Friday, May 11, 2012

காவல் துறைக்கோர் பெருமை.



ஆர்.நடராஜ். ஐ,பி.எஸ்.


காவல் துறைக்கோர் பெருமை.                      

தமிழக அரசு புதுமையான அதிரடி நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) புதிய தலைவராக காவல் துறையில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஆர்.நடராஜை (ஐ.பி.எஸ்.)நியமித்திருப்பது காவல் துறைக்கோர் பெருமை. இதிலிருந்து அவரது நேர்மையான செயல்கள், நம்பிக்கைக்குப் பாத்திரம், லஞ்ச ஒழிப்பிற்கோர் நல் மதிப்பு, கெட்ட பெயருள்ள இந்த துறைக்குத் தலமை ஓர் வரப்பிரசாதம், நேர்மையான தேர்வு முறைகள் புதிய ஆழுமைத் திறன்கள் எதிர் பார்த்திருக்கும் மக்களுக்கு நேர்மையான திரமையான ஊழலற்ற வெழிப்படையான செயல் பாட்டை எதிர்பார்க்கிறார்கள்.  தலைமையேற்று அவர் மக்களுக்காகக் கூறியிருப்பது.

“அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நிறைய சீர்திருத்தங்களைக் கொண்டு வர உள்ளேன். முதலில், தேர்வாணையத்தைச் சூழ்ந்துள்ள புகைமண்டலம் அகற்றப்படும். நாணயம் பெறாத. நாணயமான சேவையாக தேர்வாணையம் செயல்படும். வெளிப்படையான நிர்வாகம் செய்யப்படும்.

எழுத்துத் தேர்வு எப்போது, நேர்முகத்தேர்வு எப்போது, முடிவுகள் எப்போது என்ற விவரங்கள் அனைத்தும் கால அட்டவணையாக தயாரித்து வெளியிடப்படும். தேர்வு முறை, பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் ஆகியவை
இணையதளத்தில் வெளியிடப்படும். அரசுப்பணியாளர்களின் பணிப்பொறுப்புகளை கருத்தில் கொண்டு, தேர்வுக்கான பாடத்திட்டங்களில் உரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும். தேர்வர்களின் பகுத்தாய்வுத்திறனை ஆராயும் வகையில் தேர்வு முறையல் மாற்றம் கொண்டுவரப்படும். தேர்வு முடிந்த பிறகு, இணையதளத்தில்  விடைகள் வெளியிடப்படும். தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் விடைத்தாள்களை சம்பத்தப்பட்ட தேர்வர்கள் பார்வையிடலாம். தேர்வு நடைபெறும் அறைகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். நேர்முகத்தேர்வுகள் வெப் கேமரா மூலம் பதிவு செய்யப்படும். தேவைப்பட்டால், வீடியோ பதிவை தேர்வர்கள் காணலாம். தேர்வாணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் கனிணியில் பதிவு செய்யப்படும்.

முடிவுகள் தாமதமாவதற்கு சில நியானமான காரணங்கள் உள்ளன. எழுத்துத் தேர்வில் இரண்டு முறை மதிப்பீடு
செய்யப்படுகிறது. அதில் வித்தியாசம் அதிகமாக இருந்தால் மூன்றாவது மதிப்பீட்டுக்கு அனுப்பப்படுகிறது. தேர்வு எழுதியவருக்கு முழுமையான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற விதிகள் உள்ளன. ஆனாலும் கூட இந்த நடைமுறைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தாமதங்களைத் தவிர்த்தாலே பெரும்பாலான பிரச்சனைகளைத் தவிர்த்துவிடலாம்.

ஆணையத்தில் கொண்டுவரப்படும் சீர்திருத்தங்கள், தனிநபர்கள்ச் சார்ந்த தாக அல்லாமல் நிரந்தரமாக நீடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். எனக்குப் பணிகாலம் குறைவாக இருந்தாலும்கூட, எடுத்திருக்கிற பணியில் அதிகநேரம் செலவிடுவதாலும், அக்கரையோடும் ஆர்வத்தோடும் செயல்படுவதாலும் பத்தாண்டுகளில் செய்யக்கூடிய காரியங்களை என்னால் ஒரே ஆண்டில் செய்துவிட முடியும்.

குறுக்கீடு, நல்லமுறையில் தலையிடுதல் என இரண்டு விதங்கள் உள்ளன. நல்ல நோக்கத்திற்காக ஒரு  தலையிட்டு நல்லது கெட்டது என்று சொல்வதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு. அதைக் குறுக்கீடு என்று சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நல்ல நோக்கத்திற்காக தலையிடுவதை வரவேற்பேன். குறுக்கீடுகளை அனுமதிக்க மாட்டேன்.

தேர்வாணயத்திலேயே காலிப்பணியிடங்கள் உள்ளன. அந்த இடங்களில் தற்காலிக பணியாளர்களை நியமித்திருக்கிறோம். ஒரு பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் அரசை அணுக வேண்டியுள்ளது. உரிய முயற்சிகளைச் செய்தால் காலிப்பணியிடங்களை நிரப்பலாம். அதற்கான நடவடிக்கை எடுப்போம்.

தேர்வாணயத்தின் இணையதளத்தை விரிவுபடுத்தி மக்களூடன் கலந்துரையாடக்கூடிய வகையில் அதை மாற்றப் போகிறோம். அதே போல, தேர்வு குறித்த தகவல் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வதறிகாக தேர்வாணயத்தில் ‘தகவல் அறியும் மையம்’ ஒன்றையும்  ஏற்படுத்த உள்ளோம். அங்கு, கட்டணமில்ல தொலைபேசி எண்ணும் வழங்கப்படும். இளைஞர்கள் அதிகளவில்
ஃபேஸ்புக் பயன்படுத்திகிறார்கள். எனவே, தேர்வாணையத்திற்க்கு ஃபேஸ்புக்கிலும் ஒரு கணக்கு ஆரம்பிக்கலாமென்று யோசித்திருக்கிறேன். இது தேர்வாணயத்திற்கும் தேர்வு எழுதும் இழைஞர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

இது போன்ற நடவடிக்கைகளால் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறேன். எனவே, நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் போட்டித்தேர்வுகளில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன்.”

-------------------------------------------------------(தொடரும்)

Wednesday, May 2, 2012

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்





சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்..

சமூக அந்தஸ்த்தின் உச்ச நிலையில் இருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு தேவையான தகுதி நிலைகள் பற்றிய தகவல்கள் இதோ

கல்வித்தகுதி

*அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (குறைந்த பட்சதகுதி இளநிலைப் பட்டம்.)
*இளநிலைப் பட்டப்படிப்ப்பின் இறுதித் தேர்வு எழுதப் போகிறவர்கள் அல்லது தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுத் தொகுதியின் ஆரம்ப நிலையான பிரிலிமினரி தேர்வை எழுதலாம்.

*ஆனால், மெயின் தேர்வு எழுதச்செல்லும் முன்பாக, இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றைக் காண்பிக்க வேண்டும்.

*அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் முறை (professional) மற்றும் தொழில் நுட்பக்கல்வித் தகுதியை வைத்துள்ளவர்களும், இந்தத்தேர்வை எழுதலாம்.

தேசிய அடையாளத் தகுதி.

*இந்தியக் குடிமக்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வாக முடியும்.

*மேலும், கடந்த, 1 ஜனவரி, 1962ம் ஆண்டிற்கு முன்பாக நேபாளம், பூடான் மற்றும் திபெத் ஆகியநாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிக்கும் நோக்கத்துடன் வந்தவர்கள் மற்றும் பர்மா, எத்தியோப்பியா, கென்யா, பாக்கீஸ்தான், இலங்கை, உகாண்டா, தான்சானியா, வியட்நாம், மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாகத் தங்கும் நோக்கத்துடன் குடிபெயர்ந்துள்ள இந்திய வம்சாவழி மக்கள் ஆகியோர், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, IAS மற்றும் IPS
ஆகலாம்.

வயது தகுதி.

*சிவில் சர்வீஸ் தேர்வெழுதுபவர் 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

*பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள், 30 வயது வரை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.

*OBC பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 33 வயது வரை முயற்சி செய்யும் வாய்பளிக்கப்படுகிறது.

*SC/ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 35 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.

*மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.

தேர்வெழுதுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள்.

*பொதுப்பிரவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 4 முறை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.

*இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (OBC) சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 7 முறை முயற்ச்சி செய்யலாம்.

*SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள், 35 வயது வரை, எத்தனை முறை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.

விண்ணப்ப நடை முறைகள்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஒருவர், அதற்கான விண்ணப்பத்தை,  தகவல் குறிப்பேட்டுடன் பெற வேண்டும். அதை எலக்ட்ரானிக் முறையில் ஸ்கேன் செய்ய முடியும். மற்றும் நாட்டிலுள்ள அனைத்து முக்கிய தபால் நிலையங்களிலும் பெற முடியும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, அதற்கான Acknowledgement அட்டையுடன் Secretary, Union Public Service Commission, Dholpur House, New Delhi-110011,       
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

------------------------------------------------(தொடரும்)