Wednesday, January 28, 2015

காவல் பணி-சமுதாயப்பணியா?

முகநாலில் வினோத் மதுரை மண்ணின் மைந்தன் எழுதியது.


காவல்துறையை இழிவுபடுத்துவதில் பலருக்கும் ஏகமகிழ்ச்சியென்பதும்,காவல்துறை தாக்கப்படும் போதெல்லாம் பலரும் ஆனந்தக்கூத்தாடுகின்றார்கள் என்பதும் பல பதிவுகளின் மூலம் புலப்படுகின்றது.அத்தகைய அன்பர்களுக்கான பதில் பதிவு இது.
இதே சமுதாயத்தில் இருந்து தானே காவல்துறைக்கும் மனிதர்கள் தேர்வாகின்றார்கள்.....

பிறகு எப்படி காவல்துறையில் மட்டும் 100./. உத்தமர்களை எதிர் பார்க்கின்றீர்கள்?

எல்லையில் இருந்துகூட போராடிவிடலாம்,
ஆனால் அரசியல்,சாதி,மதம்,சீர்கெட்ட சமுதாயம்,பணபலம்,வன்முறை இப்படி பலதரப்பட்ட படைகளுக்கு முன்னே வெறும் லத்தியை மட்டும் வைத்துக்கொண்டு போராடும் காவலனை உங்களுக்கு தெரியுமா?
எடுத்த உடனே என்கவுண்டர் தான் என்று திரைப்படங்களை பார்த்து மனதில் பிம்பம் பதித்துக்கொண்ட உங்களுக்கு கலவரத்திலும்,சாதி மோதல்களிலும் மண்டை உடைந்த,கை,கால் முறிந்த,உயிரையே பறிகொடுத்த காவலர்களை தெரியுமா?

நேர்மை தவற ஆயிரம் (அநி)ஞாயமான காரணங்கள் இருந்தும்...
வாங்கிய சம்பளத்தில் பாதியை தன்னுடைய சாப்பாட்டிற்கும்,போக்குவரத்திற்குமே செலவழித்துவிடுவதால், வருமையில் வாழும் காவலர் குடும்பங்களை தெரியுமா?

எல்லா இடங்களிலும் உங்கள் குறைகள் மறைக்கப்படவும்,உங்கள் வேலை அவசரமாய் முடியவும் கையூட்டு வழங்க தயங்காதவர்கள் நீங்கள்
உங்களில் எத்தனை பேர்,முழுமையான ஆவணங்களுடன் பயணித்து அபராதம் செலுத்தியிருப்பீர்கள்,

100 ரூ அபராதம் என்றால் சார் சார் 50 வாங்கிட்டு விட்ருங்க சார் என்ற பேரம் பேசாதவர்கள் எத்தனை பேர்.

கட்சிஊர்வலம்,கோவில் கொடை,அரசியல் கூட்டம்,சாதிதலைவர் பிறந்தநாள்,மறைந்தநாள்,இப்படி தெருமுனை கூட்டம் வரை அத்தனைக்கும் பாதுகாப்பு வேணும்ங்றீங்களே

ஒரே ஒருநாள் காவல்துறை முழுவதும் இயங்காமல் இருந்தால் எப்படி இருக்கும் ? தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே இடுகாடாகிப்போகும் .
100 காவலரில் 10 க்கும் குறைவான விகிதத்தில் தான் நீங்கள் வெறுக்கும் வகையிலான காவலர்கள் இருப்பார்கள் ,மொத்த காவலர்களையும் இழிவு படுத்த எந்த........,க்கும் தகுதியில்லை.

எந்த துறையில் இருந்து ஓய்வு பெற்றாலும் மீத வாழ்க்கையை சுகமாய் வாழ இயலும்

ஆனால் காவல்துறையில் பணி நிறைவு பெறும் போது கிடைக்கும் பணம் அதுவரை உடலைபேணாமல் விட்டதால் உண்டான நோய்களுக்கு சிகிச்சை பெறக்கூட போதாது,

வேலை,வேலை என்று அலைவதால் குடும்பத்தினர்,உறவினரிடையே பாசம் காட்ட இயலாமல்,மன இறுக்கத்தில்,வேலைபளுவில் மாரடைப்பில் இறக்கும் காவலர்களின் விகிதம் தெரியுமா?

விடிய,விடிய பணிமுடித்தும்,ஓய்வின்றி மறு நாள் காலையும் பணி தொடரும் படி உத்தரவு வர .....

தூங்கிவிழுந்தபடி வெயிலிலும்,மழையிலும் பணியை தொடரும் எங்கள் காவலர்கள் இல்லையென்றால் உங்கள் கோவணத்தை கூட உங்களால் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்.

Unlike ·
·
(தொடரும்.)

Wednesday, January 21, 2015

டி.எஸ்.பி. வெள்ளத்துறை.




டி.எஸ்.பி. வெள்ளத்துறை.


என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் டி.எஸ்.பி. வெள்ளத்துரை :-

துப்பாக்கியில் இருந்து கிளம்பும் தோட்டாவைவிட அதிவேகமாக ஆக்சன் எடுக்கும் ஆக்சன் கிங்!!!

தன்னுடைய துப்பாக்கி சத்ததாலே தமிழகத்தை தன்பக்கம் திரும்பி பார்த்த ஒரு தைரியமான, எவருக்கும் பயப்படாத நேர்மையான அதிகாரி, 

வீரமும், கோபமும் விளைந்து நிற்கும் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் பிறந்தவர்தான் இந்த வல்லவர்!!! தமிழக காவல்துறையில் அதி உயர் கல்வித் தகுதியுடையவர் இவர்.

எம்.ஏ. (சரித்திரம்) எம்.ஏ. (போலீஸ் நிர்வாகம்) என டபுள் எம்.ஏ.வுடன், பி.ஹெச்டி வரை முடித்த ஒரே தமிழக போலீஸ் அதிகாரி இவர்தான்

தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தபிறகு ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமர குருபரர் கலை கல்லூரியில் ப்ரோபோசராக பணியில் சேர்ந்தார், பின் மூன்று வருடம் பணியை தொடர்ந்து 1994ஆம் ஆண்டு எஸ்.ஐ தேர்வுக்கு சென்றார்,

அதன் காரணமாக 1997ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார், பின்னர் 1999 ஆம் ஆண்டு புதுகோட்டை, கீரனூர்-இல் உதவி ஆய்வாளராக பணியை தொடர்ந்தார்,

என்னுடைய முதல் என்கவுண்டர், திருச்சி லால்குடி கோர்ட் மாஜிதிரட் முன்னாடி கூண்டில் இருந்தவரை கழுத்தை அறுத்து கொன்றான் ரவுடியான கோசிஜன், அவன்தான் இவருடைய துப்பாக்கிக்கு கிடைத்த முதல் களை!!!

அப்போதும் அவருக்கு எந்த ஒரு பதட்டமும் இருந்தது இல்லை, அவருடைய பி.பி பரிசோதனை செய்த மருத்துவர் நார்மலாக இருக்கிறது என்று ரிப்போர்ட் கொடுத்தார், இப்பவும் அப்படியேதான் இருக்கிறார், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரை ரோல் மாடலாக கொண்டிருப்பார்கள், அதுபோல இவருக்கும் ரோல் மாடல் ஆப்பிசர் உண்டு, அவர்கள் யாரென்றால் "திரிபாதி சார் மற்றும் வால்டர் தேவாரம்" அவர்கள்..... இவர்களை போல தன்னுடைய பாதையை அமைக்கவேண்டும் என்றே லட்சியம் கொண்டவர்,

இவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், நெல்லுக்கு பக்கத்தில் களை வளரத்தான் செய்யும், அதை சமையம் பார்த்து புடுங்கி எறியவேண்டும், இல்லையென்றால் அது நெல்லையும் நாசமாக்கி விடும், வயலையும் நாசமாக்கி விடும், அது போலதான் இவருடைய ஆக்சனும், 1000 பேர் சந்தோசமாக இருக்கிறார்கள், அந்த 1000 பேரின் சந்தோசத்தை ஒருவன் கெடுக்கிறான் என்றால் அவனை கொள்வதில் தவறு இல்லை என்பதே இவரது எண்ணம்!!!

ரவுடிசத்தை ஒழிப்பது என்ற விஷயத்தில் முனைப்பான அதிகாரி என்று பெயரெடுத்த டி.எஸ்.பி. வெள்ளத்துரை தன்னுடைய கண்பார்வையிலேயே கண்ணீர் விடவைத்தவர், தமிழகத்தில் ரவுடிகளை வேர் அறுப்பதே இவருடைய லட்சியம்... எவருக்கும் பதறாமல் ஆழ்மனதில் தவறு என்று தெரிந்ததை தைரியமாக தட்டிகேட்கும் தளபதி!!!

மக்கள் பயபடமால் நடமாட ஆதரவாக இருக்கும் கண்ணியமிக்க கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய.திரு.வெள்ளத்துரை அவர்களுடைய பணிசிறக்க, பணி தொடர மனதார வாழ்த்துகிறோம்.... சல்யூட்....
 — withMuthu RajPrema PreminiNeha Ashwin and 19 others. (தொடரும்)

Friday, January 16, 2015

காவல் துறையினருக்கு தமிழக முதல்வரின் வீர விருதுகள்.

Gallantry medal for slain head constable
Head constable G. Kanagaraj, who lost his life in July last while attempting to nab an individual involved in sand smuggling, has been chosen for the Tamil Nadu Chief Minister’s Police Medal for Gallantry.
An official release said the head constable was about to apprehend Suresh in Uriyurkuppam, near Thakkolam of Vellore district, who was seeking to take away sand illegally from the Kosthalaiyar river bed. The legal heir of the deceased head constable would be given a cash prize of Rs. five lakh.
Besides, 1,500 police and other uniformed services personnel, belonging to the rank of police constable, head constables and equivalent ranks would be given the Tamil Nadu Chief Minister’s Constabulary Medals for Pongal.
One hundred and twenty Fire and Rescue Services personnel in the ranks of Leading Fireman, Driver Mechanic, Fireman Drivers and Firemen and 60 Prison Service personnel in the rank of Grade-I Warder would be given the Tamil Nadu Chief Minister’s Medals.
Medal allowance
The monthly medal allowance to the recipients of the medals would be Rs.200/- with effect from February 1, irrespective of their rank. The medals would be presented to the recipients at their respective district headquarters.
In addition, the Tamil Nadu Chief Minister’s Medal for excellence in technical and specialised services would be given to five personnel — two each from the Police Radio Branch and the Dog Squad and one police photographer. The officers in the rank of constable and head constable would get Rs.3,000; those in the levels of sub-inspectors and inspectors – Rs. 4,000 and deputy superintendents of police – Rs. 6,000. The medal would be presented by Chief Minister O. Panneerselvam later, the release said.
Unlike ·
·    தொடரும்.