Saturday, May 25, 2013

காவல் துறையில் பதவி உயர்வும், மாறுதலும்.



Promotion and Postings of IPS officers

தேவகோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு சமந்த் ரோகன் ராஜேந்திரா பதவி உயர்வு பெற்று, மதுரை நகர சட்டம்–ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*கமுதி உதவி போலீஸ் சூப்பிரண்டு அபினவ் குமார் பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் திருச்சி நகர சட்டம்–ஒழுங்கு துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

*அரவாக்குறிச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜியா உல்ஹக் பதவி உயர்வு பெற்று, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

*உதவி போலீஸ் சூப்பிரண்டு திஷாமிட்டல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். விடுமுறையில் சென்றுள்ள அவர், பணிக்கு திரும்பியதும் உரிய பதவி கொடுக்கப்படும்.

*திருத்தணி உதவி போலீஸ் சூப்பிரண்டு சி.விஜயகுமார் பதவி உயர்வு பெற்று, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டு

*சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு எம்.துரை சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

*தேன்கனிக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பி.விஜயகுமார் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் வேலூர் மாவட்ட சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

*தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜெ.மகேஷ் பதவி உயர்வு பெற்று, பெரம்பலூர் மாவட்ட சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

*தோவாளை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜி.தர்மராஜன் பதவி உயர்வு பெற்று, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

*வேதாரண்யம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி பதவி உயர்வு பெற்று, நாகப்பட்டினம் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

சென்னை துணை கமிஷனர்கள்

*தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெ.ராஜேந்திரன், சென்னை நிர்வாகப்பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

*மதுரை குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, சென்னை அடையாறு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

*சென்னை அடையாறு துணை கமிஷனர் ஆர்.சுதாகர், சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

*சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனர் ஜி.கார்த்திகேயன், போலீஸ் பயிற்சி கல்லூரி சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

*காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேவியர் தனராஜ், சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

*மதுரை நகர சட்டம்–ஒழுங்கு துணை கமிஷனர் ஆர்.திருநாவுக்கரசு, திருப்பூர் துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

*வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

*கோவை நகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பிரவேஷ் குமார், கோவை நகர சட்டம்–ஒழுங்கு துணை கமிஷனர் ஆகிறார்.

*தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்பு, சென்னை சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள்

*சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராஜேஸ்வரி, திருச்சி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

*கோவை போலீஸ் சூப்பிரண்டு உமா, புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகிறார்.

*புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தமிழ்சந்திரன், மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

*சேலம் நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெ.ரவீந்திரன், உளுந்தூர் பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 10–வது பட்டாலியன் கமாண்டண்டாக பதவி ஏற்பார்.

*உளுந்தூர் பேட்டை சிறப்பு காவல்படை 10–வது பட்டாலியன் கமாண்டண்ட் எஸ்.அப்துல்கனி, தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

*நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.ராமகிருஷ்ணன், சென்னை மாதவரம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அமைப்பு சார்ந்த குற்ற உளவுப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றும் எம்.சுதாகர், கோவை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

*திருச்சி போலீஸ் சூப்பிரண்டு லலிதா லட்சுமி, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக (சட்டம்–ஒழுங்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.

*சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக (சட்டம்–ஒழுங்கு) பணியாற்றும் எஸ்.பன்னீர்செல்வம், சென்னை போக்குவரத்து போலீஸ் (மேற்கு) துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

*சென்னை ஆவடி வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 13–வது பட்டாலியன் கமாண்டண்டாக பணியாற்றும் என்.காமினி, பொருளாதார குற்றப்பிரிவு (2) சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

*பொருளாதார குற்றப்பிரிவு (2) சூப்பிரண்டாக உள்ள எஸ்.மணி, வீராபுரம் சிறப்பு காவல்படை கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி

*திருச்சி நகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் செல்வகுமார், சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

*சென்னை அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ்குமார், சென்னை போக்குவரத்து போலீஸ் (வடக்கு) துணை கமிஷனர் ஆகிறார்.

*அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.பிரபாகரன், சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

*பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், கோவை நகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------------(தொடரும்.

Monday, May 6, 2013

சீரழியும் சி.பி.ஐ.,




சீரழியும் சி.பி.ஐ., 
ஆர்.நடராஜன்.

உரத்த சிந்தனை.
-ஆர்.நடராஜன்-
அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்.



ஒரு காலத்தில், பலருக்கு உதறல் எடுக்கும் அளவுக்குப் பணியாற்றிய அமைப்பு, சி.பி.ஐ., என்ற ‘சென்ட்றல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்!’  அரசியலுக்கு அடிமைப்பட்டுப் போன அதை, எதிர்கட்சியனரும், பிரபல பத்திரைக்கையாளர்களும், ‘காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்!’ என்றே கூறினர். அதுவும் சரியல்ல, ‘ஐ’ எனபதற்கு, இன்வெஸ்டிகேஷன்!’ என்பதற்குப் பதிலாக, ‘இன்ஜஸ்டிஸ்’ (நீதி இல்லாத) என்று சொல்வதே பொருத்தம். இப்போது இதை வேறு வார்த்தைகளில் சொல்லிகிறது உச்சநீதிமன்றம்.

மத்திய அரசு, அதன் ஒரு துறையான சி.பி.ஐ., க்கும் இதைவிடக் கேவலமான விமர்சனம், இதுவரை வந்ததில்லை. உச்ச நீதிமன்றம் இப்படிச் சொன்ன மறு நிமிடமே, மன்மோகன்சிங் ராஜநாமா செய்திருக்க வேண்டும். செய்யவில்லை, அவரது மனசாட்சி, அவரை உறுத்தவில்லை, ஏனென்றால், அவர் சி.பி.ஐ., யார் மீதும் ஏவி விட வில்லை.

சரி, அவர் பிரதமர் பதவியில் இருக்கட்டும். சி.பி.ஐ., தலைவராவது கொஞ்சம் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு,  ராஜநாமா செய்திருக்கலாம். செய்ய வில்லையே…அவரிடம் இழிவுக்கு நாணப்படும் மான உணர்வு இல்லையே? அப்பபடி எந்த மனிதரையும் சொல்ல முடியாது. அவர் விரும்பினாலும் ராஜினாமா செய்ய முடியாது. விமர்சனத்தை அடுத்து ராஜினாமா செய்தால், அது உண்மை என்பது தெரிய வந்து விடும். அதனால் ராஜினாமா செய்யாதீர்கள் என்று, அவருக்குக் கட்டளை வந்திருக்கலாம். யாரிடமிருந்து?

சரி, சி..பி.ஐ., தலைவருக்கு யார் அந்தக் கட்டளையைப் பிறப்பிக்க முடியும். பிரதமரா? அவரே பத்திருக்கைகளைப் படித்துக்தான் அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட சங்கதிக்களைத் தெரிந்து கொள்கிறார். அப்படியானால் வேறு யார்? மாட்சிமை மிக்க சோனியாவை தவிர, வேறு யாராக இருக்க முடியும்

ஆக பதவியில் இருப்பவர்கள் தொடர்வதும், விலகுவதும், அரசியல் சாசனத்திற்குப் புறம்பான நிழல் நிர்வாகப் பதவியை வகிக்கும் ஒரு நபரிடம் இருக்கிறது. அவர் தனக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொள்வார். ஆனால், எதிலும் மாட்டிக் கொள்ள மாட்டார். அவருக்குக் கண்டனம் கிடையாது, தண்டனை கிடையாது. பிரதமரின் நேரடி ஆட்சி என்றால் அவர் சி.பி.ஐ., தலைவரை இந்நேரம்  பதவி விலகச் சொல்லியிருப்பார். ஆனால் தானே ஒரு பினாமி என்பதால், அவரால் அப்படிச் செய்ய முடியவில்லை. பாவம்.

இப்படி, ஒவ்வொன்றிற்கும் சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தைப் பெறும் அவலமான நிலைமை, இந்திய அரசுக்கு இதுவரை வந்ததில்லை.

என்ன கேவலம் இது என்று மக்கள் பதைக்கின்றனர். ‘பாவம் ஓரிடம், பழி வேறிடம்’ என்ற இந்த ஆட்சி முறையை எதிர்த்து அரசியல் வாதிகள், சமூக சிந்தனையாளர்கள் வீரியமாக எழுதாமல் இருப்பதும், பேசாமல் இருப்பதும், சோனியாவுக்கு வசதியாக இருக்கிறது. அரசியல் நிர்வாகத்தில் இவரது இருட்டுத் தலையீட்டிற்குப் பிறகே, இவ்வளவு அலங்கோலம் நிகழ்ந்திருக்கிறது. இந்த அவலமான, கேவலமான நிலையில் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டுமென்று தான் எதிர்கட்சிகள் கூச்சலிட முடிகிறதே ஒழிய, சோனியா அரசியலிருந்து விலக வேண்டுமென்று, கூப்பாடு போட முடிவதில்லை. இந்த நிலையில் நாட்டு மக்கள் என்ன செய்ய வேண்டும்?

சோனியாவே அரசியலிலிருந்து விலகு என்று, முழக்கம் எழுப்பி, அவரை நேரடி மறைமுகப் பதவிகளிலிருந்தும், பொறுப்புக்களிலிருந்தும் விலகச் செய்ய வேண்டும். அதை காங்கிரஸ் அல்லாத கட்சிகள் செய்ய முன் வரவேண்டும். இதற்காக நாடு தழுவிய  போராட்டம் நடைபெற வேண்டும். இதைத் தவிர, மீட்சிக்கு வேறு வழியில்லை.

குற்றங்களை விசாரிக்க வேண்டிய சி.பி.ஐ., நடுநிலை தவறி அரசியல் தலைமைக்காக செயல்படுகிறது என்று, உச்ச நீதிமன்றம் சொல்லி விட்ட பின், இந்த அமைப்பிற்கு என்ன நம்பகத் தன்மை இருக்கிறது?

பெரிய குடும்பத்தைச் சேர்ந்த முதலாளி, லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டி, சாலையில் சிலரைக் கொன்று விட்டால், அவரா ஜெயிலுக்குப் போவார்? ‘டிரைவர் காரை ஓட்டினார், அஜாக்கிரதையால் விபத்து’ என்று வழக்குப் பதிவு செய்யப்படும். டிரைவர் ரிமாண்ட் செய்யப்படுவார். உடனே, ஜாமீனில் வெளியே வந்து விடுவார். பின், நத்தை வேக விசாரணையில், ‘காரில் பழுது இல்லை, டிரைவரும் நன்றாக ஓட்டினார். செத்தவர்கள், எருமை மாடுகள் மிரட்டியதால் ஓடி வந்த போது தடுக்கி விழுந்து கார் சக்கரத்தில் சிக்கிக் கொண்டனர்’ என்று வழக்கு முடிவுக்கு வரும்.

நம் நாட்டு நிர்வாக வாகனத்தின் லைசன்ஸ், மன்மோகன் சிங் பெயரில் இருக்கிறது. ஓட்டுபவர் சோனியா என்று அனைவருக்கும் தெரியும்.  ஆனால் அவர் பிடிபட மாட்டார். அது மட்டுமல்ல, லைசன்ஸ் யார் பெயரில் இருக்கிறதோ, அவரையும் காப்பாற்றி விடுவார்.  ஆனால் விபத்துக்களின் போது சாலையில் திரளும் மக்கள், டிரைவரைத் திட்டுவர் தர்ம அடி கொடுப்பர். எஜமான விசுவாசத்திற்காக எல்லாவற்றையும் அவர் தாங்கிக் கொள்ள வேண்டும், தாங்கிக் கொண்டிருப்பார். பல திரைப்டங்களில் பார்க்கிறோமே, வடிவேலு காமெடிப் பாத்திரமாக வந்து, தர்ம அடி வாங்குவார். அது போல்  நம் பிரதமர் மன்மோகன், நம் அரசியல் நாடகத்திற்கு ஒரு காமடிப் பாத்திரம்.

இந்த மோசமான, படுபாதகமான அரசு நிர்வாகம் பாரத மாதாவுக்கு நேர்ந்துள்ள அவமானம். நாட்டை ஆண்ட முகலாயர்களும், பிரிட்டிஷ்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும், போர்த்துக்கீசியரும் இப்படி அதிகேவலமாக நிர்வாகம் செய்த தில்லை.

சி.பி.ஐ.,  எப்போதோ, எஸ்.பி.ஐ., என்று மாறிவிட்டது. அது ‘காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்’ அல்ல. ‘சோனியா பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்!’ காங்கிரஸ்காரர்கள் இப்படிப்பட்ட அயல், நிழல் தலைமை பற்றி வெட்கப்படுவதில்லை. இதற்காக, நாம் காங்கிரஸ்கார ர்களின் தேச பக்தியை சந்தேகிக்க வேண்டாம். அவர்களுக்கு தேசபக்தி இருக்கிறது.. ஆனால் , அவர்களது தேசம் இந்தியா அல்ல, இத்தாலி. ஆனாலும் இந்தியா, காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் சொந்தம் என்று சொல்ல முடியாது அல்லவா? நாமும் இருக்கிறோமே.

மானமுள்ளள மக்களாகிய நாம் ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்வது என்று புரியாத நிலையில், சோனியாவின் மறைமுக நிர்வாகத்தை நினைத்து நோந்து போகும்போது, மகாபாரதத்தின் திரௌவ்பதி துகிலுரிப்பு நிகழ்சியே நினைவுக்கு வருகிறது. பாஞ்சாலி சபதத்தில் பரிதவித்த பாடுவார் பாரதியார்.

‘நீண்ட கருங்குழலை நீசன் பற்றி முன்னிழுத்துச் சென்றான். வழி நெடுக மொய்த்தவராய், என்ன கொடுமை இதுவேன்று பார்த்திருந்தார். ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரமாமே? வீரமிலா நாய்கள் விலங்காம் இளவரசன்’.

பாரதியார் இகழ்ந்து பாடிய, உரைக்க முடியாத அளவுக்கு, நாட்டை கீழ்மையில் தள்ளியுள்ளவர்கள், சோனியாவின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளவர்கள். விதியே, விதியே, என் செய நினைத்தாய் தமிழ் ஜாதியை… என்று பாரதியார் அங்கலாய்த்தார்.

‘தமிழ் ஜாதியை’ என்பதை இப்போது, ‘இந்திய ஜாதியை’ என்று மாற்றிக் கொள்ளலாம். கோரமான விதியின் பிடியிலிருந்து நம்மை மீட்டுக்கொள்வது, மக்களாகிய நன் கையில் தான் இருக்கிறது. எதிர் வரும் தேர்தலில் சோனியாவையும், காங்கிரஸ்சையும் விலக்கி வைப்பது தான் ஒரே வழி. செய்வோமா? இல்லையென்றால், மக்களே, நாம் இப்படி பாட வேண்டியிருக்கும். அதற்குத் தயாரா?

பாரதம்-இது நம் பாரதம், பாண்டவர்கள் இல்லாத கவுரவர்களின் பாரதம், இது நவ பாரதம், இங்கே தேசப் பாஞ்சாலியின் தீனக்குரலை கேட்டு, எப்போது வருவார் கண்ணபிரான், துச்சாதனர்கள் வென்ற பிறகா?

பாஞ்சாலியைக் காப்பாற்றிய கண்ணபிரானே, நீ பாரத மாதாவை காப்பாற்று வாயா?

நன்றி தினமலர்--------------------------------------------------------------தொடரும்)