Saturday, December 12, 2009

உங்கள் வீட்டில் திருட்டா?



முன்னாள் காவல் துறை அதிகாரிகள் சங்கம் கோயமுத்தூர்.
குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் - குறிப்புரை.

1. உங்களது வீட்டினை பூட்டி விட்டு வெளியூர் செல்லும்
பொழுது உங்களுக்குரிய காவல் நிலையத்தில் தகவல்
தெரிவித்து விட்டுச் செல்லவும்.

2. இரவு நேரத்தில் வீட்டின் முன் சிறிய விளக்கு எரியுமாறு
எற்பாடு செய்து விட்டுச் செல்லவும்.

3. வசதியுள்ளவர்கள் வீட்டில் Burglars Alarm இருக்குமாறு
ஏற்பாடு செய்துவிட்டுச் செல்லவும்.

4. வீட்டில் உள்ள நகைகளை வங்கி லாக்கரில் வைக்கும்
பழக்கத்தை கடைப்பிடிக்கவும்.

5. சமையல் எரிவாயு, மின்சாரத்துறை, கார்ப்பரேஷன்,
தொலைபேசி துறை ஆகியவற்றலிருந்து வருபவர்களின்
அடையாள அட்டையை சரிபார்த்து அனுமதிக்கவும்.

6. பொருட்கள் விற்க வரும் நபர்களை வீட்டினுள்
அனுமதிக்காதீர்கள்.

7. தங்க நகைகளை பாலிஷ் போடுவதாக கூறும் நபர்களை
நம்பாதீர்கள்.

8. இரவு நேரங்களில் வாகனங்களை வீட்டினுள் நிறுத்தி
பூட்டி வைக்கவும்.

9. பொது இடங்களில் வாகனங்களை நிறுத்தும் பொழுது
அதனுள் விலையுயர்ந்த பொருள்களை வைத்துச் செல்லாதீர்கள்.

10. பொது இடங்களில் உங்கள் மீது நரகல் தெளித்தால், கீழே
ரூபாய் நோட்டுகளைப் போட்டு உங்கள் கவனத்தை திசை
திருப்பி பொருட்களை களவாடிச் சென்று விடுவர் எச்சரிக்கை.

11. உங்களுடன் பேச்சுக் கொடுத்து நகைகளை பெற்றுக்கொண்டு
கல், மண் போன்றவற்றை பொட்டலமாகக் கொடுத்து
ஏமாற்றி விடுவர்.

12. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு சீட்டுக் கம்பனி, தனியார்
நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள்.

13. வீட்டிற்கு அருகில் சந்தேகமான நபர்கள் குடிவந்தாலோ
அல்லது வீட்டினை நோட்டம் இட்டாலோ காவல் கட்டுப் பாட்டு
அறைக்கு (தொலைபேசி 100 க்கு) தகவல் தரவும்.

14. வேலைக்கு புதிய நபர்களை சேர்க்கும் பொழுது நபர்களைப்
பற்றி தீர விசாரித்து விட்டு நடவடிக்கை எடுக்கவும்.

15. பெண்கள் வீதியில் நடந்து செல்லும் பொழுது நகைகளை
ஜாக்கெட்டின் உட்புறம் பின்னில் சொருகி பாதுகாப்பாகச்
செல்லவும்.

16. போதிய வெளிச்சம் வந்த பின்பு பெண்கள் வீட்டிற்கு முன்
கோலம் போடவும். அப்போது சேலை முந்தானையால்
கழுத்தினை சுற்றி நகைகளை பாதுகாக்கவும்.

17. பொது இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும்
பொருட்களை வாங்கி சாப்பிடாதீர்கள். மயங்கினால் பொருட்கள்
களவு போய்விடும்.

18. இருசக்கர வாகனங்களின் அருகில் வரும் நபர்களை கண்
காணிப்பதுடன் உங்கள் நகைகளை பத்திரமாக பிடித்துக் கொள்ளவும்.
அவர்கள் அறுத்துக் கொண்டு செல்ல வாய்ப்பளிக்காதீர்கள்.

19.ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பெண்கள் நகைகளை
அணிந்து கொண்டு செல்லாதீர்கள்.

20. பைகளில் நகைகளை வைத்துக்கொண்டு பஸ்ஸில் பயணம்
செய்யாதீர்கள்.

21. ஒரு மடங்கிற்கு இரு மடங்காக பணம் தருவதாக கூறும்
நபர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கவும்.

22. வாடகைக்கு குடி வருபவர்களைப் பற்றி தீர விசாரித்து
விட்டு குடி அமர்த்தவும்.

23. வீடு அல்லது நிலப் பத்திரங்களின் நகல்களை தெரியாத
நபர்களிடம் தர வேண்டாம்.

24. வீட்டின் முன்புறம், பின்புறம் கதவுகளை திறந்து வைத்து
விட்டு டி.வி. சீரியல்களில் மூழ்கி விட்டால் வீட்டில் உள்ள
பொருட்கள் களவு போய்விடும்.

25.வாகனங்களை திருட கள்ள சாவி போடும்பொழுது சைரன்
ஒலி எழும்புமாறு உள்ள சாதனங்களை பொருத்தி
பாதுகாக்கவும்.

பொது மக்கள் இக்குறிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறோம்.


முன்னாள் காவல் துறை அதிகாரிகள் சங்கம், கோயமுத்தூர்.


3 comments:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள தகவல்கள். எல்லோரும் படிக்கவேண்டியவை. தெரிந்து, பின்பற்றவேண்டியவை.

    ReplyDelete
  3. இப்பதிவை திரட்டிகளில் சேர்த்தால் பலருக்கு உபயோகப்படுமே.. மிகவும் பயனுள்ள பகிர்வு.
    நன்றி!

    ReplyDelete