Friday, August 10, 2012

‘உங்கள் சொந்த இல்லம்’







போலீசாருக்கு ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டம்.
திருப்பூரில் பணிகள் துவக்கம்.

திருப்பூர் மாவட்டத்தில், போலீசாருக்கு ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த மே 5ம் தேதி சட்டசபையில், போலீசாருக்கு சொந்தமாக 36 ஆயிரம் வீடுகள் கட்டித்தரும் ‘உங்கள் சொந்த இல்லம்’  திட்டத்தை அறிவித்தார்.  இத்திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்தில்  முதன் முறையாக இடம் தேர்வாகியுள்ளது.

திருப்பூர் – ஊத்துக்குளி ரோட்டில் பெரியபாளையம் கிராமத்தில் ஶ்ரீமுகுந்த மாரியம்மன் அரசு மரத்தடி வினாயகர் கோவிலுக்கு சொந்தமான 13.25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தில், காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் அனைத்து வசதிகளுடன் கூடிய, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. முதல் நிலைக்காவலருக்கு 650 சதுர அடி பரப்பளவிலும், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்களுக்கு 850 சதுரஅடி பரப்பளவிலும், டி.எஸ்.பி களுக்கு1.100 சதுர அடி பரப்பளவிலும். வீடுகள் கட்டப்படுகின்றன.விருப்பம் உள்ள போலீசார் விண்ணப்பம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சொந்த வீடு தேவையுள்ளவர்கள், முன்பணமாக 15 ஆயிரம் ரூபாயிக்கு வங்கி ‘டி.டி’ கொடுத்து முன் பதிவு செய்ய வேண்டும்.வட்டியில்லா கடனாக வழங்கள்பட்டு, வீட்டுக்கான தொகை சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும், ஓய்வு பெற உள்ளவர்கள் பயன் பெற முடியாது எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தினமலர் 10-8-2012.

----------------------------------------------------------------------------(தொடரும்)


Thursday, August 9, 2012

ஊமையர்குரல்.



கருப்பண்ணன் தேவாரம் ஐ.பி.எஸ் உடன்.

ஊமையர்குரல்.

சிறப்பிதழ்-6-8-2012-------------------------------------------------------------------------ஆகஸ்ட் 2012.
-------------------------------------------------------------------------------------------------------------------------------


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத விழிப்பணர்வென்று சங்கே முழங்கு!
சங்கம் சேர் லஞ்சம் எதிர் யாதும் ஊரே யாவரும் கேளிர்
எப்பொருள் யார்யார் வாய்க கேட்பினும், எத்தன்மைத்தாயினும் – அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!

உள்நாட்டு முட்டாள்கள், நாசகாரரிடமிருந்து நாட்டைக் காக்க-கடமை செய்து இன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கு வீர வணக்கம்!

விடுதலை பெற்ற ஜனயாக நாட்டில் ஆயுதமின்றிக் காரியங்கள் ஆற்றமுடியும், அப்படிதுதான் செய்ய முடியும்.மக்கள் நலனுக்காகப் போராடினாலும் கத்தி எடுத்துப் போராடுவதும் சட்டத்தைக் காக்கும் காவலர்களைக் கொன்று அவர் குடும்பங்களை அனாதைகளாக்குவதும் முட்டாள் தனத்தின் உச்சம்.

உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே தன் அகிம்சை ஆயுதத்தால் – வீழ்த்தி இந்தியாவை விடுவித்தவர் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி.அதனால் அவர் பெரியார் அல்லது மகாத்மா என்று சமஸ்கிரதத்தில் அழைக்கப்பட்டார்.

அவர் தலைமையை லட்சோப லட்சம் இந்தியர்கள், கோடான கோடி இந்தியர் – ஆதரித்து நின்றால் அவரின் அகிம்சைப் போரில் வெள்ளையர் தோற்றோடினர்.சுதந்திரம் அவர்கள் கொடுக்கவில்லை.அவர்களின் சொத்துக்களை வணிகங்களை நிலைநாட்டிக் கொள்ள, தாங்களாகச் சுதந்திரம் கொடுத்ததாக நாடகமாடினர்.

‘சாதி மரம் பார்க்காதே, மண்ணில் பிறந்தவர்கள் அனைவரும் ஆண்டவனின் குழந்தைகள்’ என்று போதித்த அந்த மகான், விடுதலை விழாவில் பங்கேற்காமல், கல்கத்தாவில் நவகாளியில் தாக்கப்பட்ட முஸ்லிம் சகோதர்களைக்காக்க தன் இன்னுயிர் தரத்தயார் என்று குறுக்கே நின்று இஸ்லாமிய சிறுபான்மையைக் காத்தவர். இறுதியில் தான் பிறந்த மண்ணிலேயே தலையில் பிறந்ததாகப் பீத்திக் கொள்ளும் பார்பன மதவெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்தவர்.

அந்த புனித மண்ணில் அமைதி நிலவ தம் பெண்டு பிள்ளைகளை விட்டு, விழாக் காலங்களிலும் தெருவில் நிற்பவர்கள் காவலர்கள்.உலகமே நிம்மதியாகத் தூங்க, நாம் இரவெல்லாம் கண்விழிக்கின்றோம்.கலவரம் என்றால், 8 மணிநேரக்கணக்கின்றி, தூக்கமின்றி, ஓய்வின்றி 24 முதல் 48 மணி நேரம் கூட கண்விழித்துப் பணியாற்றுகிறோம்.

அப்படி நக்சலைட்டுகளைப் பிடித்து வந்த ஆய்வாளர் பழனிசாமி மற்றும்இருகாவலர்கள் ஏசுதாஸ், முருகேசன் ஆகியோர்கள் கடந்த 6-8-1980 அன்று திருப்பத்தூரில் வெடிகுண்டுக்கு ஆளாகி பெண்டு பிள்ளைகளைத் தவிக்க விட்டு விண்ணுலகம் எய்தினர். அவர்களுக்கு எம் வீர வணக்கம்! அந்தக் கொடூரர்கள் கூட்டத்தை, மற்றும் சமூக விரோதிகளான காடுதிருடிகள் கூட்டங்களைத் தேடித் தேடி அழித்த – தான் அழியாமல் தப்பிய மூளை வலுவுள்ள நம் தலைவர் தேவாரம் ஐயா அவர்கள் இந்த விழாவை ஆண்டு தோறும் திருப்பத்தூரில் நடத்துவது மிகவும் பெருமையான விசயம். அவர் நீடூழி வாழவும் இன்றைய தலைமுறைப் போலீசாரும் அடுத்த தலைமுறைப் போலீசாரும் அவரைப் போன்ற தேச பக்தியும் மூளைத்திறனும் கொண்டவர்களாக தியாகம் புரியத் தயங்காதவர்களாக இருக்க காளி அருள் புரிவாளாக! 

-----------------------------------------------------------காளிமைந்தன் வீ.செ.கருப்பண்ணன்.
தொடரும்.

Wednesday, August 1, 2012

இடமாற்றத்துக்காக போலீசாரிடம் லஞ்சம்:

இடமாற்றத்துக்காக போலீசாரிடம் லஞ்சம்: போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் தீக்சித்துக்கு டெல்லி-ராஜஸ்தானில் சொத்துக்கள்
இடமாற்றத்துக்காக போலீசாரிடம் லஞ்சம்: போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் தீக்சித்துக்கு டெல்லி-ராஜஸ்தானில் சொத்துக்கள்
சென்னை, ஆக 1-

சென்னை கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்த அபிஷேக் தீக்சித் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டானார்.

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்னர் இவர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை கமாண்டோ பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். மாறுதல் உத்தரவு போடப்பட்ட பின்னர், அபிஷேக் தீக்சித், கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் 87 பேரை 5 நாளில் அவசரம் அவசரமாக மாற்றியுள்ளார்.

போலீசாரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, இந்த பணியிட மாற்றத்தை அவர் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பர்கூரில் பணிபுரிந்து நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் உடந்தையாக இருந்ததாகவும் புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் மீது கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்கு பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி போலீஸ் சூப்பிரண்டு பங்களா மற்றும் அபிஷேக் தீக்சித்தின் சொந்த ஊரான உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அவரது வீடு, சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரனின் வீடு உள்பட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில், ஏராளமான தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், சிக்கின. போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் தீக்சித், டெல்லி, ராஜஸ்தானிலும் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீட்டு வசதி வாரியம் செயல்படுவதுபோல டெல்லியில், டெல்லி நகர மேம்பாட்டு ஆணையம் (டெல்லி டெவலப்மெண்ட் அத்தாரிட்டி) செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் மூலம் டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதில் ஒரு வீட்டை வாங்குவதற்காக அபிஷேக் தீக்சித் லட்சக்கணக்கான ரூபாயை அட்வான்சாக கொடுத்துள்ளார். இதேபோல ராஜஸ்தானில் சொத்துக்களை வாங்கியதற்கான ஆவணங்களும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ளன.

இந்த ஆவணங்கள் இந்தியில் உள்ளன. இதனை போலீசார் படித்துப் பார்த்து வருகிறார்கள். இது தவிர ஆயுள் காப்பீட்டு ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவையும் சிக்கியுள்ளன. இவை எல்லாவற்றையும் ஆய்வு செய்து முடிப்பதற்கே 5 நாட்களுக்கு மேலாகும் என்று சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னைக்கு மாறுதலாகி வந்த பின்னர் சூப்பிரண்டு அபிஷேக் தீக்சித், சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் பண்ணை வீட்டில் 2 நாட்கள் தங்கியுள்ளார். இங்கும் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பண்ணை வீட்டில் அவருடன் யாராவது தங்கினார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் பண்ணை வீட்டு ரகசியங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. ஐ.பி.எஸ். அதிகாரியான அபிஷேக் தீக்சித் பற்றி தினமும் வெளியாகும் தகவல்களால் அவருக்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர். 
 
: