைக் குறிப்பெடுப்பதிலும் செய்திகளை அடுத்தடுத்து தரும் முறைகளை வகுப்பதிலும் செய்திகளைப் பகுப்பாய்வு செய்வதிலும் தீர்வு வழங்குவதிலும் கட்டுரை எழுதத் தொடங்கும் முன்னரே நேரத்தை செலவிட வேண்டும்.

வெற்றி பெறுவதற்கான அடிப்படை விஷயம் தொடர்ச்சியான கடின உழைப்பு.இத்தேர்வு முறையில் மொத்த காலஅளவு ஏறக்குறைய ஓராண்டு. இதைக் கருத்தில் கொண்டு இக்காலம் முழுவதும் கடினமாக உழைக்க வேண்டும். இத்தகைய சரியான வழியிலான கடின உழைப்பு எதிர்காலத்தில் வாழ்வில் உயர்வைத் தரும் என்பதில் துளியும் ஐயமில்லை.


நன்றி-சங்கரநாராயணன் தேவராசன்.-முத்தமிழ்.

-------------------------------------(காவல் தகவல் தொடரும்)

Sunday, October 3, 2010

எடுபிடி போலீஸ்.


தமிழக அரசின் உத்திரவை மீறி, போலிஸ் அதிகாரிகளின் வீடுகளில் எண்ணற்ற போலீசார் எடுபிடி வேலையில் ஈடுபட்டுள்ளனர். மிடுக்கான சீருடை அணிந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டிய போலீசார், வேலைக்காரர் போன்று சமையல், தோட்ட பராமரிப்பு, நாய் பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளைச் செய்வது, போலீஸ் துறையின் கம்பீரத்திற்கு அவமானம்.

தமிழக போலீஸ் உயரதிகாரிகள் வீடுகளில் சமையல் வேலை தோட்ட பராமறிப்பு, கடைகளுக்குச் சென்று வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிவருதல், அதிகாரிகளின் வாரிசுகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல் வேறு எடுபிடி வேலைகளை கவனிக்க, ஆர்டர்லி முறை முன்பு நடைமுறையில் இருந்தது.

சீருடை அணிந்து மக்களின் பாதுகாப்புக்காக பணியாற்ற வேண்டிய போலீசார், ‘மப்டி’ யில் அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலை செய்வது காவல் துறைக்கே இழுக்கு எனக் கருதிய தமிழக அரசு, 20 ஆண்டுகளுக்கு முன்பே இம்முறையை அடியோடு ஒழித்து உத்திரவிட்டது. எனினும், இந்த ‘ஆர்டர்லி’ போலீசார் அதிக அளவில் பதுங்கியுள்ளனர்.

ஒரு லட்சத்திற்கு அதிகமான போலீசார் பணியாற்றும் தமிழகத்தில், ஏறத்தாழ 5,000 போலீசார் ‘ஆர்டர்லி’ களாக உயரதிகாரிகள் வீட்டில் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது கோவையும் இதற்கு விதிவிலக்கல்ல. கோவையிலுள்ள போலீஸ் உயரதிகாரிகளின் வீட்டில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சமையல் காரராக வேலைசெய்து வருகிறார்.

இவர் ஏட்டாக காலம் தொட்டே இவ் வேலையை செய்தார். தற்போது, சிறப்பு ‘எஸ்.ஜ.’, யாக பதவி உயர்வு பெற்ற பின்னரும் கூட, அதே சமையல் வேலையை தான் கவனிக்கிறார், இவருக்கான அரசு ஊதியம் மாதம் 20 ஆயிரம் ரூபாய்.

மற்றொரு அதிகாரி வீட்டில் தோட்ட பராமரிப்பு, நாய் வளர்ப்பு உள்ளிட்ட வேலைகளில் போலீசார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

தவிர நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் வீடுகளிலும் எண்ணற்ற போலீஸ்சார் எடுபிடி வேலை பார்க்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கான்ஸ்டபிள்கள். போலீஸ் ஸ்டேசன்களில் பணியாற்றுவதாக ஆவணக்குறிப்புகளில் பதிவாகியுள்ள போதிலும், பல ஆண்டுகளாக அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி வேலை செய்கின்றனர்.

உயரதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றுவதன் மூலமாக பல சலுகைகள் கிடைத்தாலும், அன்றாட போலீஸ் பணிச்சுமையிலிருந்து விடுதலை கிடைப்பதாலும், பலரும் ‘ஆர்டர்லி’ வேலையை விரும்பி ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் பொறுப்பற்ற வேலையால் போலீஸ் ஸ்டேசன்கள், ஆள்பற்றாக் குறையால் திணறுகின்றன.

கிராமங்களுக்கு ரோந்து செல்லுதல், இரவு நேரங்களில் ‘பீட்’ செல்லுதல், மக்களுகுகான அன்றாட பாதுகாப்பு உள்ளிட்ட அன்றாட பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளது. போலீஸ் பணியே மேற்கொள்ளாமல் அதிகாரிகளின் வீடுகளில் பதுங்கி எடுபிடி வேலை செய்யும் போலீசாருக்கு, மாதம் தலா 15 ஆயிரம் ரூபாய்வரை அரசு ஊதியம் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக ஆண்டு தோறும் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் விரயமாகிறது.

மேலும், பாதுகாப்பு பணி தொடர்பாக இப்போலீசார் முன்பு பெற்ற துறை சார்ந்த பயிற்சி, நடைமுறை அனுபவம் மற்றும் சட்ட அறிவும் மங்கி வருகிறது. இந்நிலை நீடித்தால் எதிர் காலத்தில் இவர்களால் போலீஸ் பணியே மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படலாம்.

வழிகாட்டும் மாநகர போலீஸ் கோவை மாநகர போலீஸ்: கமிஷனராக சைலேந்திரபாபு பொறுப்பேற்ற பின், ஆர்டர்லி போலீசாரில் பெரும் பாலானோர் போலீஸ் பணிக்கு விரட்டப்பட்டனர். இவர்கள் முன்பு, கமிஷனர் வீட்டில் டிரைவர் பணி, தோட்டப்பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளை கவனித்து வந்தனர். சைலேந்திரபாபு பொறுப் பேற்றதும் இப்போலீசார், போலீஸ் பணிக்கு அனுப்பப் பட்டனர்.

இதன் மூலம் 15 போலீசார், பணிக்குத் திரும்பினர். அதே போன்று, தனக்கு கீழ் பணியாற்றும் மற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் இருந்த போலீசாரையும் கமிஷனர் விடுவித்தார்.

கமிஷனரின் இந்த நிடவடிக்கையை போன்று, மற்ற போலீஸ் உயர் அதிகாரிகளும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டால், போலீஸ் ஸ்டேசன்களில் நிலவும் ஆழ் பற்றாக் குறை பிரச்சனைக்கு ஓரளவேனும் தீர்வு ஏற்படும்.

(நன்றி தினமலர்)

--------------------------------------(தொடரும்)

Saturday, December 12, 2009

உங்கள் வீட்டில் திருட்டா?



முன்னாள் காவல் துறை அதிகாரிகள் சங்கம் கோயமுத்தூர்.
குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் - குறிப்புரை.

1. உங்களது வீட்டினை பூட்டி விட்டு வெளியூர் செல்லும்
பொழுது உங்களுக்குரிய காவல் நிலையத்தில் தகவல்
தெரிவித்து விட்டுச் செல்லவும்.

2. இரவு நேரத்தில் வீட்டின் முன் சிறிய விளக்கு எரியுமாறு
எற்பாடு செய்து விட்டுச் செல்லவும்.

3. வசதியுள்ளவர்கள் வீட்டில் Burglars Alarm இருக்குமாறு
ஏற்பாடு செய்துவிட்டுச் செல்லவும்.

4. வீட்டில் உள்ள நகைகளை வங்கி லாக்கரில் வைக்கும்
பழக்கத்தை கடைப்பிடிக்கவும்.

5. சமையல் எரிவாயு, மின்சாரத்துறை, கார்ப்பரேஷன்,
தொலைபேசி துறை ஆகியவற்றலிருந்து வருபவர்களின்
அடையாள அட்டையை சரிபார்த்து அனுமதிக்கவும்.

6. பொருட்கள் விற்க வரும் நபர்களை வீட்டினுள்
அனுமதிக்காதீர்கள்.

7. தங்க நகைகளை பாலிஷ் போடுவதாக கூறும் நபர்களை
நம்பாதீர்கள்.

8. இரவு நேரங்களில் வாகனங்களை வீட்டினுள் நிறுத்தி
பூட்டி வைக்கவும்.

9. பொது இடங்களில் வாகனங்களை நிறுத்தும் பொழுது
அதனுள் விலையுயர்ந்த பொருள்களை வைத்துச் செல்லாதீர்கள்.

10. பொது இடங்களில் உங்கள் மீது நரகல் தெளித்தால், கீழே
ரூபாய் நோட்டுகளைப் போட்டு உங்கள் கவனத்தை திசை
திருப்பி பொருட்களை களவாடிச் சென்று விடுவர் எச்சரிக்கை.

11. உங்களுடன் பேச்சுக் கொடுத்து நகைகளை பெற்றுக்கொண்டு
கல், மண் போன்றவற்றை பொட்டலமாகக் கொடுத்து
ஏமாற்றி விடுவர்.

12. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு சீட்டுக் கம்பனி, தனியார்
நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள்.

13. வீட்டிற்கு அருகில் சந்தேகமான நபர்கள் குடிவந்தாலோ
அல்லது வீட்டினை நோட்டம் இட்டாலோ காவல் கட்டுப் பாட்டு
அறைக்கு (தொலைபேசி 100 க்கு) தகவல் தரவும்.

14. வேலைக்கு புதிய நபர்களை சேர்க்கும் பொழுது நபர்களைப்
பற்றி தீர விசாரித்து விட்டு நடவடிக்கை எடுக்கவும்.

15. பெண்கள் வீதியில் நடந்து செல்லும் பொழுது நகைகளை
ஜாக்கெட்டின் உட்புறம் பின்னில் சொருகி பாதுகாப்பாகச்
செல்லவும்.

16. போதிய வெளிச்சம் வந்த பின்பு பெண்கள் வீட்டிற்கு முன்
கோலம் போடவும். அப்போது சேலை முந்தானையால்
கழுத்தினை சுற்றி நகைகளை பாதுகாக்கவும்.

17. பொது இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும்
பொருட்களை வாங்கி சாப்பிடாதீர்கள். மயங்கினால் பொருட்கள்
களவு போய்விடும்.

18. இருசக்கர வாகனங்களின் அருகில் வரும் நபர்களை கண்
காணிப்பதுடன் உங்கள் நகைகளை பத்திரமாக பிடித்துக் கொள்ளவும்.
அவர்கள் அறுத்துக் கொண்டு செல்ல வாய்ப்பளிக்காதீர்கள்.

19.ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பெண்கள் நகைகளை
அணிந்து கொண்டு செல்லாதீர்கள்.

20. பைகளில் நகைகளை வைத்துக்கொண்டு பஸ்ஸில் பயணம்
செய்யாதீர்கள்.

21. ஒரு மடங்கிற்கு இரு மடங்காக பணம் தருவதாக கூறும்
நபர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கவும்.

22. வாடகைக்கு குடி வருபவர்களைப் பற்றி தீர விசாரித்து
விட்டு குடி அமர்த்தவும்.

23. வீடு அல்லது நிலப் பத்திரங்களின் நகல்களை தெரியாத
நபர்களிடம் தர வேண்டாம்.

24. வீட்டின் முன்புறம், பின்புறம் கதவுகளை திறந்து வைத்து
விட்டு டி.வி. சீரியல்களில் மூழ்கி விட்டால் வீட்டில் உள்ள
பொருட்கள் களவு போய்விடும்.

25.வாகனங்களை திருட கள்ள சாவி போடும்பொழுது சைரன்
ஒலி எழும்புமாறு உள்ள சாதனங்களை பொருத்தி
பாதுகாக்கவும்.

பொது மக்கள் இக்குறிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறோம்.


முன்னாள் காவல் துறை அதிகாரிகள் சங்கம், கோயமுத்தூர்.


Wednesday, November 18, 2009

போலீஸ் சங்கம் என்ன செய்கிறது?



கோவை மாவட்டத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரிகள்
அதாவது இன்ஸ்பெக்டர் முதல் எஸ்.பி. வரை ஒரு
சங்கத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினர்.
பதிவு எண்-192/2006. கடந்த சென்ற காலங்களில்
சங்கம் யாருக்கு என்ன செய்தது என்பதைக் காண்போம்.

14-12-2006 ல் ஒரு வக்கீல் பெண் காவலர் மீது மோதிய
வழக்கில் விசாரணைக்கமிசன் நடைபெற்ற போது கமிசன்
முன் நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை சம்பவம்
எடுத்துச்சொல்லி அறிக்கை சமர்ப்பித்தது.

சென்னையில் சட்டக் கல்லூரியில் அடிதடி நடந்தபோது
காவலர்கள் வேடிக்கைபார்த்துக் கொண்டு மட்டும் இருந்
தனர் என்று மற்றவர்கள் புலம்பிய போது இந்த சங்கம்
அந்தக் காவலர்கிளின் கைகள் அரசியல் வாதிகளின்
ஆணையால் கட்டப்பட்டிருந்ததை பத்திரிக்கைகளுக்கு
விளக்கியது.

பிப்ரவரி மாதத்தில் உயர்நீதி மன்ற வளாகத்தில்
வக்கீல் களுக்கும் காவல் துறையினருக்கும் நடந்த
மோதலில் காவல் துறைக்கு உதவிக்கரம் கொடுக்க
யாரும் முன் வராதபோது இந்த சங்கம் குடும்பத்து
டன் தற்போது பணியில் இருக்கும் காவலர் குடும்
பஙுகளுடனும் நகரின் முக்கிய இடத்தில் ஒரு நாள்
தர்ணா இருந்து பத்திரிக்கை மீடியாக்களை
தன்வயம் இழுத்தது.

1998 ல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் 58
அப்பாவி மக்களின் உயிறைக்குடித்தும் 250 க்கு மேல்
காயம் அடைந்த வழிக்கில் எஸ்.ஐ.டி. குழுவினர்
திறம்பட கடுமையாக உளைத்து 158 கோடூர குற்றவாளி
கழுக்கு தண்டனை பெற்றுத் தந்தனர். ஆனால் எஸ்.ஐ.டி
குளுவினரின் நற்பணியை அரசோ, காவல்துறையோ
கண்டு கொள்ளவும் இல்லை பாராட்டவும் இல்லை
அப்போது இந்த சங்கம் ஓய்வு பெற்ற காவல் துறை
இயக்குனரை வரவழைத்து அதில் பங்காற்றிய
அனைவரையும் கவுரவித்துப் பாராட்டிப் பத்திரங்களை
வழங்கியது. இது பத்திரிக்கைகளில் பரவலாக வியந்
தனர்.

கோவை மாநகரக்காவல் ஆயுதப்படை குடியிருப்பு
வளாகத்தில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு சில
ஆயிரம் ரூபாய்களுக்கு நல்ல அறிவை போதிக்கும்
புத்தகங்கள் வாங்கி அன்பளிப்பாக காவலரின்
குழந்தைகளின் அறிவு வளர்க்க அளிக்கப்பட்டது.

கோவையில் குளிர் காலங்களில் ஏழை அனாதை
கள் குளிரால் துன்பப்படுபவர்களுக்கும், அரசு
மருத்துவமனையில் குளிரில் நடுங்கும் வயோதிகர்
களுக்கும் பல ஆயிரம் ரூபாயில் போர்வைகள்
வாங்கி அவர்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.
இதில் செயலாளர் திரு.வேலு மற்றும் துணைச்
செயலாளர் திரு வெள்ளிங்கிரி இருவரும் சொந்தச்
செலவில் தரமான போர்வைகள் வாங்கி இரவில்
வண்டியில் நகர் மூழுதும் சுற்றி சாலை ஓரங்களில்
பேருந்து நிறுத்தங்களில் நடுங்கி உரங்கும் வழிப்
போக்கர்களுக்கு போர்வைகளைப் போர்த்தி வந்தனர்.
இது மனதை நெகிழ வைத்தது.

மேலும் கோவை மாநகராட்சி ஆர்.எஸ.புரத்தில்
ஒரு அனாதை விடுதி நடத்தி வருகிறது. அதில்
உள்ள அனைவருக்கும் ஒரு விழா ஏற்பாடு செய்து
உணவும் போர்வைகள், துண்டுகளும் அளிக்கப்பட்டது.
நகராட்சி கமிசினர் இச்சங்கத்தைப் பாராட்டிப்
பேசினார்.

இந்தச் சங்கம் தற்பொழுது அலுவலில் உள்ள காவலர்
மற்றும் அதிகாரிகளுக்காக முறையான சட்டத்திற்குட்பட்ட
எந்த செயலானாலும் அவர்களுக்காகத் தோழ் கொடுக்கும்
என்று இதன் தலைவர் திரு. இராஜசேகரன் தெறிவித்தார்.

-----------------------------(காவல் தொடரும்)


Friday, November 13, 2009

போலீசுக்கு சங்கமா?


சங்கம்


கோவை மாவட்டத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரிகள்
அதாவது இன்ஸ்பெக்டர் முதல் எஸ்.பி. வரை ஒரு
சங்கத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினர்.
பதிவு எண்-192/2006.

இந்த சங்கம் ஒவ்வொரு மாதம் இரண்டாம் சனிக்கிழமையன்று
ஹேமல்டன் போலீஸ் கிளப்பில் காலை 10.00 மணிக்கு ஒன்று
கூடி விவாதித்துப பிற்பகல் 1 மணிக்கு முடித்துக் கொள்வர்.

சங்கத்தின் பெயர்:- "முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கம்"
"FORMER POLICE OFFICERS ASSOCIATION"

முகவரி:- ------------------------------------------
164, ரேஸ்கோர்ஸ், கோயம்புத்தூர் - 641 018.
தொலை பேசி:-0422-2221993 ----------- செல்: -9842211993.
email:formerpoliceofficersassn.cbedt@gmail.com

'அன்பு--------------அமைதி------------------- சத்தியம்'

ஒருங்கிணைந்து உழைத்தோம்-ஒற்றுமையாக வாழ்வோம்.

10-10-2009 அன்று பொது உறுப்பினர் கூட்டம் நடத்தி அதில்
புதிதாக நிர்வாக உறிப்பினர்களைத் தேர்ந்தெடுத்து பொறுப்
பேற்றுக் கொண்டனர். அவர்கள் பெயர்கள் வருமாறு-

தலைவர்------------------எம்.இராஜசேகரன். (எஸ்.பி.)

உபதலைவர்--------------- ஏ.துரைசாமி. (எடி.எஸ்.பி.)

செயலாளர் ------------- என்.கே.வேலு. (எடி.எஸ்.பி.)

துணைச் செயலாளர் --- ஆர்.வெள்ளிங்கிரி. (டி.எஸ்.பி.)

பொருளாளர் ---------- ஏ.பாலகிருஷ்ணன். (டி.எஸ்.பி.)


செயற்குழு உறுப்பினர்கள்-

என். நாச்சிமுத்து. -----------------------(டி.எஸ்.பி.)

பி. ஈஸ்வரன்.---------------------------(டி.எஸ்.பி.)

கே.பரமேஸ்வரன்.--------(இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ்)

ஏ.திருமூர்த்தி.------------(இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ்)

என். சண்முகசுந்தரம்------(இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ்)


இந்த சங்கம் கடந்த ஆண்டுகளில் செய்த நற்பணிகள்
உதவிகள் அடுத்து தொடரும்.


Friday, October 30, 2009

நல்ல தீர்ப்பு





நல்ல தீர்ப்புக்கோர் புகழ் மாலை.

கோவையில் இயங்கி வரும் முன்நாள் காவல் அதிகாரி
களின் சங்கத்தலைவர் திரு.எம். இராஜசேகரன் (S.P.)
அவர்கள் பத்திரிக்கைக்கு இன்று 30-10-2009 அளித்த குறிப்பு
விபரம் வருமாறு :-

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில்
நடந்த வக்கீல்கள் போலீசார் மோதல் சம்பந்தமான
சம்பவங்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்
அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம்.

---------------------அதில் வழக்கறிஞர், போலீசார் நல்லுறவு
சமுதாய நன்மை கருதி பேணிக்காக்கப் படவேண்டும்
என்று வலியுறுத்தப்பட்டுள்ளதை நாட்டின் நலனில்
நாட்டமுள்ள நல்லவர்கள் அனைவரும் வாழ்த்தி
வரவேற்பார்கள்.

-------------------அதில் உயர்நீதிமன்றத்தின் மாட்சிமை நிலை
நிறித்தப்படவேண்டும் என்றும், அதற்கு குந்தகம்
விளைவிப்போர் தண்டனைக்குரியவர்கள் என்றும்
கூறப்பட்டுள்ளதை நெஞ்சாற வரவேற்கிறோம்.

----------இரவும் பகலும் தங்கள் இன்னுயிரை பணயம்
வைத்து ஊணின்றி உறக்கமின்றி ஊருக்காக
உழைத்திடும் காவல் துறையினர் தங்கள் கடமையை
நிறைவேற்றும் பொழுது சில சமயங்களில் சற்றும்
எதிர்பாராத சூழ்நிலை கட்டாயத்திற்கு உள்ளாகி
அவர்கள் சக்திக்கும் மீறிய சில தவறுகள் நடந்துவிடுவது
உண்டு. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு தண்டனைக்கு
இல்க்காகப்பட்டுள்ள கடமை உணர்வு மிக்க
கண்ணியமான காவல்துறை அதிகாரிகளின் நிலை மறு
பரிசீலனைக்கு உரியது என்று கருதுகிறோம்.

-------------அதே சமையத்தில் உச்ச நீதிமன்றத்தால்
நியமிக்கப்பட்ட உச்ச தீதிமன்ற நீதியர்சர் ஸ்ரீகிருஷ்ணா
அவர்களின் தலைமையிலான விசாரணைக்குழு
அறிக்கையில் கீழ்கண்ட உண்மைகள் ஆய்ந்து
அறியப்பட்டு உச்ச நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்
பட்டுள்ளன;

------1. இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள ஒரு
அயல்நாட்டு தீவிர வாத இயக்கத்தை ஆதரித்து
உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பல முறை மனித
சங்கிலிகள், உண்ணா விரதங்கள், ஆர்பாட்ட
ஊர்வலங்கள், ஆக்ரோஷ கோஷங்கள், கோர்ட்
புறக்கணிப்புக்கள் அதை மீறி கோர்ட்டில் ஆஜராகும்
கட்சிக்காரர்களுக்கு விசுவாசமான கடமையுணர்வு மிக்க
வக்கீல்களை மிரட்டி, தாக்கி வெளியேற்றுவது, இந்திய
அரசியலில் மிக முக்கியமான ஒரு அரசியல் தலைவரின்
உருவப்படத்தை தீயிட்டு கொழுத்துவது போன்ற சட்ட
விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது
வக்கீல்களில் ஒரு சிறிய கூட்டம்.

----2. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 17ம் தேதி
உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு வழக்கு சம்பந்தமாக
இரண்டு நீதிபதிகளின் முன்பாக விசாரணைக்கு
ஆஜராகியிருந்த ஒரு கட்சிக்காரரை அவதூறான
வார்த்தைகளில் திட்டி நீதிபதிகள் கண் எதிரில்
கோர்ட்டுக்குள்ளேயே, கோர்ட் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் வேளையில் கோஷமிட்டு, ஆர்பரித்து,
அழுகிய முட்டையால் தாக்கியது ஒரு சிறு வக்கீல்கள்
கூட்டம்.

-------3. அதன் உச்சக்கட்டமாக இரண்டு நாள் கழித்து
மேற்படி சம்பவத்தின் சம்பந்தமாக காவல்நிலையத்தில்
சரணடைய வந்தவர்களும், அவருடைய நண்பர்களும்
கொண்ட ஒரு கூட்டம் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்,
உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்புக்காக உள்ள போலீஸ்
ஸ்டேஷனையே தீ வைத்து கொளுத்தி உள்ளே இருந்த
அனைத்து ஆவணங்களையும், டி.வி, கேமராக்கள் மற்றும்
பொருட்களையும் பத்திரிக்கையாளர் முன்னால் தீ
வைத்து பொசுக்கியது.

---------மேற்படி சம்பவங்கள் அனைத்தும் வரலாற்றுச்
சிறப்பு மிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின்
மாட்சிமையையும், கம்பீரத்தையும், கணிசமான அளவிற்கு
நாசப்படுத்திவிட்டது என்பது ஊரறிந்த உண்மை. அதில்
சம்பந்தப்பட்டவர்கள் யார் யாரென்பது அனைத்து
ஊடகங்களிலும் தத்ரூப காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு
சாட்சியங்களாக உள்ளன. உயர்நீதிமன்றத்தின் மாசு
குறைய மாட்சிமையை நாசப்படுத்தும் விதத்தில்
செயல்பட்ட அந்த சட்ட விரோதக் கூட்டத்தினர் மீது
உயர்நீதிமன்றத்தின் உத்திரவுப்படி நடக்கவுள்ள
விசாரணையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்
பட்டு தகுதியான தண்டனை வழங்கப்படும் பொழுது
தமிழக காவல்துறையினரின் தளர்ந்து போன உற்சாக
உணர்வு தலைநிமித்தி நிலை நிறுத்தப்படும் என்று
ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

(உதவி :- என்.கே.வேலு எ.டி.எஸ்.பி.)

-----------------------------(காவல் தொடரும்)

Sunday, August 23, 2009

ஆயுதப்படை பெண் எஸ்.பி., மீது செக்ஸ் புகார்

சென்னை,ஆக.23-
பெண் எஸ்.பி., மீது, பெண் காவலர் கொடுத்த
திடுக்கிடும் செக்ஸ் புகார் குறித்து, கூடுதல் டி.ஜி.பி.,
யின் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை அடுத்த ஆவடியில், தமிழ்நாடு
சிறப்பு போலீஸ் படையின் ஐந்தாவது
பட்டாலியன் உள்ளது. அதில் பணியாற்றும்
போலீஸ் காவலர் ராஜபாக்கியம் நேற்று கூடுதல்
டி.ஜி,பி., (நிர்வாகம்) லத்திகா சரணிடம் ஒரு புகார் அளித்தார்.
அப்புகாரில் தெரிவிக்கப்பட்டிருப் பதாவது:

எங்களது பட்டாலியன் கமாண்டன்ட்டாக இருப்பவர் எஸ்.பி.,
வெண்மதி. இவர் வீட்டில் வேலை
செய்வதற்காக
‘ஆர்டலி’ யாக பெண் காவலர்கள் சுழற்சி
முறையில் செல்வது வழ்க்கம். சில நாட்களுக்கு
முன் நான், ஆர்டலி யாக சென்றேன். அப்போது, அவர்
குளிப்பதற்கு, ஒருதுண்டை மட்டும் கட்டிக்கொண்டு
வந்தார்.

குளிப்பதற்கு முன், தனக்கு எண்ணெய் ‘மசாஜ்’
செய்து விடச் சொன்னார். அவரைப் போலவே
எனது உடைகளையும் கழற்றச் சொல்லி வற்புறுத்
தினார். நான்உடைகளைக் கழற்றிய பின், எனக்கு
செக்ஸ் டார்ச்சர்கொடுத்தார். பின் அவரது கணவரும்
துண்டைக் கட்டிக்கொண்டு வந்தார். அவருக்கும்
இதே முறையில் மசாஜ் செய்துவிடவும், அவருக்கு
‘ஒத்துழைக்கவும்’ வேண்டும் என்று மிரட்டினார்.

உடனே நான், அங்கிருந்து வெளியேறி, ஊருக்குச் சென்று
விட்டேன். மீண்டும் வந்து பார்த்த போது, எனது அறை
பூட்டப்பட்டிருந்தது. ‘எஸ்.பி., யை பார்த்த பின்னரே பணியில்
சேர வேண்டும்’ என்று, சக போலீசார் கூறினர். அவரிடம்
சென்றால் எனக்கு மெமோ கொடுத்து, சம்பள உயர்வை
தடுத்து விடுவார். எனக்குப் பணி பாதுகாப்பு
அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இப்புகாரையடுத்து, கூடுதல், டி.ஜி.பி., லத்திகா சரண்
உத்திரவின்படி, தனிப்படை போலீசார், ஆவடி பட்டாலியன்
பெண் போலீசாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது
அவர்களிடம், ‘ஆர்டலி’ பணியில்
நியமிக்கப்படும் அனைத்து பெண் போலீசாரிடமும்
எஸ்.பி., வெண்மதி இதே முறையில் செக்ஸ் டார்ச்சர்
கொடுக்கிறார், அதை தட்டிக்கேட்டடல், மெமோ
கொடுக்கிறார்.

குறிப்பிட்ட அளவிற்கு மேல் மெமோ பெற்றால் எங்களது
சம்பள உயர்வே பபதிக்கப்படும். எனவே, மெமோவை
காட்டி மிரட்டியே பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்.
அவருக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு கொடுத்த
மெமோக்களால், 90 பேர் சம்பள உயர்வு பாதி
க்கப்பட்டுள்ளது’ என்று, பெண் போலீசார் புலம்பித்
தீர்த்தனர்.

இந்தப் புகார் குறித்து, எஸ்.பி., வெண்மதியிடம் கேட்ட
போது, “என் மீது கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டு
களும் தவறு. பணியில் ஒழுங்கீனம், கவனக்குறைவாக
இருப்பவர்களிக்கு மட்டுமே மெமோ கொடுத்தேன்.

கண்டிப்பாக நடந்து கொளவதால் தான், என் மீது இதுபோன்ற
அவதூறு புகார்களை கூறுகின்றனர். மற்றபடி நான் மனசாட்சி
யோடு தான் பணி புரிகிறேன். எனது தரப்பு நியங்களை உயரதிகாரி
களிடம் விளக்கி உள்ளேன்.” என்றார்.

இந்தச் செய்தி இன்று 23-8-2009 தினமலரில் வெளியிடப்
பட்டுள்ளது. இதிலிருந்து கேட்டகிரி 3 ல் ஆர்டர்லி முறை
அதாவது அதிகாரிகளின் வீடுகளுக்கு காவலர்கள் அனுப்பும் முறை
முழுதும் ஒழிக்கப்படவில்லை என்று தெறிகிறது.

அடுத்து கேட்டகிரி 3 க்கு கேட்டகிரி ஒன்றிலிருந்து
எஸ்.பி., யை கமேண்டண்டாகப் பதவி மாறுதல்
செய்யும் போது விரக்தியடைந்து இது போன்ற
கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார்கள். மேலும் விசா
ரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெறியலாம்.
காவல்துறையில் இது போன்ற மறு மலர்ச்சி
தேவையில்லை. நல்லது நடக்க மாற்றங்கள் தேவை.


------------------------------------------(தொடரும்)