Saturday, November 15, 2014

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவசப் பயிற்சி.



ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவசப் பயிற்சி.

பாரதியார் பல்கலையில் அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ் முதல் நிலை தேர்வுக்கான இலவசப்பயிற்சியில் பங்கேற்பதற்கு டிச., 30 ந் தேதி நுழைவுத் தேர்வு நடக்கின்றது, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய பயிற்சி இயக்குனர் பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை:

பாரதியார் பலகலையில் தமிழக அரசின் நிதியுதவியுடன், அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் செயல் பட்டு வருகிறது. கடந்த ஆக., மாதம் நடந்த யு.பி.எஸ்.சி., முதல் நிலை தேர்வில், தேசிய அளவில் 3,4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில், கோவையில் யு.பி.எஸ்.சி.,  சார்பில் அடுத்தாண்டு ஆக., 23ல் ஐ.ஏ.எஸ்.,முதல் நிலை தேர்வு நடக்கிறது.  அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் இத்தேரவுக்கான முழுநேர இலவச பயிற்சி வகுப்பு அடுத்தாண்டு பி,23ல் துவங்குகிறது. இம்மையத்தில் முதல் நிலை தேர்வுக்கான பயிற்சி, சர்வதேச மாணவர் விடுதியில் தங்குமிடம், நூலக வசதி, இணையதள வசதி, 2000 பூபாய்க்கான மாத உணவுப்படி ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

 ஆறு மாதகாலம் தங்குமிட வசதியுடன் நடைபெறவுள்ள  இப்பயிறசயில் பங்கேற்பதற்கான நுழைவுத் தேர்வு  டச., 30ந் தேதி நடக்கிறது. பல்கலை
யிலுள்ள டாக்டர் உஷா மேத்தா அரங்கில் காலை 10.00 - 12 மணி வரை இத்தேர்வு நடக்கிறது.

நுழைவுத் தேர்வானது யு.பி.எஸ்.சி.,  முதல் நிலை தேர்வின் அடிப்படையில் நடைபெறும். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பல்கலையின்    "www,ac.in"  என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிரக்கம் செய்ய வேண்டும்.
மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிச., 15ந் தேதிக்குள்  ஒருங்கிணைப்பாளர்-பயிற்சி இயக்குனர், அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-45 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அவ்வறு,, அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


 நன்றி. தினமலர். தேதி 15-11-2014.

-------------------------------------------------------(தொடரும்)

Wednesday, November 12, 2014

"வால்டர் தேவாரம்"





வால்டர் தேவாரம்
தேவாரம் "வால்டர் தேவாரம்" இவர் பெயரை கேட்டாலே உடலில் ஒரு சிலிர்ப்பு தோன்றுகிறது, அந்த அளவுக்கு மிக நேர்மையான அதிகாரி.....
முறுக்கு மீசையுடன், உரமேறிய உடலுடன் சிக்கென, போலீஸாரும் பொறாமைப்படும் சுறுசுறுப்புடன் டி.ஜி.பி.யாக இருந்தவர் வால்டேர் தேவாரம்.
கேரள மாநிலம் மூணாறில் பிறந்தவர் தேவாரம், சுறுசுறுப்பாக பணியாற்றும் குணம் கொண்டவர். "வெட்டு ஒன்று,துண்டு ஒன்று" என்று பேசுபவர். எடுத்த காரியத்தைக் கச்சிதமாக முடிக்காமல் விடாதவர். அகில இந்திய அளவில் துப்பாக்கிச் சுடுதலில் பல முறை விருதுகள், பரிசுகள் பெற்றவர்.
தேவாரம் குறித்து காவல்துறையில் பல கதைகள் கூறப்படுவதுண்டு. அத்தனைகதையும் அவரது வீர, தீரத்தைப் புகழ்வதாகும்.
ஸ்ட்ரிக்டான அதிகாரி என்ற பெயர் பெற்றவர்; துணிச்சல் மிக்கவர்;நேர்மையானவரும் கூட. வழக்கமாக திருடர்களுக்குத்தான் போலீஸாரைப் பார்த்தால் பயம் வரும். ஆனால்தேவாரத்தைப் பற்றி நினைத்தால் போலீஸாருக்கே பயம் ஏற்படுமாம். அத்தனை கெடுபிடியானவர் தேவாரம்.
தமிழக ஒலிம்பிக் சங்க தலைவராகவும் தேர்ந்தெடுக்க பட்டவர், மற்றும் பல விருதுகளை பெற்றவர், அதுமட்டும் இல்லாமல் அணைத்து மாணவ, மாணவியர், இளைஞர்கள் மத்தியில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக திகழ்பவர், அனைவரையும் விளையாட்டின் மூலம் ஊக்குவிப்பதே இவரது சிறந்த குணங்களுள் ஒன்று....
இவரை போல அனைத்து அதிகாரிகளும் இளைஞர்கள்-களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே எனது ஆசை,